குத்தியானந்தாவிற்கும், குஞ்சிதாவிற்கும் இந்தக் குஞ்சு சவால் விடுகிறான். சாதாரண ஆட்களாகிய குன் டிவியின் மீதும், ஏதோ பத்திரிக்கை வைத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் முக்கீரன் கூபால், குல்லக்கை குமராஜ் மீது குற்றம் சுமத்துகின்றீர்களே, உங்களுக்கு தைரியம் இருக்கிறதா என்று இந்தக் குஞ்சு கேட்கிறான்.
அகில உலகமே போற்றும், இலக்கிய உலகின் பிதாமகன், புரட்சி எழுத்தாளர் ஜட்டிகளே போற்றும் ஜால எழுத்தாளர், எனது அகில உலக ஆசான், குரு பாரு குவேதிதா மீது புகார் கொடுக்கவில்லையே ஏன்? குரசம், குல்லாபம், குசாமியார் என்று தொடர் எழுதிய பாருவை விடவா, குன் டிவியும், முக்கீரனும் உங்களைக் கேவலப்படுத்தின? நீங்கள் இருவரும் இருந்த வீடியோவை மட்டும் தானே மேற்படியாளர்கள் போட்டார்கள். ஆனால் ஆசான் அதற்கும் மேல் அல்லவா எழுதித் தள்ளினார்.
பாருவிடம் வழக்கு வைத்துக் கொண்டால், பின் பக்கம் ஆப்பு(ஹீ..ஹீ.. சும்மாச்சுக்கும்) அடித்து விடுவார் என்றுதானே அவர் மீது போலீஸில் புகார் கொடுக்கவில்லை? பாருவின் நண்பரின் துப்பாக்கியால் தங்களையும் சுட்டு விடுவார் என்று தானே பயந்து போய் போலீஸில் வழக்கினை தரவில்லை?
பாவம் குன் டிவியும், முக்கீரனும். ஏதோ போட்டோம், பிழைத்தோம் என்று இருப்பவர்களைச் சந்திக்கு இழுத்து விடுகின்றீர்கள். அவர்கள் எல்லாம் ஏழைகள் அய்யா ஏழைகள்.
கண்ணில் போடும் கூலிங் கிளாசே 50,000 ரூபாய்க்குப் போடும் என் ஆசானை உங்களால் தொடக்கூட முடியாது என்று இந்தக் குஞ்சு சொல்கிறான். அதுமட்டுமா 10 ரூபாய்க்கு ஜட்டி போடும் இந்தியாவில், 3000 ரூபாய் ஜட்டி போடும் ஆசானைப் பகைத்துக் கொண்டால், உலகமெங்கும் இருக்கும் என் ஆசானின் அடிப்பொடிகளை வைத்து, அடித்து தூள் கிளப்பி விடுவார் என்று பயந்து தானே இவர் மீது நீங்கள் புகார் கொடுக்கவில்லை?
என் ஆசான் மீது வழக்குத் தொடுக்க தைரியம் இல்லாத நீங்கள் எல்லாம் எதற்கு பேட்டி கொடுக்கின்றீர்கள்? உங்களுக்கு தைரியம் இருக்கிறதா என்று கேட்கிறேன். எங்கே ஒரு புகாரைக் கொடுங்கள் பார்ப்போம்?
பாவம் இந்தியாவிலேயே வசிக்க முடியாமல் ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் குன் டிவி மொதலாளியையும், முக்கீரனையும் ஏனய்யா தொடர்ந்து துன்பப்படுத்துகின்றீர்கள்? உங்களுக்கு மனச்சாட்சியே இல்லையா? பாவம் அவர்களை விட்டு விடுங்கள்.
ஜாலியாய் டென் டவுனிங்கில் தண்ணி அடித்து விட்டு, குட்டியின் ஜட்டியைத் தடவிக் கொண்டிருக்கும் என் ஆசான் மீது உங்களுக்கு தில் இருந்தால் புகார் கொடுங்கள் பார்ப்போம்.
இப்படிக்கு
உங்களின் மனம் கவர்
குஞ்சாமணி
குறிப்பு : இது யாரையும் எவரையும் குறிப்பன இல்லை. ஜாலியாய் ஒரு சிறுகதைப் பதிவு. இப்பதிவு மூலம் யாருக்காவது மனம் வருத்தமேற்பட்டால், தனி மெயிலில் தன் புகாரைத் தெரிவித்தால் மெயில் வந்த 48 மணி நேரத்திற்குப் பிறகு பதிவு நீக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனாதி பதிப்பித்தது. 





