இரக்கமற்ற வங்கிகளும் அதன் கொள்ளைகளும்

December 29, 2010

அன்பார்ந்த அனாதி வாசகர்களே,

இதோ ஒரு பதிவர் எழுதிய ஒரு கட்டுரையை படித்துப் பாருங்கள். மக்களைப் பற்றிக் கொஞ்சம் கூட சிந்திக்காமல், தனி மனிதனின் பொருளாதாரத்தை மட்டுமே உயர்த்தக்கூடிய வங்கிகள் செய்யும் அக்கிரமச் செயல்களை உதாரணத்துடன் பட்டியலிட்டுள்ளார் இந்த வாசகர். உலகத்திற்கே அச்சுறுத்தலாய் இருக்கும் இந்த வங்கிகளை உலக நாடுகள் உடனடியாக மூட வேண்டும். மக்கள் பணத்தை திரும்ப ஒப்படைத்து, வங்கிகள் நடத்தும் இந்த வகையான பிசினஸ்ஸை இழுத்து மூட வேண்டும். செய்யுமா உலக நாடுகள் ????? மக்களா இல்லை தனி மனிதனா என்பதை உலக நாட்டுகளின் தலைவர்கள் முடிவு செய்யவேண்டும்.

http://tamilfuser.blogspot.com/2010/12/blog-post_27.html

- பஞ்சரு பலராமன்


தொட்டுக்கொள்ள – 1

அக்டோபர் 22, 2010

அரசியல் தொடர்புகள் உடைய நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொல்லிய சில சம்பவங்கள் ஆச்சரியமாய் இருந்தது.

பதிமூன்று வயதிலேயே மாணவர் மன்றம் என்ற அமைப்பைத் துவக்கியவர் கலைஞர் என்றார். ஒவ்வொரு அப்பாக்களும் தன் மகன் கலெக்டராக ஆக வேண்டும், எஞ்சினியராக வேண்டுமென நினைப்பார்கள். ஆனால் திரு முத்துவேலர் அவர்கள் தன் மகனை எப்படி வளர்த்திருக்கிறார் பாருங்கள் என்றுச் சொன்னார்.  ஆக முத்துவேலர் அவர்கள் வெகு தெளிவாக திட்டமிட்டு கலைஞரைத் தலைவராக வர,வளர்த்திருக்கிறார் என்றும் சொன்னார். ஆச்சரியம்தான்.

தமிழக காவல்துறையில் போஸ்டிங் பிரச்சினை இப்போது உச்ச நீதிமன்றம் வரையிலும் சென்று விட்டது. ஆட்சிக்கு வேண்டியவர், விரும்புவர், விரும்பாதவர் என்று ஆரம்பித்தால் சீனியாரிட்டி என்ற விதி இல்லாமல் போய் விடும். இது அதிகாரிகள் மட்டத்திடையே மன உளைச்சலைக் கொடுத்து விடும். ஆட்சியாளர்கள் இது பற்றிக் கொஞ்சமேனும் சிந்திக்க வேண்டும். பாகுபாடு தேவையில்லை.

படிக்காதவர்களால் ஆக்சிடெண்டுகள் ஏற்படுகின்ற என்றுச் சொல்லி, எட்டாம் வகுப்பு முடித்திருந்தால் தான் டிரைவிங் லைசென்ஸ் என்ற சட்ட திருத்தம் தேவையற்றது. படித்தவர் மட்டும் தான் டிரைவராக வேண்டுமென்றால் இதே போல டிகிரி படித்தவர் மட்டுமே அரசியல்வாதியாக வர வேண்டுமென்று சட்டம் கொண்டு வரலாம். சாதாரண கார் ஓட்டுவதற்கே படிப்புத் தகுதி வேண்டுமென்றால், ஆட்சி செய்ய நல்ல படிப்பு அல்லவா வேண்டும். யாராவது பொது நல வழக்கு வாதிகள் ஒரு வழக்கை நீதிமன்றத்தில் தட்டி விடக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம்.  படித்தவர்கள் செய்யும் ஆக்சிடெண்டுகள் தான் அதிகம். அதிலும் குடிபோதையில் மிக அதிக ஆக்சிடெண்டுகள் நடக்கின்றன. இது ஒரு துக்ளக் சட்டம்.

அறக்கட்டளை என்பது மக்களுக்கு சேவை செய்ய துவக்குவது. பொது மக்கள் சேவைக்கென்று துவக்கப்பட்டு, அதன் கணக்கு வழக்குகள் சரியாகப் பராமரிக்கப்படுகிறதா என்று அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அது எப்படி தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என்றே தெரியவில்லை. ராஜீவ் காந்தி அறக்கட்டளை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என்றுச் சொல்லி இருக்கிறார்கள். முரண்பாடுகளின் மொத்த உருவமாக தகவல் உரிமைச் சட்டம் திகழ ஆரம்பிக்கிறது.  ஜன நாயகத்தின் குரல்வளையை அதிகாரம் நெறிக்கின்றது போலும்.

காமன் வெல்த் போட்டியில் நடைபெற்ற ஊழலை பத்திரிக்கைகள் வாயிலாக தெரிந்து கொண்டதால் நடவடிக்கை எடுக்கிறார்கள். பத்திரிக்கைகள் சொல்லவில்லை என்றால் யாரும் எதுவும் பேசமாட்டார்கள். சாதாரண ஊழலுக்கே கைது நடவடிக்கைகள் பாயும். கோடிக் கணக்கில் ஊழல் செய்தவர்களை ஒப்புக்கேனும் கைது செய்யவில்லை.  இன்னும் அவர்கள் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். ஊழல் செய்த பணம் வேறு அவர்கள் கையில் இருக்கிறது. சாட்சிகளைக் கலைத்து விடக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம். மேற்படிச் சம்பவங்களைப் பார்க்கும் போது, இந்த ஊழல் பிரச்சினை ஊற்றி மூடப்படும் என்றே தோன்றுகிறது. காங்கிரஸ் ஆட்சியின் மைல்கல் இது என்றே தோன்றுகிறது.

- பஞ்சரு பலராமன்


இந்தியாவின் கஜானா காலி காங்கிரஸின் கோர ஆட்சி

ஜூலை 6, 2010

இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் அக்கப்போருக்கு கல்கண்டு தலையங்கமே சாட்சி. காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் அவலத்தை விபரமாக எழுதியிருக்கிறது கல்கண்டு. நன்றி கல்கண்டு மற்றும் ஆசிரியர் அவர்களுக்கு.

- பஞ்சரு பலராமன்

விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியுமா?

மன்மோகன்சிங் ஆட்சியில் பெரிய மாற்றங்களை மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.ஒரு பொருளாதார மேதை பிரதமராக இருப்பதால் நாட்டு மக்கள் வளமாக வாழ முடியும்.விலைவாசிகள் குறையும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டன.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் பதவி ஏற்று ஓராண்டு காலம் முடிவடைந்த நிலையில் நாட்டில் அமைதி இல்லை;தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் ஒரு பக்கம்; மாவோயிஸ்டுகளை அசைக்க முடியவில்லை ஆகிய பிரச்னைகளுடன் விலைவாசிகளும் கடுமையாக ஏறி வருகின்றன என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் இல்லை.

இந்த ஆண்டு பருவமழை பொய்க்காது குறிப்பிட்ட மாதங்களில் பெய்தால் விவசாயப் பொருட்கள் அமோகமாக விளையும்.விலைவாசிகள் தன்னால் இறங்கும்என்றெல்லாம் பேசி வந்தார் பிரதமர் மன்மோகன். நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் இதே கருத்தை வெளியிட்டார்.

ஆனால் நடந்தது வேறு. பருவமழை நேரப்படி துவங்கவில்லை. மேற்கு மலைத் தொடரை ஒட்டிய கேரளாவில் மட்டுமே பருவமழை தவறாது பெய்யத் தொடங்கியது.

ஆனால் இந்தியாவின் பெருவாரியான மாநிலங்களில் பருவமழை பொய்த்துவிட்டது! பருவநிலை ஆராய்ச்சியாளர்கள் கூட பருவமழை எப்போது வரும்.அது ஏன் பொய்த்து விட்டது என்பதைச் சரியாகக் கண்டுபிடித்துச் சொல்ல முடியவில்லை.

இந்திய மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கினர் விவசாயிகள்.இலட்சக்கணக்கான கிராமங்களைக் கொண்ட இந்தியாவில் விவசாயம் செய்பவர்களும் மிக அதிகம்.பருவமழை பொய்க்கும்போது இவர்கள் உணவு தானியங்களை உற்பத்தி செய்வது குறைந்து போவதுடன், நாட்டில் உணவுத் தட்டுப்பாடு வருமோ என்ற அச்சத்தையும் உண்டாக்கி வருகிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கஜானாவைக் காலி செய்து கொண்டிருக்கிறது என்பது பா.ஜ.க.வின் தலைவர் நிதின்கட்காரியின் குற்றச்சாட்டு.

மத்திய அரசு பெரும் பணத்தை வீண்செலவுகளாகச் செய்து கொண்டிருக்கிறது.முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்தவில்லை என்பது பா.ஜ.க.வின் கணிப்பு.

விவசாயிகள் வங்கியில் வாங்கிய கடன்களை மத்திய அரசு ரத்து செய்ய 58000 கோடி ரூபாய் தேவைப்பட்டது. சென்ற பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு விவசாயிகளின் கடன்களை ரத்து செய்தது அவர்களுடைய வாக்குகளைப் பெறத்தான் என்பது அனைவருக்கும் தெரியும்.

கடன்களை ரத்து செய்தால் மட்டும்,விவசாயிகள் உயர்ந்துவிட மாட்டார்கள் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்து. விவசாயத்துறையை மேம்படுத்த விவசாயிகளுக்கு மானியம் வழங்க, புதிய சலுகைகளை வழங்க அரசு திட்டம் தீட்டவில்லை என்பதுதான் இன்றைய நிலைக்குக் காரணம்!

விவசாயிகள் பருவமழையை மட்டும் நம்பியிராமல் மாற்று வழியில் எப்படி நிலத்தடி தண்ணீரைப் பெற முடியும்.,நதிகளை இணைத்து தண்ணீர் பற்றாக் குறையைச் சமாளிக்க வழி என்ன என்பதையெல்லாம் சிந்திக்கத் தவறிவிட்டது மத்திய அரசு.

உணவுப்பொருட்களின் உற்பத்தியைப் பற்றிக் கவலைப்படாமல் மற்ற பொருட்களின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வந்திருக்கிறது.

உதாரணமாக, அந்நிய முதலீடுகளை பெரிய அளவில் வரவேற்றதால் தொழிற்சாலைகள் பெரிய அளவில் தோன்றியிருக்கின்றன. எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் கார்கள் உற்பத்தி ஆகியவைகள் அதிக அளவில் பெருகி சாதனைகளைச் செய்து வருகின்றன.

உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வெகுவாக உயர்ந்து விட்டன என்பதால், இந்தியாவும் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

உலகின் சில நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தாலும் இந்தியா பொருளாதார நெருக்கடியில் இல்லை என்ற மாயையை உருவாக்கிவிட்டது மன்மோகன்சிங் அரசு.

அதிக அளவில் பொருட்களை உற்பத்தி செய்தால் விலைவாசிகள் தன்னால் குறையும் என்ற சிந்தனையுடன் செயல்பட்டது மத்திய அரசு.

இதன் விளைவாக அந்நிய முதலீடுகள் அதிகமாயின. இந்தியாவில் முதலீடு செய்தால் பெரிய அளவில் பணம் சம்பாதிக்க முடியும் என்று வெளிநாட்டு நிறுவனங்கள் நினைத்து செயல்பட்டன.

இதனால் ஆடம்பரப் பொருட்கள் உற்பத்தி வேகமாகப் பெருகியது. பன்னாட்டு நிறுவனங்கள் பல கார்களை அதிக அளவில் உற்பத்தி செய்யத் தொடங்கின.போட்டியின் காரணமாக கார்களின் விலைகள் குறைந்தன.

கார்களையும்,எலக்ட்ரானிக் சாதனங்களையும் வாங்க நடுத்தர வர்க்கத்தினரும் விரும்பினார்கள். பொதுத்துறை வங்கிகள் மட்டுமின்றி தனியார் வங்கிகளும் தாராளமாகக் கடன்களை குறைந்த வட்டியில் விற்கத் தொடங்கின.

கார்களை வாங்கவோ,வீடுகள் அல்லது அடுக்குமாடிகளை வாங்கவோ எட்டு சதவிகித வட்டிக்கு தாராளமாகக் கடன்களை அள்ளிக் கொடுத்தன. ஆகையால் கடன்களை வாங்கி கார்கள்.எலக்ட்ரானிக் பொருட்கள்,வீடுகள் அல்லது அடுக்குமாடிகளை வாங்க முற்பட்டார்கள்.இது ஒரு அபார வளர்ச்சியாகக் காணப்பட்டது.

ஆடம்பரப் பொருட்களை வாங்க தாராளமாகப் பணம் கிடைத்து வந்த நிலையில் மிகவும் அத்தியாவசிய உணவுப் பொருட்களையும், அன்றாடத் தேவைக்கான பொருட்களையும் வாங்க மக்களிடம் சக்தி இல்லை.

சேமிப்பில் பணம் போட்டு வைத்திருந்தவர்களுக்கு குறைந்த அளவு வட்டியே கிடைக்கத் தொடங்கியது. ஆகையால் வருவாயில் பற்றாக்குறை ஏற்பட்டது.

பெரிய நிறுவனங்கள்,அந்நிய நிறுவனங்கள்,பெரிய முதலாளிகள் தொழிலில் முதலீடு செய்து வந்தார்களே தவிர,தனியார்கள் யாரும் தொழிலில் முதலீடு செய்ய முடியவில்லை.ஆகையால் தனியார்கள் குறைந்த சம்பளத்தில் அல்லது வருவாயில் குடும்பத்தை நடத்த வேண்டியிருந்தது.

இதன் விளைவாகவே கார்களின் விலை குறைந்தாலும்,அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைய வில்லை. நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போயிற்று என்பதே உண்மை.

தேவையில்லாத பொருட்களை வாங்க வங்கிகள் கடன் தருவதாலும், வெளிநாட்டவர்கள் அதிக அளவில் முதலீடு செய்வதாலும்,பணப் புழக்கம் அதிகமாகி விட்டது.இதன் விளைவாக பணவீக்கம் ஏறிவிட்டது. அத்தியாவசியப் பொருட்களை வாங்க பெரும் பணத்தை கொடுக்க வேண்டிய ஒரு நிலை உருவாகிவிட்டது.

உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி அதிகமானால் மட்டுமே விலைகள் குறையும்.பற்றாக்குறை ஏற்படும் போது விலைகளை யாரும் கட்டுப்படுத்த முடியாது.

அந்திய முதலீட்டாளர்கள் அதிக அளவில் வருவதால் தகவல் தொழில் நுட்பத்துறையில் நிறைய புதுப்புது நிறுவனங்கள் தோன்றுகின்றன. இந்தத் துறையில் மிக விரைவில் லட்சக்கணக்கானவர்களுக்கு பெரிய சம்பளத்தில் வேலைகள் கிடைக்கும் என்பது செய்தி.

அதிக சம்பளம் பெறுபவர்கள் அதிகமாகும் போது, பணப்புழக்கம் மேலும் அதிகமாகும்.பணவீக்கம் மேலும் அதிகமாகும்.பணத்தின் மதிப்பு குறையும் போது அத்தியாவசியப் பொருள்களுக்கு அதிக விலையைக் கொடுக்க வேண்டும்.

இந்தியாவின் பெரும் பகுதி வானம் பார்த்த பூமியாகி விட்டது. பருவமழை தவறாமல் வந்தால்தான் விலைவாசிகள் குறையும் என்பதில் பொருளாதார நிபுணர்கள் உறுதியுடன் இருக்கிறார்கள்.

சமீபத்தில் தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடற்கரை ஓரத்தில் லைலா என்னும் புயல் தாக்கியபோது, பெரிய அளவில் பருவமழை வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் லைலா வலுவை இழந்து புயலுடன் கூடிய மழையாக மாறியதால் ஆந்திரா மற்றும் ஒரிஸ்ஸா மாநிலக் கடற்கரை ஓரங்கள் பெரிதும் பேரழிவிற்கு ஆளாயின! எதிர்பார்த்த அளவுக்கு லைலா பயன் தரவில்லை என்பது ஏமாற்றம்!

இந்தியாவில் நடக்கும் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்து வரும் அமெரிக்கா, இந்தியாவில் விரைவில் பருவமழை அதிகமாக வரும் என்று அறிவித்திருக்கிறது.இதன் விளைவாக அரிசி உற்பத்தி மட்டும் 99 மில்லியன் டன் அளவுக்கு விளையும் என்கிறார்கள் அமெரிக்க பருவநிலை நிபுணர்கள்.

அமெரிக்கா சொல்வது உண்மையானால் மட்டுமே விலைவாசிகள் விரைவில் இறங்க வழியுண்டு.மற்றபடி அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு மானியம் வழங்கி விலைவாசிகளைக் குறைக்க மத்திய அரசால் முடியாது. அதன் நிதியிருப்பு சாதகமாக இல்லை!


கிளாடியேட்டர் மேக்ஸிமஸ்

ஜூன் 22, 2010

அன்பு வாசகர்களே,

தொடர்ந்து தாங்கள் அளித்து வரும் ஆதரவிற்கு உங்களின் ஒருவனான குடிகாரன் நன்றியினைத் தெரிவிக்கிறான். பெண்களின் பெயரில் வரும் மெயில்கள் ஒவ்வொன்றும் அமெரிக்கா வைத்திருக்கும் அணுகுண்டு போலவே தெரிவதால், அனாதியின் அறிவுறுத்தல் படி யாருக்கும் நாங்கள் பதில் மெயில் அனுப்புவதில்லை. ஆகவே பதில் மெயில் கிடைக்காதவர்கள் மன்னியுங்கள்.

அனாதியின் பதிவுகளைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் ஒரே வரியில் இப்படிச் சொல்லலாம். எதுவும் உண்மை இல்லை ஆனால் அனைத்தும் உண்மை.

காற்று வெளியில் டிஜிட்டல் உருவில், எழுத்துக்களாய் மிதந்து கொண்டிருக்கும் எங்களின் எண்ணங்கள் லட்சக்கணக்கான தடவை படிக்கப்படுகிறது என்ற சந்தோசத்தில் கிளாடியேட்டரை தொடருகிறேன். அனாதி தற்காலிகமாக பிசினஸில் கவனம் செலுத்துவதால் தொடர்ந்து நாங்களே எழுதுவோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி கிளாடியேட்டர்…..

கிளாடியேட்டர் படம் பார்த்திருக்கின்றீர்களா? சோம்பல் படாமல் ஒதுக்கி விடாமல் கொஞ்ச நேரம் வரிகளின் ஊடே புகுந்து வாருங்கள். உங்களுக்குள் எழும் உணர்ச்சிகளை உணருங்கள்.

படைத்தளபதி மேக்ஸிமசுக்கு அரசர் கொடுக்கும் மரியாதையைக் கண்டு பொறாமை கொள்ளும் அரசனின் மகன் தளபதியின் அன்பு மனைவியாம் ஆரணங்கு, அழகின் உருவம், அன்பின் வடிவம், ஆன்ந்தத்தின் வாசல், வாழ்க்கையின் வசந்தம், குதூகலத்தின் வடிவாய் திகழ்ந்தவளை தன் போர் வீர்ர்களை வைத்து கற்பழித்துக் கொன்று தூக்கில் தொங்குவிட்டான்.

கைகளில் தவழ்ந்த சொர்க்கம், மழலை பேசி கடவுளின் மொழியைக் காதால் கேட்க வைத்த அரும்பு, வீசும் இளம் தென்றல், பிஞ்சு விரல்களில் இன்பத்தை வாரி வழங்கியன், சிரித்தால் சொர்க்கத்தையே கண்ணில் காட்டியவன், அழுதால் நரகத்தின் வாசலைக் காட்டியவன், அழகன், அன்பன், இன்பமான மேக்ஸிமஸின் குழந்தையைக் கூட தூக்கில் தொங்க விட்டான் அரசனின் மகன்.

இனி வாழ்வெதற்கு? ஏன் உயிர் வேண்டும்? உடம்பும் மனசும் ஒருங்கே செத்து பிணம் போல கிடந்த தளபதியை அடிமைகளை வைத்துப் பிழைப்பு நடத்தும் ஒருவன் கண்டெடுத்து உயிர்ப்பிக்கின்றான். உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்று தமிழர்கள் சொல்வார்கள். உலகத்தையே தன் வெற்றியால் நடுங்க வைத்த வீரத்தளபதி மேக்ஸிமெஸ் உப்பிட்டவருக்காக உழைத்தான். அதுவும் பிறரைக் கொன்று வாழ்ந்தான்.உலகிற்கே முன்னுதாரணமாய் வாழ்ந்தவனின் இன்றைய நிலையை பார்த்தீர்களா அன்பு உள்ளங்களே?

தனக்குப் பிரச்சினையாக வந்து விடுவானே என்ற நினைப்பில் தளபதியின் குடும்பத்தையே கொன்றானே படுபாவி அரசன் மகன், அவன் ரோம் நகரில் என்ன செய்து கொண்டிருந்தான் தெரியுமா? ரோம் நகரத்து மக்களுக்கு இலவச சாப்பாடு, இலவச குடி, என்னேரமும் கேளிக்கைகள் என்று மக்களை போதையிலையே வைத்திருந்தான். மந்திரி பிரதானிகளை மதிப்பதில்லை, ஆட்சியையும் ஒழுங்காய் நடத்துவதில்லை, எதிர் கருத்துச் சொல்பவரை சிறையில் அடைத்தான். விஷம் வைத்துக் கொன்றான். நாட்டைச் சுடுகாடாக்கி, தன் வீட்டை எமனின் அலுவலகமாக்கினான். எதிர்ப்பவருக்கு பரிசாக சாவை வாரி வழங்கினான். சலாமிடுபவருக்குச் சன்மானம், பதவி, புகழ், பணம், குட்டி, குடி என்று அள்ளி இரைத்தான். ரோம் நகரத்து மக்களை யோசிக்கவே விடுவதில்லை. சாப்பாடு இலவசம், குடியும் இலவசம் அத்தோடு கேளிக்கைகளும் இலவசமாய் கிடைக்க, ரோம் நகரத்து மக்கள் உழைப்பதையே மறந்து விட்டனர். இலவசத்தின் வலிமை இது. மக்களை மாக்களாக்கினான். அரசனை எதிர்ப்பார் இல்லை. கேள்வி கேட்பார் யாருமில்லை.

ரோம் நகரத்து தெருக்களில் மது வழிந்தோடியது. காமமும், போதையும் வழிந்தோடிய ரோம் நகரத்தில் இரக்கமோ, அன்போ, பாசமோ ஏதுமின்றி காட்டு மனிதர்களை, அரக்கர்களைப் போல மக்களை மாற்றினான் அரசன்.

அடிமைகளை வைத்து அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொன்று சாகச் செய்தான். அவர்களை தன் பலி ஆடுகளாய் மாற்றினான். தங்களுக்குள்ளேயே அடிமைகள் அடித்துக் கொண்டார்கள். ஒருவரை ஒருவர் கொலை செய்தார்கள். அவர்களை வைத்து ஆடுபுலி ஆட்டம் ஆடினான் அரசன். அடிமைகளின் கொலையாட்டத்தையே கேளிக்கையாக்கினான். மக்களை கொலை வெறி பிடித்தலையும் மிருகங்களாக்கினான்.

அங்கு வந்து சேர்ந்தான் அடிமைகளோடு அடிமைகளாய் மாறிக் கிடந்த வீரத்தளபதி, ஆண்மையின் மகன் மேக்ஸிமஸ். அடிமைகளால் தளபதியை நெருங்கவே முடியவில்லை. நடந்த அத்தனை கொலைப்போட்டிகளிலும் அடிமைகளை இரக்கமின்றிக் கொன்றான் மேக்சிமஸ். கேளிக்கைகளில் மூழ்கி மூளை மழுங்கிக் கிடக்கும் மக்களை பார்த்துக் காரித் துப்பினான் தளபதி. மக்கள் தளபதியை அடையாளம் கண்டனர். மழுங்கிய மூளைகளில் புது ரத்தம் பாய உணர்ச்சி வெள்ளத்தில் ஆர்ப்பரித்தனர். கண்டான் அரசன் மகன். கிலி பிடித்தாட்டியது. மக்களின் வெறித்தனத்தில் அரசனின் மகனும் மாட்டிக் கொண்டான். செய்த வினை பிடித்தாட்டியது. அரசனின் மகனை தளபதியோடு மோத மக்கள் ஆர்ப்பரித்தனர். வழி இல்லை. தப்பிக்கவும் மார்க்கமில்லை.

வாழ்வா? சாவா? அரசன் மகன் முன் நின்று எள்ளி நகையாடியது விதி. காலன் கெக்கொளி கொட்டினான். எமகிங்கரர்கள் வேலை வந்து விட்டது என்று ஸ்ட்ராங்கான பாசக்கயிற்றை எடுத்துக் கொண்டு எருமையின் மீது ஏறினர். எமனோ தனக்குள் சிரித்துக் கொண்டான்.

ரோம் நகரத்தில் வானுயர்ந்து நின்றது கேளிக்கை அரங்கம். மக்கள் தலைகளால் நிரம்பிக் கிடந்தது அவ்வரங்கம். போட்டி அதுவும் யார் வாழ்வது என்பதில் போட்டி. போர்க்களங்களில் வெட்டித் தள்ளிய குருதி கொப்பளித்துக் கிடந்த தலைகளின் மீது நடந்த படைத்தளபதிக்கும், சுகத்தில் திளைத்து, கேளிக்கைகளில் மூழ்கிய சோம்பேறி அரசனுக்கும் போட்டி. வாள்கள் பளபளவென்று மின்னின. இடையில் சூது செய்தான் அரசன். தளபதியை அணைப்பது போல அணைத்து, விஷக்கத்தியை இடுப்பில் சொருகினான். சுற்றிலும் ஆர்ப்பரிக்கும் மக்கள் வெள்ளம். அரசனின் கத்தி இடுப்பில் குத்தி குருதி வழிந்தோடுகிறது. விஷமோ உடம்பின் நரம்பெங்கும் நர்த்தனம் ஆடுகிறது. ஆனால் தளபதியோ கல்தூண் போல நிற்கின்றான். நடக்கிறது சண்டை.

அன்பு உள்ளங்களே இதுவரை என்னோடு, என் வரிகள் ஊடே உங்களின் உணர்ச்சிகளை ஒருங்குவித்து பயணித்த அன்பானவர்களே, இதோ இந்த வீடியோவைப் பார்த்து முடியுங்கள்.

அன்புடன்

குடிகாரன்.


அரசு மக்களுக்காகவா? அம்பானிகளுக்காகவா?

ஜூன் 2, 2010

விலைவாசி விண்ணை முட்டிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஏழைகள் 36 கோடியிலிருந்து 40 கோடியாக உயர்ந்திருக்கிறார்கள் என்று ஆய்வுகள் சொல்கின்றன. இந்த நிலையில் அம்பானி சகோதரர்கள் சமரசம் ஆகின்றார்கள். பெட்ரோலியத்துறை பெட்ரோலியப் பொருட்களின் விலையை இனி கம்பெனிகளே நிர்ணயித்துக்கொள்ளும் என்று அறிவிக்கின்றது. ஏதோ ஒரு உள்குத்து இருக்கிறது. அம்பானி சகோதரர்களுக்காகவா இந்த முடிவு? காரணம் யார் அறிவாரோ?

இந்த பாராவை மே 24, திங்கட்கிழமை அன்று பெட்ரோல் விலை உயர்வு அம்பானி சகோதரர்கள் சமரசம் என்ற எனது பதிவில் எழுதியிருந்தேன். ஏதோ உள்குத்து இருக்கிறது என்று சொல்லியிருந்தேன் அல்லவா? அந்த உள்குத்து என்னவென்று நாணயம் விகடனில் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டிருக்கிறது. இந்தியா அம்பானி சகோதரர்களின் காலடியில் விழுந்து கிடக்கிறது. அரசியல்வாதிகளும், முதலீட்டாளர்களும் அம்பானி சகோதரர்களின் கண்ணசைவிற்கு கட்டுப்படுகிறார்கள் என்று இக்கட்டுரை சாட்சியம் சொல்கிறது. காங்கிரஸ் அரசு யாருக்கு சேவகம் செய்கிறது என்பதை இப்போதாவது புரிந்து கொள்ள முயலுங்கள்.

அன்புடன் அனாதி.

இந்தோனேஷியாவிலிருந்து

இனி நாணயம் விகடனின் கட்டுரையினைப் படித்துப் பாருங்கள் பொறுமையாக. நன்றி நாணயம் விகடன் மற்றும் குமார்.

அம்பானி சகோதரர்கள் : நாணயம் விகடன் கட்டுரை

எதிரும் புதிருமாக இருக்கும் அரசியல் கட்சிகள் திடீர் கூட் டணி அமைப்பது போல, எலியும் பூனையுமாக இருந்த அம்பானி சகோத ரர்கள் இப்போது திடீர் சமரசம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒருவர் செய்து வரும் தொழிலில் இன்னொருவர் அத்து மீறி நுழையக்கூடாது என இருவரும் ஏற்கெனவே 2005-ல் ஒப்பந்தம் ஒன்றைப் போட்டிருந்தார்கள். இப்போது அந்த ஒப்பந்தத்தை ஓரங்கட்டி விட்டு, யார் வேண்டுமானாலும் எந்தத் தொழிலை வேண்டுமானாலும் செய்யலாம் என்று புதிய விதியையும் உருவாக்கி இருக்கிறார்கள்.

சகோதரர்களின் இந்த இணைப்பு ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்குச் சாதகமான விஷயம்தான். இதனால் இந்தியப் பொருளாதாரம் முன்னேற்றப் பாதையில் இன்னும் வேகமாகச் செல்வதற்கு நிறைய வாய்ப்புள்ளது என்கிறார்கள் ஒரு தரப்பினர்.

ஆனால் இன்னொரு தரப்பினரோ, ‘இந்த திடீர் சமரசத்தின் மூலம் ரிலையன்ஸ் அதிபர்கள் தங்கள் நலனைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்களே ஒழிய, முதலீட்டாளர்கள் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை என்று விமர்சிக்கிறார்கள். அவர்கள் சொல்லும் காரணங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

சேர்வதும் பிரிவதும் ரிலையன்ஸ் ஸ்டைல்!

”ரிலையன்ஸ் நிறுவனத்தின் வரலாறு தெரியாதவர் களே இப்போது ஏற்பட்டிருக்கும் சமரசத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். தனக்குத் தேவை என்கிறபோது பிரிவதும், மீண்டும் சேர்வதும் அந்த நிறுவனத்தின் ஸ்டைல். உதாரணமாக, 1990-களிலேயே ரிலையன்ஸ் பெட்ரோலியம் என்கிற நிறுவனத்தைத் தொடங்கியது. சில ஆண்டுகளுக்குப் பிறகு இதனை ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைத்தது. திரும்பவும் சில ஆண்டுகளுக்கு பிறகு ரிலையன்ஸ் பெட்ரோலியம் என்கிற நிறுவனத்தைத் தொடங்கியது. 2009-ல் மீண்டும் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் அதை இணைத்தது. அம்பானி இறந்தபிறகு சிலபல காரணங்களுக்காக 2005-ல் இரு சகோதரர்களும் பிரிந்தனர். நடுவே கடுமையாகச் சண்டையும் போட்டுக் கொண்டனர். இப்போது மீண்டும் சேர்ந்தால்தான் சில விஷயங்களைச் சாதிக்க முடியும் என்கிறபோது திரும்பவும் சேர்ந்துவிட்டனர். இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லையே!” என்கிறார் அந்த ஜாம்பவான்.

சண்டையும் சமரசமும் நாடகமா?

”அம்பானி சகோதரர்கள் சண்டைப் போடுவதையும் பிறகு சமாதானம் அடைவதையும் அப்படியே எடுத்துக் கொள்ளக்கூடாது. வெளியே சொல்லப்படாமல் அதில் ஒளிந்து கொண்டிருக்கும் நோக்கத்தை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார் இன்னொரு ஷேர் மார்க்கெட் நிபுணர்.

”திருபாய் அம்பானி காலமான பிறகு அவர் உருவாக்கிய நிறுவனத்தை அவர் வாரிசுகள் பிரித்துக் கொள்ள விரும்பினார்கள். ஆனால் அதற்கு முதலீட் டாளர்கள் எளிதில் அனுமதி கொடுத்துவிட மாட்டார்கள். காரணம், ரிலையன்ஸ் என்பது தனிப்பட்ட நிறுவனமல்ல. அது ஒரு பப்ளிக் லிமிடெட் கம்பெனி.

சகோதரர்கள் பிரிய நினைப்பதை முதலீட்டாளர் களிடம் எப்படி எடுத்துச் சொல்லிப் புரிய வைப்பது?

சிம்பிள். அண்ணன், தம்பி சண்டை போடுகிற மாதிரி ஆக்ஷனைக் கொடுத்தால் போதும்; முதலீட்டாளர்கள் பயந்துபோய் சண்டைப் போடாமல் எப்படியாவது சமரசமாகப் பிரித்துக் கொண்டால் தங்கள் முதலீடு தப்பிவிடுமே என்ற நிலைக்கு வந்துவிடுவார்கள். சரி, ரிலையன்ஸ் பிரிந்தாயிற்று. இப்போது மீண்டும் சேர நினைத்தால் அதற்கு என்ன காரணம் சொல்வது? இருக்கவே இருக்கிறது இயற்கை எரிவாயு பிரச்னை. அதைக் காரணம் காட்டி மோதிக்கொண்டால் அரசாங்கம் எரிவாயு சம்பந்தமாக கொடுத்த அனுமதியை ரத்து செய்துவிடும் நிலை ஏற்படலாம். அப்போது முதலீட் டாளர்கள், ‘எப்படியாவது இருவரும் சமரசமாகப் போய்விட்டால் நல்லது என்ற முடிவுக்கு வந்துவிடு வார்கள். பிஸினஸை கரைத்துக் குடித்த அம்பானி சகோதரர்களுக்கு இந்த விஷயமெல்லாம் அத்துபடி” என்கிறார் அவர்.

வெளிவராத ஒப்பந்தம்!

அம்பானி சகோதரர்கள் இத்தனை நாளும் சண்டை போட்டுக்கொண்டது 2005-ல் செய்து கொண்ட குடும்ப ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான். ஆறு பக்கங்கள் கொண்ட இந்த குடும்ப ஒப்பந்தத்தை இதுவரை யாரும் கண்ணில் பார்த்த மாதிரித் தெரியவில்லை. இந்த ஒப்பந்தம் ஏன் ரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது? ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்குக்கூட இந்த ஒப்பந்தம் காட்டப்படவில்லையே! ஏன்?” என்று கேட்கிறார் பங்குச் சந்தையின் இன்னொரு பெரும்புள்ளி.

”இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்க வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட இந்த குடும்ப ஒப்பந்தத்தை இப்போது எதன் அடிப்படையில் ரத்து செய்திருக்கிறார்கள்? வேண்டாம் என்கிறபோது இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து கொள்ளலாம் என்கிற அடிப்படையில் தானே ரத்து செய்திருக்க முடியும்? இப்படி ஒரு ஷரத்து ஒப்பந்தத்தில் இருப்பதை ஏன் இதற்கு முன்பு சொல்லவில்லை? எதிர்காலத்தில் இரு சகோதரர்களும் சமரசமாகவும் செல்ல வாய்ப்பிருக்கிறது என்கிற விஷயம் முதலீட்டாளர்களுக்குத் தெரிவது அவசியமா, இல்லையா?” இப்படி பதிலில்லாத பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போகிறார் அவர்.

அரசாங்கம்தான் காரணமா?

”ரிலையன்ஸ் நிறுவனம் ஆர்.என்.ஆர்.எல். நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய இயற்கை எரிவாயுவை என்ன விலைக்குத் தருவது என்கிற பிரச்னையில் இரு சகோதரர்களும் விட்டுக் கொடுக் காமல் இருந்தால், அரசாங்கம் ஏற் கெனவே கொடுத்த அனுமதியை மீண்டும் வாபஸ் பெற வாய்ப்புண்டு. அப்படி வாபஸ் பெறும் பட்சத்தில் ஆர்.என்.ஆர்.எல். நிறுவனத்துக்கு மட்டுமல்ல, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் மிகப்பெரிய இழப்பு உருவாகும். இது மாதிரியான ஒரு ஆபத்து வந்துவிடக்கூடாது என்ப தற்காக இரு சகோதரர்களும் கருத்து மாறுபாட்டை மறந்து ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். தங்களுக்கு ஏற்கெனவே கொடுப்பதாக அரசாங் கம் சொல்லி இருந்த எரிவாயுவை கொடுத்தே ஆகவேண்டும் என இரு சகோதரர்களும் அரசுத் தரப்பில் பிரதமர் முதல் முக்கிய அமைச்சர் களையும் சந்தித்திருக்கிறார்கள். இப்போது ஏற்பட்டிருக்கும் சமரசத் துக்குக் காரணம், அம்பானி சகோதரர்களின் அம்மா கோகிலாபென் என்பதைவிட அரசாங்கம்தான்!” என்கிறார் டெல்லியில் உள்ள இன் னொரு முக்கியப் புள்ளி.

அம்பானி சகோதரர்கள் ஒன்று சேர்ந்திருப்பதற்கான காரணம் எது வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். அதனால் அந்த நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்கும் இந்திய பிஸினஸ் உலகத்துக்கும் நன்மை ஏற்பட்டால் நல்லதுதான்.!


தனியார் பள்ளி முதலாளிகளுக்கு ஆதரவாய் தினமலர்

ஜூன் 2, 2010

உண்ணாவிரதமிருக்கும் தனியார் பள்ளிக்கூட முதலாளிகள் பற்றி தினமலர் செய்திகளை பரபரப்பாய் வெளியிடுகிறது. ஏனென்றால் தினமலர் கும்பலுக்கும் தனியார் பள்ளிக்கூடங்கள் இருக்ககூடும். கல்லூரிகளும் இருக்கக்கூடும்.  நிச்சயமாய் வைத்திருப்பார்கள் என்று நம்பித்தான் ஆக வேண்டும். காலணா பிரயோசனம் இல்லாமல் தினமலர் எந்த ஒரு செய்தியையும் வெளியிடாது.

கோடி கோடியாய் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் பொதுமக்களிடமிருந்து கொள்ளை அடித்தார்களே அப்போதெல்லாம் சின்னஞ்சிறு சைசில் செய்தி வெளியிடும் தினமலர் தனியார் பள்ளிக்கூட முதலாளிகள் உண்ணாவிரதமிருந்ததைப் பற்றி மட்டும் அரைப்பக்கத்துக்கு செய்திகளாக வெளியிடுவதில் தமிழக அரசுக்கு மிரட்டல் விடும் போக்காய் தெரிகிறது. மிரட்டல் ஜர்னலிசத்துக்கு பெயர் போனது தினமலர் என்பது பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

எத்தனையோ பத்திரிக்கையாளர்கள் நான் பத்திரிக்கைக்காரன் என்று சொல்லியே பல இடங்களிலும் மிரட்டி வருகிறார்கள் என்று அனுபவப்பட்டவர்கள் சொல்கின்றார்கள்.

திமுகவினரின் செல்வாக்கு பெற்றோர்களிடையே அதிகரித்து இருப்பது கண்டு தினமலர் கொதித்துப்போய் இருப்பது வெட்ட வெளிச்சமாய் தெரிகின்றது.

தனியார் பள்ளி முதலாளிகள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தது அவர்களின் உடல் நலத்துக்காக. ஆனால் பிள்ளைகளை தனியார் பள்ளிக்கூடங்களில் சேர்த்த பாவத்திற்காக எத்தனையோ பெற்றோர்கள் பல நாள் உண்ணாமலிருந்தார்களே அது தினமலருக்குத் தெரியுமா? அயோக்கியப்பயல்களுக்கு ஆதரவாய் கச்சை கட்டும் தினமலரின் செயல் அப்பட்டமான மிரட்டல். பெற்றோர்களின் கண்ணீரைத் துடைத்த தமிழக அரசுக்கு எதிராய் கச்சை கட்டும் தினமலரை வாங்காமல் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். இது தான் தினமலருக்கு நாம் கொடுக்கும் எச்சரிக்கையாக இருக்கும். இவர்கள் இப்படியே செய்துகொண்டிருந்தால் காலம் ஒரு நாள் தினமலரைக் கைவிட்டு விடும். அந்த நாள் விரைவில் வரக்கூடும் என்று தினமலரின் செயல்கள் கட்டியம் கூறுகின்றன.

குஞ்சாமணி


நர்சரி மெட்ரிக் பள்ளிகளின் கொள்ளைக் கணக்கு

ஜூன் 1, 2010

எனது நண்பர் ஒருவர் கீழ்க்கண்ட பத்திரிக்கையில் வெளியாகியிருக்கும் ஒரு கட்டுரையை அனாதி பிளாக்கில் வெளியிடுமாறு மெயில் அனுப்பி இருந்தார். கட்டுரை லிங்க் மட்டும் தருகிறேன். படித்துப்பாருங்கள். என்ன ஒரு பகல் கொள்ளை பாருங்கள். எனக்கு ரொம்ப நாளாகவே ஏன் தனியார் பள்ளிக்கூடங்கள் புற்றீசல்கள் போல வந்து கொண்டே இருக்கின்றன என்று தெரியாமல் இருந்தது. கட்டுரையின் ஆசிரியர் சொல்லியிருக்கும் கணக்கைப் பார்த்தால் கிறுகிறுக்கிறது.

தற்போதைய திமுக அரசு எடுத்திருக்கும் கட்டண அறிவிப்பு திமுகவின் மணிமுடியில் மின்னும் வைரம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.மேற்படிக் கட்டணம் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டால் அத்தனை பெற்றோர்களும் திமுக தலைவர் கலைஞரை மறக்க மாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம். இதன் காரணமாய் திமுக பெற்றோரிடையே நல்ல பெயர் வாங்கும். இதன் பலன் அடுத்த சட்டசபைத் தேர்தலில் நிச்சயம் வோட்டாய் கிடைத்து விடும். ஏனென்றால் பெற்றோர்கள் நன்றி மறவாதவர்கள் என்பதை திரு கலைஞர் நன்கு அறிவார்.

இக்கட்டணத்தை மேற்படி நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளின் மிரட்டலுக்கும், பெட்டிகளுக்கும் அஞ்சாமல் திமுக தலைவர் செய்து முடிப்பாரென்றால் அடுத்த முதல்வரும் திமுக தலைவர் தான் என்பது நிச்சயம்.

அக்கட்டுரையின் லிங்க் : கல்விக் கடைகள் – வியாபாரம் ஜோர்

நன்றி : திரு நெடுவை தவத்திருமணி மற்றும் வல்லினம் பத்திரிக்கை

இப்படிக்கு

அரச்சான் ( எனது நேரடிப்பதிவாக சென்னையிலிருந்து)


கண்ணை விற்று சித்திரம் வாங்கும் திமுக அரசு

மே 25, 2010
ஒரு விஷயம் எனக்கு புரியாத புதிராகவே இருக்கிறது.
உணவில் கலப்படம் செய்தால் உயிருக்கே ஆபத்தாகி விடும் என்பதால் உணவுக் கலப்படச் சட்டம் அமுலில் இருக்கிறது. காலாவதியான உணவினை உண்டால் இறந்து விடுவார்கள் என்று சுகாதாரத்துறையினர் ரெய்டு செய்து கடைகளில் இருக்கும் காலாவதி உணவுப் பொருட்களை பறிமுதல் செய்கின்றனர். காலாவதி மருந்திற்கும் இதே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கஞ்சா விற்றாலும், பிரவுன்  சுகர் விற்றாலும் சட்டம் பாய்கிறது. ஏனென்றால் மேற்படி பொருட்கள் மனிதனின் உயிருக்கே உலை வைத்து விடுகிறது.
சட்டம் தன் கடமையைச் செய்கிறது. அரசும் ஊக்குவிக்கிறது. ஆனால் பாருங்கள் சாராயத்தில் மட்டும் தேனும் பாலுமா ஊறுகிறது. அதைக் குடித்தால் நூறாண்டுகளா வாழ முடியும். சட்டம் சாராயம் விற்றால்  மட்டும் சரி என்கிறதா? சாராயத்தைக் குடித்துக் குடித்து குடல் வெந்து சாகலாம் என்று அரசு நினைக்கிறதா?
விஞ்ஞான ஊழல் என்றால் என்ன தெரியுமா? வெறும் பத்து ரூபாய் தயாரிப்பு செலவு உடைய 750 மிலி சாராயம் 400 ரூபாய்க்கு விற்கப்படுவது தான். அதுவும் அரசின் ஒப்புதலோடு. மனிதனைக் கொன்று, ஊரையும், உறவையும் கெடுத்து, குடும்பத்தைக் கெடுத்து தமிழக அரசு பணம் சம்பாதித்து மக்களுக்கு சேவை செய்கிறதாம்.
அரசியல்வாதிகளுக்கு சொந்தமான ஸ்பிரிட் ஆலைகள் கோடி கோடியாய் கொள்ளை அடிக்க, தமிழக மக்களை கொன்று குவிக்கும் டாஸ்மாக்கை தமிழக அரசு நடத்தி வருவது எப்படி இருக்கிறது தெரியுமா?
கண்ணை விற்று சித்திரம் வாங்குகிறார்கள்.


பெட்ரோல் விலை உயர்வு – அம்பானி சகோதரர்கள் சமரசம்

மே 24, 2010

விலைவாசி விண்ணை முட்டிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஏழைகள் 36 கோடியிலிருந்து 40 கோடியாக உயர்ந்திருக்கிறார்கள் என்று ஆய்வுகள் சொல்கின்றன. இந்த நிலையில் அம்பானி சகோதரர்கள் சமரசம் ஆகின்றார்கள். பெட்ரோலியத்துறை பெட்ரோலியப் பொருட்களின் விலையை இனி கம்பெனிகளே நிர்ணயித்துக்கொள்ளும் என்று அறிவிக்கின்றது. ஏதோ ஒரு உள்குத்து இருக்கிறது. அம்பானி சகோதரர்களுக்காகவா இந்த முடிவு? காரணம் யார் அறிவாரோ?

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்தால் விலை வாசி ஃப்ளைட்டில் பறக்குமே? ஏழைகள் பசியினால் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி நினைக்கிறதா? தமிழ் நாட்டிலோ பவர் கட்டினால் லட்சக் கணக்கான பேர் வேலை இழந்து நிற்கின்றார்கள். இந்த லட்சணத்தில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்தால் அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்து விடுமே, ஏழைகள் எப்படிச் சாப்பிடுவார்கள்? பசி தாங்காமல் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள நேரிடுமே  இதைத் தான் காங்கிரஸ் கட்சி விரும்புகிறதா?

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி பிரதமரிடம் ஒரு கேள்வி வைக்கப்படுகிறது. ஊழல் நடந்ததாக தெரிந்தால் நடவடிக்கை எடுப்போம் என்கிறார். சசி தரூர் விஷயத்தில் நடந்து கொண்டமாதிரி ராஜா விஷயத்தில் பிரதமர் ஏன் நடந்து கொள்ளவில்லை? முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் லைசென்ஸ் என்ற விதி எந்தக் காலத்தில் யாரால் ஏற்படுத்தப்பட்டது என்று பிரதமர் சொல்வாரா? சாதாரண படிக்காதவனுக்கு கூட தெரியக்கூடிய ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றி பிரதமரின் பதில் அவருக்கு அழகாவா இருக்கிறது. இந்திய மக்கள் அவரை நம்பியதற்கு அவரின் பதில் இதுதானா?

வாழ்க காங்கிரஸும் அதன் ஆட்சியும்.


ஸ்பெக்ட்ரம் ஊழலைத் தொடர்ந்து வைமேக்ஸில் ஊழல்

மே 23, 2010

அன்பார்ந்த நண்பர்களே,

உங்களின் தொடர்ந்த ஆதரவிற்கு நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  பயனியர் நாளிதழில் வெளியிடப்படும் கட்டுரைகள் அனைத்தும் நாட்டை நிர்வகிப்போரின் ஊழல்களை வெளிச்சம் போட்டுக் காட்டி வருகின்றன.  அதனை முடிந்த அளவுக்கு தமிழ் படுத்தி விஷயத்தை மட்டும் சுருக்கமாய் சொல்ல முயன்று வருகிறேன்.  மேலும் சில கட்டுரைகளை ஆங்கிலத்திலேயே படித்தால் தான் நன்றாக இருக்கும் என்பதால் அப்படியே தருகிறேன். நாட்டை ஆளும் மக்கள் பிரதி நிதிகளின் லட்சனத்தைப் பாரீர்…

அன்புடன் குஞ்சாமணி

Thanks to : Daily Pioneer and Gopikrishnan

Max greed: Raja’s friend shows how to mint profit

J Gopikrishnan | New Delhi

Even as the dust is yet to settle on the 2G and 3G scandals allegedly involving A Raja, the Union Telecom Minister is embroiled in another controversy. This time, it is to do with the allotment of franchisees for BSNL’s recently-launched WiMax services to a company owned by one of the Minister’s close associates from Perambulur.

The company, Wellcom Communications India Pvt Ltd, has applied for licences to seven most revenue-generating of the 16 circles in India. According to sources, the revenue-sharing pattern agreed upon is 75 per cent to the private party and 25 per cent to BSNL. Sources said that if the company gets the nod for the 20 Mega Hz spectrum, it may sell off stakes to foreign players at huge profits, like in the 2G case.

They have questioned the need even for the appointment of franchisees when the BSNL can directly provide the service. WiMax technology provides wireless Internet and voice in future to laptops and mobile phones. The number of WiMax connections is expected to rise to 50,000 subscribers in the first year itself, leading to a target of 1 million subscribers in five years in each circle.

Wellcom Communications applied to be a franchisee in November 2008. The Chennai-based company, which was initially engaged in minor engineering and construction works, was formed in December 2006 with a Rs 10-lakh capital. This went up to Rs 10 crore in November 2008, apparently with an aim to enhancing the company’s credibility for the WiMax bid.

Wellcom Communications is represented by T Silvarajoo (55) with 15 per cent shares. The other two directors are Dato Vijayakumar Ratnavelu (47) and T Gunasegaran Thiagarajan, both Tamilians with a Malaysian citizenship. Dato Vijayakumar is also running a company with the same name in Malaysia.

Silvarajoo hails from Raja’s constituency Perambulur and is a close associate of the Minister. He is also associated with Dr C Krishnamoorthy, in whose building Raja had begun his legal practice in the constituency. Silvarajoo is currently a sub-contractor of CPWD’s road works. He supplies pellets from a quarry owned by Krishnamoorthy for the ongoing Chennai-Tiruchirappally National Highway (NH-45) project.

The Pioneer had earlier reported that Krishnamoorthy headed a real estate company, called Kovai Shelters, with Raja’s nephew and two nieces on its board of directors with 45 per cent shares.

Though the BSNL had invited franchisees a year ago, it postponed the bid several times allegedly due to pressure from the Minister who, sources said, kept adding names to the original list. Apparently under Raja’s pressure, BSNL chairman and managing director Kuldeep Goyal initiated the franchise-awarding procedures in mid-January. Despite repeated attempts by The Pioneer, the CMD refused to talk to this newspaper.

Wellcom Communications has applied for Chennai, Karnataka, Rajastan, Bihar, UP (West), Haryana and Orissa circles. The Pioneer has learned that the BSNL would finalise the franchise by next week.

The Pioneer had earlier reported that the BSNL had entered into an unprecedented arrangement with the private party, Swan Telecom, for intra-circle roaming service without any financial benefit to the public sector unit. Though a BSNL expert committee had suggested a levy of 52 paise per call, it found no mention in the MoU signed with Swan.

The Pioneer has also reported the saga of two companies owned by the Minister’s close relatives. Green House Promoters (Private) Limited and Equaas Estates (Private) Limited were floated soon after Raja became a Union Minister. His wife Parameswari also served as a director on the board of these two firms.


Follow

Get every new post delivered to your Inbox.

Join 108 other followers