மேற்கண்ட தலைப்பைப் படித்தவுடனே உங்களுக்கு நிச்சயம் புரிந்து இருக்கும் நான் யாரைச் சொல்கிறேன் என்று. அதற்கு ஒரு உதாரணத்தை இப்போது பார்க்கலாம்.
தமிழக அரசு கேபிள் டிவி மூலமாக மாதம் 100 கோடி வருமானம் வரும்படி செய்திருக்கிறது. அதாவது கேபிள் இணைப்பிற்கு 20 ரூபாயும், லோக்கல் சானல்களுக்கு மாதம் 2 லட்சம் முதல் 2.5 லட்சம் கட்டணம் வசூல் செய்கின்ற வகையிலும் மேற்படி வருமானம் வருகிறது என்றுச் சொல்கின்றார்கள்.
20 ரூபாய்க்கு 100 கோடி என்றால் மாதம் 500 கோடி ரூபாய் பணத்தை வாரிச் சுருட்டி வந்திருக்கின்றனர் தமிழர்களின் தலைவரின் குடும்பத்தார். அது மட்டுமல்லாமல் சினிமாத்துறை மூலமாக அடைந்த பலன் கொஞ்சமல்ல.
அம்மாவின் ஆகச் சிறந்த சாதனை இது என்று சொல்லி ஆக வேண்டியிருக்கிறது. தமிழர்களுக்காக உழைக்கின்றேன் பேர்வழி என்றுச் சொல்லி இத்தனை காலம் தமிழர்களின் தலைவர் குடும்பம்(த.த.கு) அடித்த கொள்ளையை தடுத்த பெருமை அம்மாவிற்கு சாரும். கொள்ளை அடி, அதை கொஞ்சமாக அடி என்கிறது ஜன நாயகம். ஆனால் த.த.குவினரோ கொள்ளைதான் எங்கள் குலத்தொழில், ஊழல் தான் எங்கள் கொள்கை என்று ஆடியிருப்பதற்கு இது ஒன்றே சான்று. மக்களுக்கு சென்று சேர வேண்டிய பணம், தனிப்பட்ட ஒரு குடும்பத்திற்கு மட்டும் சென்று கொண்டிருந்ததை நினைத்துப் பாருங்கள். கொஞ்சம் கூட லஜ்ஜை இல்லாமல் உலகத் தமிழர்களின் ஒரே தலைவர் என்று மனம் கூசாமல் பேசுவதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.
இனி அம்மா செய்ய வேண்டியது தமிழக மக்களிடமிருந்து திருடிய பணத்தை மீட்க வேண்டும். அதை கஜானாவில் சேர்க்க வேண்டும். இது ஒன்றும் அவ்வளவு எளிதானதல்ல. திருடியே பழக்கப்பட்டவர்கள் ஜெகஜ்ஜால கில்லாடிகளாய் இருப்பார்கள். அவர்களிமிருந்து சொத்துக்களை எடுப்பதற்கு பெரிய போராட்டமே நடத்த வேண்டும். தமிழக மக்கள் அம்மாவிற்கு துணை இருப்பார்கள். இருக்க வேண்டும். இல்லையெனில் திருடப்பட்ட மக்களின் சொத்துக்களினால் சுக போகங்களில் திளைப்பார்கள்.
பொதுவாழ்க்கையில் தன் குடும்ப நலனே முக்கியம் என்று நினைத்து வாழ்ந்தவர்களின் கடைசிக் காலங்கள் என்ன் ஆனது என்பதை நாமெல்லாம் அறிவோம்.
தமிழக மக்கள் உள்ளாட்சித் தேர்தலில் வழங்கிய தீர்ப்பு இனி வரும் காலங்களிலும் தொடர வேண்டும். மக்களுக்கு மறதி இருக்கும் வரை, தீயசக்திகள் மக்களை ஏமாற்ற முற்படும். திருட்டுக்கூட்டத்தாரின் வாய்ச்சாலங்களில் மயங்காமல் வெகு ஜாக்கிரதையாக தமிழ் நாடு இருக்க வேண்டியது அவசியம்.
- பஞ்சு
அனாதி பதிப்பித்தது.