‘யார் நல்ல மனைவி, யார் கெட்ட மனைவி, யார் வித்யா சக்தி, யார் அவித்யாசக்தி என்பதைச் சாதரணமாக இல்லறத்தார்களால் கண்டுபிடிக்க முடிவதில்லை. நல்ல மனைவியிடம் அதாவது வித்யாசக்தியிடம் காமம், கோபம் எல்லாம் மிகக் குறைவாய் இருக்கும். அவள் குறைவாகத் தூங்குவாள். கணவனை அதிகம் தன்னிடம் நெருங்க விட மாட்டாள். அவளிடம் அன்பு, கருணை, பக்தி, நாணம் போன்றவை எல்லாம் இருக்கும். அவள் எல்லோரையும் தன் குழந்தைகளாக எண்ணிப் பணிவிடை செய்வாள். கணவன் இறைவனிடம் பக்தி கொள்ளும் வகையில் அவனுக்கு துணை செய்வாள். அதிகம் செலவு செய்ய மாட்டாள். ஏனெனில் அதன் காரணமாக கணவன் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும், அதனால் இறைவனை நினைக்க அவனுக்கு போதிய அவகாசம் கிடைக்காது.
தவிர, ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனி அடையாளங்கள் உள்ளன. மாறு கண், குழி விழுந்த கண்கள், பூனைக் கண்கள், பசுங்கன்றுக்கு இருப்பது போல நீண்ட முகம், குறுகிய மார்பு போன்றவை தீய லட்சணங்கள் ‘ என்கிறார் ராமகிருஷ்ணர்.
ம என்ற மகேந்திர நாத் அவர்கள் எழுதிய ஸ்ரீ ராம கிருஷ்ணரின் அமுத மொழிகள் என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது. மேலும் மனித வாழ்க்கையின் சாராம்சம் பற்றி அவர் சொல்லியிருப்பது,
நீண்ட தூரத்திலிருந்து லெட்டர் ஒன்று வந்திருந்தது. அது திடீரென்று தொலைந்து விட்டது. அனைவரும் தேடினார்கள். தேடினார்கள். அனைவருக்கும் அக்கடிதம் மிக முக்கியமானதாகப் பட்டது. ஆவலுடன் தேடினார்கள்.
நீண்ட தேடுதலுக்குப் பிறகு கடிதம் கிடைத்து விட்டது. அக்கடிதத்தைப் பிரித்துப் படித்தார்கள். அதில் அரிசி, மிளகாய், பருப்பு வாங்கி அனுப்புமாறு சொல்லப்பட்டிருந்தது.
இனிமேல் அக்கடிதம் தேவையில்லை.
அனைவரும் அரிசி, மிளகாய், பருப்பைத் தேடினார்கள்.
( இது தான் வாழ்க்கையின் சாரம், இது தான் வாழ்வியல் தத்துவம். புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்)
மனிதன் இன்பங்களாலும் துன்பங்களாலும் சூழப்பட்டிருக்கிறான். சாதாரண மனிதன் பெண்ணோடு கூடும் இன்பமே எல்லா இன்பத்திலும் உச்சமான இன்பமாக அறிந்திருக்கிறான். பெண் கிடைக்காத சிலர் போதை வஸ்துக்களின் பால் இன்பமிருப்பதாக நினைக்கின்றார்கள். இந்த வகை இன்பங்களிலும் உயர்வான இன்பம் என்று ஒன்று இருக்கிறது.
மனசு பட்டென்று அமைதியாகி எண்ணமே இல்லாமல் ஆகி இயற்கையோடு கலந்து விடும் இன்பத்திற்கு நிகரான இன்பம் என்ற ஒன்றைத்தான் இறைவனோடு சேர்தல், சமாதி, ஜீவன் முக்தி என்கிறார்கள். ஒன்றுமே இல்லை என்பது தான் இன்பத்தின் உச்சகட்டம். அந்த இன்பத்தை அறிந்தவர்கள் இறைவனாகி விடுவார்கள்.
அதற்கு குடும்ப வாழ்க்கைதான் சிறந்தது. சன்னியாச வாழ்க்கை குழப்பத்தை தந்து விடும். சூன்யத்தோடு சேர்தல், எல்லையில்லா பெருவெளியில் சேர்தல் பற்றி விவேகானந்தர் பாடிய ஒரு பாடல் கீழே.
எங்கும் அடர்ந்த பேரிருளில் – வடிவம்
இல்லா உன்றன் பேரழகு
பொங்கிப் பொலிந்து மின்னுதம்மா ! – அதில்
புலன்கள் ஒடுங்க யோகியர்கள்
தங்கியிருந்து மலைக் குகையுள் – பெரும்
தவங்கள் இயற்றப் பழகுகிறார் !
எல்லையில் லாத இருள்மடியில் – அருள்
இலங்கும் மகா நிர் வாணமெனும்
நல்ல அலைகளின் நடுவினிலே – மனம்
நாடும் நிரந்தர அமைதியெனும்
மெல்லிய தென்றல் குறையாமல் – நன்கு
மிதந்து மிதந்து செல்கிறது !
சூனிய உருவம் உடையவளாய் – உடல்
துணியாய் இருளை அணிந்தவளாய்த்
தனியாய்ச் சமாதிக் கோயிலிலே – உள்ள
தாயே நீயார்? சொல்லம்மா !
துன்பம் கெடுத்துக் காப்பாற்றும் – உந்தன்
தூய பாதத் தாமரையில்
இன்பப் பிரேமை ஒளிதுள்ளி – எழில்
எங்கும் விரிந்து விளையாடும் !
சின்மய முகத்தில் உன்னருமைப் – புன்
சிரிப்பு மலர்ந்து சோபிக்கும்
- அன்புடன் குடிகாரன் என்னும் அனாதி
இவர்தான் ஸ்ரீராம கிருஷ்ணர். இவரின் அமுதமொழிகள் என்ற புத்தகம் இல்லறத்தார்கள் அனைவரும் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகம். நேரமிருந்தால் வாய்ப்புக் கிட்டினால் படித்துப் பாருங்கள். இவரின் அன்புச் சீடர்தான் சுவாமி விவேகானந்தர்.
இவர்தான் இளவயது விவேகானந்தர். கண்களில் தெரியும் தீட்சன்யத்தைக் கவனியுங்கள். தற்போதைய பிரபலமான சாமியார்களில் எவரின் கண்களிலாவது இந்தத் தீட்சண்யத்தை நீங்கள் கண்டதுண்டா. திருட்டுப் பார்வையும், அடிப்பார்வையும் கொண்டவர்கள் இந்தக்காலச் சாமியார்பயல்கள்.
இவர்தான் மா என்கிற மகேந்திர நாத் குப்தா என்பவர். இவர் ராமகிருஷ்ணருடன் இருந்த நிகழ்ச்சிகளை டைரியில் எழுதி வைத்தார். அதுதான் ஸ்ரீராம கிருஷ்ணரின் அமுத மொழிகள் என்ற நூல்.
சிறு கு(றி)ப்பு : அனாதியும் தமிழகத்தின் இன்றைய நட்சத்திரமும் பேசிக் கொண்டிருந்த போது ஒட்டுக் கேட்ட ஒரு சுவாரசியமான மேட்டரை விரைவில் எழுத இருக்கிறேன். அவசியம் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு அது. மிஸ் பண்ணி விடாதீர்கள். – குஞ்சாமணி குலசேகர பாண்டியன்


அனாதி பதிப்பித்தது. 


அனாதி பதிப்பித்தது.
அனாதி பதிப்பித்தது. 
