இல்லறத்திற்கு சிறந்த பெண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி ?

December 22, 2009

‘யார் நல்ல மனைவி, யார் கெட்ட மனைவி, யார் வித்யா சக்தி, யார் அவித்யாசக்தி என்பதைச் சாதரணமாக இல்லறத்தார்களால் கண்டுபிடிக்க முடிவதில்லை. நல்ல மனைவியிடம் அதாவது வித்யாசக்தியிடம் காமம், கோபம் எல்லாம் மிகக் குறைவாய் இருக்கும். அவள் குறைவாகத் தூங்குவாள். கணவனை அதிகம் தன்னிடம் நெருங்க விட மாட்டாள். அவளிடம் அன்பு, கருணை, பக்தி, நாணம் போன்றவை எல்லாம் இருக்கும். அவள் எல்லோரையும் தன் குழந்தைகளாக எண்ணிப் பணிவிடை செய்வாள். கணவன் இறைவனிடம் பக்தி கொள்ளும் வகையில் அவனுக்கு துணை செய்வாள். அதிகம் செலவு செய்ய மாட்டாள். ஏனெனில் அதன் காரணமாக கணவன் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும், அதனால் இறைவனை நினைக்க அவனுக்கு போதிய அவகாசம் கிடைக்காது.

தவிர, ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனி அடையாளங்கள் உள்ளன. மாறு கண், குழி விழுந்த கண்கள், பூனைக் கண்கள், பசுங்கன்றுக்கு இருப்பது போல நீண்ட முகம், குறுகிய மார்பு போன்றவை தீய லட்சணங்கள் ‘ என்கிறார் ராமகிருஷ்ணர்.

ம என்ற மகேந்திர நாத் அவர்கள் எழுதிய ஸ்ரீ ராம கிருஷ்ணரின் அமுத மொழிகள் என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது. மேலும் மனித வாழ்க்கையின் சாராம்சம் பற்றி அவர் சொல்லியிருப்பது,

நீண்ட தூரத்திலிருந்து லெட்டர் ஒன்று வந்திருந்தது. அது திடீரென்று தொலைந்து விட்டது. அனைவரும் தேடினார்கள். தேடினார்கள். அனைவருக்கும் அக்கடிதம் மிக முக்கியமானதாகப் பட்டது. ஆவலுடன் தேடினார்கள்.

நீண்ட தேடுதலுக்குப் பிறகு கடிதம் கிடைத்து விட்டது. அக்கடிதத்தைப் பிரித்துப் படித்தார்கள். அதில் அரிசி, மிளகாய், பருப்பு வாங்கி அனுப்புமாறு சொல்லப்பட்டிருந்தது.

இனிமேல் அக்கடிதம் தேவையில்லை.

அனைவரும் அரிசி, மிளகாய், பருப்பைத் தேடினார்கள்.

( இது தான் வாழ்க்கையின் சாரம், இது தான் வாழ்வியல் தத்துவம். புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்)

மனிதன் இன்பங்களாலும் துன்பங்களாலும் சூழப்பட்டிருக்கிறான். சாதாரண மனிதன் பெண்ணோடு கூடும் இன்பமே எல்லா இன்பத்திலும் உச்சமான இன்பமாக அறிந்திருக்கிறான். பெண் கிடைக்காத சிலர் போதை வஸ்துக்களின் பால் இன்பமிருப்பதாக நினைக்கின்றார்கள். இந்த வகை இன்பங்களிலும் உயர்வான இன்பம் என்று ஒன்று இருக்கிறது.

மனசு பட்டென்று அமைதியாகி எண்ணமே இல்லாமல் ஆகி இயற்கையோடு கலந்து விடும் இன்பத்திற்கு நிகரான இன்பம் என்ற ஒன்றைத்தான் இறைவனோடு சேர்தல், சமாதி, ஜீவன் முக்தி என்கிறார்கள். ஒன்றுமே இல்லை என்பது தான் இன்பத்தின் உச்சகட்டம். அந்த இன்பத்தை அறிந்தவர்கள் இறைவனாகி விடுவார்கள்.

அதற்கு குடும்ப வாழ்க்கைதான் சிறந்தது. சன்னியாச வாழ்க்கை குழப்பத்தை தந்து விடும். சூன்யத்தோடு சேர்தல், எல்லையில்லா பெருவெளியில் சேர்தல் பற்றி விவேகானந்தர் பாடிய ஒரு பாடல் கீழே.

எங்கும் அடர்ந்த பேரிருளில் – வடிவம்
இல்லா உன்றன் பேரழகு
பொங்கிப் பொலிந்து மின்னுதம்மா ! – அதில்
புலன்கள் ஒடுங்க யோகியர்கள்
தங்கியிருந்து மலைக் குகையுள் – பெரும்
தவங்கள் இயற்றப் பழகுகிறார் !

எல்லையில் லாத இருள்மடியில் – அருள்
இலங்கும் மகா நிர் வாணமெனும்
நல்ல அலைகளின் நடுவினிலே – மனம்
நாடும் நிரந்தர அமைதியெனும்
மெல்லிய தென்றல் குறையாமல் – நன்கு
மிதந்து மிதந்து செல்கிறது !

சூனிய உருவம் உடையவளாய் – உடல்
துணியாய் இருளை அணிந்தவளாய்த்
தனியாய்ச் சமாதிக் கோயிலிலே – உள்ள
தாயே நீயார்? சொல்லம்மா !

துன்பம் கெடுத்துக் காப்பாற்றும் – உந்தன்
தூய பாதத் தாமரையில்
இன்பப் பிரேமை ஒளிதுள்ளி – எழில்
எங்கும் விரிந்து விளையாடும் !
சின்மய முகத்தில் உன்னருமைப் – புன்
சிரிப்பு மலர்ந்து சோபிக்கும்

- அன்புடன் குடிகாரன் என்னும் அனாதி

இவர்தான் ஸ்ரீராம கிருஷ்ணர்.  இவரின் அமுதமொழிகள் என்ற புத்தகம் இல்லறத்தார்கள் அனைவரும் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகம். நேரமிருந்தால் வாய்ப்புக் கிட்டினால் படித்துப் பாருங்கள்.  இவரின் அன்புச் சீடர்தான் சுவாமி விவேகானந்தர்.

இவர்தான் இளவயது விவேகானந்தர். கண்களில் தெரியும் தீட்சன்யத்தைக் கவனியுங்கள்.  தற்போதைய பிரபலமான சாமியார்களில் எவரின் கண்களிலாவது இந்தத் தீட்சண்யத்தை நீங்கள் கண்டதுண்டா.  திருட்டுப் பார்வையும், அடிப்பார்வையும் கொண்டவர்கள் இந்தக்காலச் சாமியார்பயல்கள்.

இவர்தான் மா என்கிற மகேந்திர நாத் குப்தா என்பவர். இவர் ராமகிருஷ்ணருடன் இருந்த நிகழ்ச்சிகளை டைரியில் எழுதி வைத்தார். அதுதான் ஸ்ரீராம கிருஷ்ணரின் அமுத மொழிகள் என்ற நூல்.

சிறு கு(றி)ப்பு : அனாதியும் தமிழகத்தின் இன்றைய நட்சத்திரமும் பேசிக் கொண்டிருந்த போது ஒட்டுக் கேட்ட ஒரு சுவாரசியமான மேட்டரை விரைவில் எழுத இருக்கிறேன். அவசியம் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு அது. மிஸ் பண்ணி விடாதீர்கள். – குஞ்சாமணி குலசேகர பாண்டியன்


காம குருக்கள் – சமூக ஆர்வலர்

December 6, 2009

காஞ்சிபுரமென்றாலே ஒரே ரகளையாக இருக்கிறது. காஞ்சியிலிருந்து புறப்பட்டவரின் தம்பிகளால் இன்றைக்கு தமிழகம் ஆளப்பட்டுக் கொண்டிருப்பது ஒரு விசேஷம். ஏற்கனவே காஞ்சி மடம் கொலை வழக்கில் சிக்கி சின்னா பின்னப்பட்டிருக்கிறது. காஞ்சிமட காமக் கதைகள் பலவற்றை பத்திரிக்கைகள் வெளியிட்டன. அந்தக் கதைகளில் சுவாரசியம் ஏதும் இல்லை. ஆனால் காம குருக்கள் (பெயரே செம ரகளையாய் இருக்கிறது) இருக்கின்றாரே, எந்திரன் படத்தின் சினிமா விளம்பரத்தையெல்லாம் தாண்டி பெரிய அளவுக்கு பாப்புலர் ஆகிவிட்டார். பெண்களை எப்படி மடக்கினார் என்று கேட்டால் கருவறையில் குருக்களோடு உறவு கொண்டால் காசு பணம் கொட்டுமாம். நோய் நொடி அண்டாதாம். நீண்ட நாட்களுக்கு சுகமாய் வாழலாமாம் என்றெல்லாம் சொல்லித்தான் பல பெண்களை கருவறைக்குள் வைத்து பூஜை போட்டிருக்கிறார். நன்றாகத்தான் பூஜை போட்டிருப்பார் போல. ஆனால் தொறந்து வைத்துக் கொண்டு பூஜை போட்டதால் எவனோ ஒருத்தனின் கண்ணில் பட்டு இன்றைக்கு கம்பிகளின் பின்னால் எட்டு எட்டு என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்.

கடந்த திங்களன்று குருக்களை கோர்ட்டுக்கு போலீஸ் கூட்டி வந்தபோது ஏராளமாகத் திரண்ட மக்கள் கடும் எதிர்ப்பு காட்டியதோடு இவரைத் தூக்கில் போடணும் என கோஷமிட்டபடி செருப்பு, விளக்குமாறெல்லாம் வீசியிருக்கிறார்கள். வசந்த் டிவியில் சமூக ஆர்வலர் என்ற நாமம் பெற்ற அம்மணி ஏகத்துக்கும் சூடா பேட்டி கொடுத்தார். ஆவேசமாய் கத்தினார். ஆஹா பெண்கள் பொங்கி எழுந்து விட்டார்கள் என்று மனதுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.

ஆனால் அந்த மகிழ்ச்சி் கீழே இருக்கும் போட்டோக்களைப் பார்த்ததும் சப்பென்று வடிந்து விட்டது. ஆவேசமாய் பொங்கிய அந்த பெண் சமூக ஆர்வலருக்கு இந்த போட்டோக்களைக் காட்டினால் என்ன செய்வார்?

கருவறைக்குள் கசமுசா செய்ததை எவனோ ஒருவன் படமாக்கி போட்டுக் கொடுத்து விட்டான். பிரச்சினையாகி விட்டது. ஆனால் கலை என்ற பெயரில் சினிமாவில் பெண்களை ஏகத்துக்கும் அவுத்துக் காட்டுகின்றார்களே அவர்களை அந்த சமூக ஆர்வலர்கள் என்ன செய்யப்போகின்றார்கள். கோடிக்கணக்கானவர்கள் பார்வையாலே கற்பழித்துக் கொண்டிருக்கிறார்களே அதை என்ன செய்யபோகிறார் அந்த சமூக ஆர்வலர்?

ஏமாந்தவனுக்கு ஒரு நியாயம்! கோடீஸ்வரனுக்கு ஒரு நியாயமா மக்களே! நீங்களே உங்களின் மனச்சாட்சியை கேளுங்கள். எல்லோரையும் அல்லவா செருப்பாலும் விளக்குமாறாலும் அடிக்க வேண்டும். காமக்குருக்களுக்கு ஒரு நியாயம். சினிமாக்காரர்களுக்கு ஒரு நியாயமா?

குறிப்பு : குஞ்சாமணிக்கு எப்பொழுதும் சினிமாக்காரர்கள் மேல் ஒரு வயிற்றெரிச்சல் இருக்கும். ஏனென்றால் வித விதமான புதுப் புது அழகிகள். அவர்களோடு கட்டிப் பிடித்து, உருண்டு புரண்டு, கிஸ் அடித்து, தொப்புளில் கோலி விளையாட பணமெல்லாம் வாங்கி ஏகத்துக்கும் செம ஜாலியாய் இருக்கும் கதா நாயகர்களைக் கண்டாலே குஞ்சுவுக்கு அறவே பிடிக்காது. ஹீரோவானால் போதும். அறுபது வயது நடந்தாலும் இருபது வயதுப் பெண்ணோடு காதல் செய்யலாம் மற்றும் ஸ்பெஷல் மீல்ஸ் வேறு உண்டு என்பதால் குஞ்சுவுக்கு ஏற்பட்டிருக்கும் பொறாமையினால் வந்தது இந்தப் பதிவு.

ஹீரோக்கள் கவனிக்க : தொப்புளில் பம்பரம் விட்டவர் நாளை முதலமைச்சர் ஆகக்கூடிய சாத்தியங்கள் வேறு இருப்பதால் இனிமேல் நடிகர்கள் நடிகைகளின் தொப்புளில் எதையாவது விடுங்கள். நாளைக்கு ஏதாவது பெரிய ஆள் ஆக சாத்தியங்கள் இருக்கின்றன.


ஹார்டுகோர் குடும்பக் கதைகள் – ஒரு கிராமத்துப் பெண்ணின் உண்மைக் கதை

அக்டோபர் 25, 2009

நகர்ப்புறங்களில் வசிக்கும் பெண்மணிகளில் சிலர் காசுக்கு ஆசைப்பட்டு விபச்சாரிகளாய் மாறி விடுவதில் ஒன்றும் ஆச்சர்யம் இருக்காது. ஆனால் கிராமப்புறங்களில், சமூகக் கட்டுப்பாடுகள் அதிகம் கொண்ட கிராமங்களில் கட்டுப் பெட்டித் தனமாக வாழ்ந்து வந்த குடும்பத்துப் பெண்களில் சிலரும் விபச்சாரிகளாய் மாறி விடுகின்றனர். அப்படி மாறிய ஒரு குடும்பப் பெண்ணின் கதை தான் கீழே குஞ்சாமணி சொல்லி இருப்பது. படிக்க வேதனையாய் இருந்தாலும் உண்மை நெஞ்சை சுடுகிறது. அப்பெண்ணின் மீதான இரக்கமும் உருவாகிறது – அனாதி.

ரெண்டு கொழந்தைங்க. ஆணு ஒன்னு. பொண்ணு ஒன்னு. நாலேக்கர் வயக்காடு. கூரை வீடு. வீட்டுக்காரரு வாத்தியாரு. தென்னந்தோப்புன்னு வசதியாத்தான் இருந்தா தேவி. அக்கம்பக்கத்து வீட்டுல எல்லாம் நல்ல பேரு எடுத்து வாக்கப்பட்டு வந்த ஊருல பேருமெடுத்து சொக்கத்தங்கமா இருந்தா. எவன் கண்ணு பட்டுச்சோ தெரியல. விதி அவ வீட்டுக் கூரையில சனிய ஏத்திப்புட்டான். ஏறுன சனி சும்மா இருந்தானா ? அவன் பாட்டுக்கு இப்போ கலைஞருக்கிட்டேயும் காங்கிரசுக்கிட்டேயும் வெளையாடற மாதிரி வெளயாட ஆரம்பிச்சுட்டான்.

அதெப்படின்னா, கலைஞருக்கும் காங்கிரசுக்கு குடுமிபிடிச் சண்டே ஆரம்பிச்சுடுச்சுன்னு எல்லாருக்கும் தெரியும். காங்கிரஸ்ஸால தமிழ் நாட்டுக்கு ஒரே ஒரு நல்லது தான் நடந்துச்சு – அது காமராசு. அதுக்கப்பறம் காங்கிரசு ஆப்பு மேல ஆப்பைத்தான் அடிக்குது. அது தெரியாம தமிழனுவ எல்லாம் நாங்கல்லாம் காங்கிரசுக்காரன்னுவன்னு சொல்லிக்கிட்டு வெள்ளையும் சொல்லையுமா திரியுறானுவ. இன்னிக்கு காவிரியில தண்ணி வாராதுக்கு காரணமே கலைஞருதான்னு எத்தனை பேருக்குத் தெரியும்னு கேக்குறாரு பழ.கருப்பையா. அடுக்கடுக்கா கலைஞரு மேல குத்தம் சொல்லுறாரு. அதுக்கும் காரணம் காங்கிரசுதான்னு வேறு சொல்லுறாரு.

அது என்னான்னு தெரியனுமா அனாதி பிளாக்கில இருக்கற இது தான் சரியான நேரம்ங்கிற பதிவை படிச்சுடுங்க. 2004லுல திமுக காலால இட்ட வேலைய தலையால செஞ்ச காங்கிரசு இன்னிக்கு போனு ஊழல விசாரிக்க சிபிஐய்ய அனுப்பி வச்சுடுச்சு. கலைஞரு ஆளு எவரையும் கண்டுக்கிறதே இல்லை. அதுக்குள்ளே இங்கே அண்ணன் தம்பிக்குள்ளே சிக்கல்லுனு பத்திரிக்கை காரங்க எழுத ஆரம்பிச்சிட்டானுவ. என்ன கன்றாவியோ தெரியலை. ஆட்சிக்காக இலங்கையில தமிழர்களைக் கொன்னு குவிச்ச அயோக்கியப்பயலுக்கு தொணை போன காங்கிரசுக்கு கூலக் கும்பிடு போட்ட கலைஞரு மேல படிந்த ரக்கக்கறைக்கு சனி எப்படி பழி வாங்கப் போறான்னு இனிமேத்தான் தெரியும். கூடிக் குலாவி, கொஞ்சி கிஞ்சி கும்மியடிச்சுக்கிட்டு இருந்த திமுகவுக்கும் காங்கிரசுக்கும் சனி ஆப்பு அடிக்க ஆரம்பிச்சா மாதிரிதான் தேவி வாழ்க்கையிலேயும் சனி புகுந்து விளையாட ஆரம்பிச்சாரு. சரி கதைக்கு வாரேன்.

பொம்பளையளுவளுக்கு சேலைன்னா புருசன் புள்ளயக் கூட கண்டுக்க மாட்டாளுவ. அந்த ஊருக்கு வந்தான் ஒரு சேலை விக்கிற பொறம்போக்கு. அக்கம் பக்கத்துல பொம்பளய சேலகள எடுக்க, கையில காசு நெறய வச்சுருந்த தேவிக்கும் ஆசை வந்துடுச்சு. சேலைய விரிச்சான் பொறம்போக்கு. அவனுக்கிட்டே என்னத்தை பாத்து விழுந்தாளோ தெரியல. விழுந்துட்டா. தேவியோட புருஷன பொம்பளைச்சட்டின்னுதா அந்தக் கிராமத்துல அழைப்பாங்க. அதான் காரணமான்னு தெரியல. ஆனா இருக்க வாய்ப்பும் இருக்கு. அந்தாளைப் பாத்தா பொட்டச்சி நடக்கிறா மாதிரியே நடந்துக்கிட்டும் பேசிக்கிட்டும் திரிவான். சமயப் போற பொண்ணு இருக்குது. பையனோ தோளுக்கும் மேல வளந்துட்டான். இப்பப் போயி இவளுக்கு அந்த ஆசை வரலாமா? ஆனா வர வச்சுட்டான் அந்த சனிப்பய.

அந்த ஊரு இளந்தாரிபபயலுவ சில பேரு புருஷங்காரன் வெளியூருக்கு போன சமயமாப் பாத்து தனியா வீட்டுல இருக்கிற பொம்பளை புள்ளகளை புடுச்சு அமுக்கிப் புடுவானுங்க. அதுக்குப் பயந்துக்கே அம்மா வீட்டுக்கு ஓடீபோயிருவாளுவ. இல்லேன்னா அந்தப் புருஷங்காரன் பொண்டாட்டிக்கு காவலை வச்சுட்டுப் போவான். ஏன்னா ஒரு காலத்துல அவனும் அப்படித் திரிஞ்சவன். குத்தமுள்ள மனசு குறுகுறுக்குமுல்ல. சேலைக்காரனுக்கும் தேவிக்குமிடையே கள்ளக்காதல்லுன்னு கண்டு பிடிச்சிட்டுனுவ சில இளந்தாரிப்பயலுவ. பத்து நிமிஷம் கெடச்சாப் போதும் புகுந்துறுவானுங்க. அவளுக்கும் வேற வழியில்லாமப் போக பயலுவலுக்கும் சேத்துக் கால விரிக்க ஆரம்பிச்சுட்டா.

இவ கதை ஊருக்குள்ள லேசுபாசா தெரிய ஆரம்பிச்சுடுச்சு. ஒரு நாளு இருந்த காசு, நகை, பணத்தையெல்லாம் எடுத்துக்கிட்டு சேலக்காரனோட கம்பி நீட்டிட்டா. புள்ளையலும், புருஷனும் அனாதையா நிக்கிறாங்க. ஒரு வாரம் போச்சு, இவளக்காணாம்னு போலீசுல கம்ளையிண்டு கொடுத்தான் புருஷன். ஒரு மாசம் கழிச்சு போலீசுக்காரனுவ இவனை டேசனுக்கு வான்னு அழைக்க அங்க போயி பாத்தா தேவி உக்காந்திருக்கிறா.

இவன் ஆம்பளயே இல்ல, அதனால தான் இவனோட போனேன்னு சொன்னா தேவி. பஞ்சாயத்துப் பேசி அவ இருந்த வீட்டையும் இடத்தையும் இவளுக்கிட்டே கொடுத்துட்டு புள்ளயல கூட்டிக்கிட்டு வேற பக்கமா கொட்டகை போட்டுக்கிட்டு போயிட்டான் புருஷங்காரன்.

சந்து கிடச்சா சிந்து பாடுன இளந்தாரிப்பயலுகளுக்கு இப்போ ரோடே கிடைச்சுப் போச்சு. அவ வீட்டுப் பக்கமா இருக்கிற நாயிகள்ளாம் ராத்திரி பத்து மணிக்கு மேல பேயப் பாத்தா மாதிரி கொலக்க ஆரம்பிச்சுடுச்சு. ஊரு ஆம்பளப் பயலுக எல்லாம் அடிக்கடி அவ வீட்டுப் பக்கமாவே நடந்தானுவ. படுத்தானுகளெ தவிர அவளுக்கு எவனும் காசு ஒன்னும் கொடுக்கல. பேரும் கெட்டுப் போச்சு. வீட்டை விட்டு வெளியே வராமயே கிடந்தா. அம்மா வீட்டுக்கும் போக முடியல.

யாரோ எவனோ சொன்னான்னு வீட்டைப் பூட்டிப் போட்டுட்டு திருப்பூருக்கு போனா தேவி. போன இடத்துல எல்லாஞ்சேந்து அவளை பதம் பாத்தானுவ. உடம்பு புண்ணானதுதான் மிச்சம். திரும்ப ஊருக்கு வந்து மவளை பாக்கனும், மகனைப் பாக்கனும்னு அங்கனக்கு அங்கன பிராக்கு பிடிச்சா மாதிரி திரியுறா தேவி !


குதிரையும் பெண்ணும் !

செப்டம்பர் 19, 2009

சின்ன வீடு படத்தில் வரும் பாடலொன்றில் அத்தினி, சித்தினி என்று பெண்களை வகைப்படுத்தி இருப்பார்கள். அது கர்ண பரம்பரைக் கதை. அது இப்படி இருந்தால் இது என்றும், இது அப்படி இருந்தால் அதுவென்றும் ஏதேதோ புரியாத மொழிகளில் பெண்களை வகைப்படுத்தி இருப்பார்கள். அதையெல்லாம் புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு தான் இந்தச் செய்தி.

கீழே படிக்கும் முன்பு இந்தப் பாடலை உச்சய்தாயில் வைத்துக் கேட்டு விட்டு தொடருங்கள். அப்போது தான் படிக்க சுவாரசியமாக இருக்கும்.

பெண்களை குதிரை மாதிரி இருக்கிறாள் என்று சொல்லுவார்கள்.

உடனே நெதர்லாந்தில் எடுக்கும் அந்த மாதிரிப் படங்களை பற்றியெல்லாம் நினைக்கக் கூடாது. இது ரசனை சம்பந்தப்பட்ட பதிவு. சரி விஷயத்துக்கு வருகிறேன்.

எப்படி குதிரையையும் பெண்ணையும் ஒப்பிடுகிறார்கள் என்று சிலருக்கு குழப்பமாய் இருக்கும். அது எப்படி என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

குதிரை நடந்து போகும் போது பார்த்திருக்கின்றீர்களா ? பார்க்கவில்லை என்றால் இனிமேல் பாருங்கள். அதன் பின்னர் ஹி..ஹி… பாருங்கள்… சும்மா உதறும்…

நாங்க எங்கே போயி அந்த மாதிரிக் குதிரைகளைப் பாக்கிறதுன்னு நினைக்கிறீங்களா ? அதுக்கும் ஒரு வழி இருக்கு.

சமீபத்தில் பாரசூட் ஜாஸ்மின் தேங்காய் எண்ணெய் விளம்பரத்தை டிவியில் பார்த்திருப்பீர்கள். அந்த விளம்பரத்தில் வரும் பெண் தான் குதிரை மாதிரி இருக்கும் பெண். பார்க்க வில்லை என்றால் பார்த்து விட்டு பெருமூச்சு மூச்சாய் விட்டுத் தள்ளுங்கள்.

குதிரைக்கும் பெண்ணுக்கும் முடிச்சு போட்டு யோசித்த மஹாத்மாவின் ரசனை இருக்கிறதே அட அட… என்ன ஒரு ரசனை…

இனிமேல் சும்மா பார்த்தோம் வந்தோம்னு இருக்காம அது குதிரை மாதிரி இருக்கா, உயர்ந்த ஜாதியா, இல்லை மட்டக்குதிரையா, சாதா குதிரையான்னு பார்த்து வையுங்க.

பீச்சுப் பக்கமா போயி உக்காந்தீங்கன்னா ஏகப்பட்ட குதிரைகளை பார்க்கலாம். ரசிக்கலாம். கிட்டே போனாத்தானே உதைக்கும். அதனால டிஸ்டன்சு கீப்பப் (ஹீ..ஹீ…) பன்னுங்க

வயிதெரிச்சல் சம்பவம் : மேற்படி விஷயத்தை அனாதியிடம் பகிர்ந்து கொண்டிருந்தேன். பாவிப்பயல் செய்த காரியம் வயிற்றில் எரிமலையையே உருவாக்கி விட்டது. அது என்னவென்று இனிமேல் வரும் பதிவுகளில் ரகசியக் குறிப்பாய் எழுதி விடுவேன்.

குஞ்சாமணி