ரசனையில் ஒளிந்திருக்கும் ரகசியம்

மே 15, 2012

அவர் ஒரு பிரபல இயக்குனர். மனைவியும் சினிமாவைச் சேர்ந்தவர். வெளியுலகில் அவருக்கு இருக்கும் பெயரும், புகழும் சொல்லித் தான் தெரிய வேண்டுவதில்லை. அவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விட்டால் எப்பேர்ப்பட்ட நடிகரானாலும் சரி, கையது கொண்டு மெய் பொத்தி நிற்பர். நடிகைகள் எல்லாரும் அரண்டு போய் அமைதியாய் கிடப்பர். அமைதியின் டெரர் என்று அழைக்கப்பட்ட அந்த இயக்குனரின் பட ஷூட்டிங்கிற்கு எனது நண்பி ஒருத்தி அழைப்பின் பேரில் (இயக்குனரின் அனுமதியுடன் தான்) சென்றிருந்தேன். என்னுடன் குஞ்சாமணி ட்ரைவர் கோலத்தில் வந்தான். எல்லோரும் ஆச்சரியமாகப் பார்த்தனர். பின்னே அஜித் குமாருக்கும் சவால் விடும் அழகோடு கன்னத்தில் குழியுடன், வொயிட் டிஷர்ட்டில், டார்க் ப்ளூ ஜீன்ஸ் பேண்டுடன் நின்றிருந்த உங்களின் பிரிய குஞ்சாமணியை பார்த்தாலே பார்க்கும் இளம் பெண்களின் இதயம் ஆசிட் வீசியது போல பொசுங்க ஆரம்பிக்குமே, யூனிட் ஆட்கள் எல்லாம் எம்மாத்திரம்? அசந்து போய் நின்றார்கள்.

தோழி என்னைப் பார்த்ததும் ஓடோடி வந்து இயக்குனருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இயக்குனர் அருகில் வந்து இரண்டு இரண்டு வார்த்தைகளில் வரவேற்றார். என் பின்னாலே ஒரு கண்ணை மட்டும் காட்டியவாறு, பம்மிக் கொண்டு நின்றான் குஞ்சாமணி. அது அவனின் ஸ்டைல். இம்ப்ரஸ் செய்கின்றானாம். தோழி என்னைக் கவனிப்பதை விட்டு விட்டு, குஞ்சாமணியைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

‘அனாதி, சார் யாரு?’

‘சாரோட ட்ரைவர்’ என்றான் முந்திக் கொண்டு

அவனின் ஆட்டம் ஆரம்பமாகி விட்டது. படுபாவி நம்மை பயன்படுத்திக் கொண்டானே என்று சிரித்துக் கொண்டேன். கண்ணுக்குத் தெரியாத தூசி கிடைக்கட்டுமே, சீனப் பெருஞ்சுவரையே கட்டி விடுவான் இந்த குஞ்சு.

தோழி, அவனுடன் பேச ஆரம்பித்து விட்டாள். குஞ்சு பெண்களின் கண்களுக்குள் பார்ப்பான். குறுகுறுவென பார்வை. இதழ் கடையோரத்தில் புன் சிரிப்பொன்று தவழும். கற்புக்கரசியானாலும் ஒரு கணம் சிலிர்த்து விடுவார்கள். நான் பலமுறை அவன் கண்களைச் சந்தித்து அரண்டு போய் இருக்கிறேன். அவன் ஏதோ தியானமெல்லாம் செய்கின்றானாம் என்று பஞ்சு சொன்னான். என்னவோ தெரியவில்லை.

அவனை முன்னிட்டு ஹோட்டலில் அழகிகளின் கூட்டம் வருவதால் நான் அவனின் பர்ஷனல் விஷயங்களில் தலையிடுவதில்லை. அதை விரும்புவதும் இல்லை.

இரண்டு முறை இயக்குனர் அருகில் வந்து ஏதோ சொல்லிச் சென்றார். ஷூட்டிங்கில் கொடுக்கும் ஷூஸ் கன்றாவியாக இருந்தது. நான் முகம் சுழிப்பதைக் கண்ட குஞ்சு, ஓடோடிச் சென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான்.

அதற்குள் தோழி குஞ்சுவுடன் ஒட்டிக் கொண்ட மாதிரி அவனோடு சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். அது மட்டுமா அவளின் நண்பிகளில் சிலரும் குஞ்சுவோடு கடலை போட்டுக் கொண்டிருந்தனர். வேட்டை மன்னன் ஆரம்பித்து விட்டான். அவன் காட்டில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. அனுபவிக்கட்டும். சமூகத்தில் கல்யாணத்துக்கு முன்பு வரையான வாழ்க்கைகள் எதுவும் புரட்டிப் பார்க்கப்படுவதில்லை. முற்போக்கு எண்ணங்கள் கொண்டவர்கள் அதிகமாகி விட்டனர். கோர்ட்டுகளில் விவாகரத்துக்கள் எண்ணிக்கை கூடுவது பெண்களின் சுதந்திரத்தையும், ஆண்களின் சுதந்திரத்தையும் வெளிக் கொண்டு வருகின்றன. இருக்கட்டும் சந்தோஷமாய்.

தோழியைச் சந்தித்து விட்டு, ஹோட்டல் திரும்பிக் கொண்டிருந்த போது காரை ஓட்டிக் கொண்டிருந்த குஞ்சு, ’அனாதி உனக்கு ஒரு விஷயம் சொல்கிறேன் கேட்கின்றாயா?’ என்றான்

’சொல்லுடா !’

’உன் தோழியிடம் கறந்த மேட்டர் டா !’

’ம்…!’

’இயக்குனர் இருக்காரே அவருக்கு டிவி நாடகம் தான் பிடிக்குமாம்’

’ஏனாம்?’

’அவரின் பெண்டாட்டி பதினைந்தாயிரத்திற்கும் மேலே கொடுப்பாராம். உன் தோழி பணத்தோடு சான்ஸையும் பிடித்து விட்டாளாம்’

‘அட, இப்படி ஒரு ரசனையா?’

இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று அல்லவா இயக்குனர் நடந்து கொள்கிறார். இயக்குனரின் படங்களில் ஹை கிளாஸ் நடிகைகளின் குத்து டான்ஸ் இருப்பது நினைவில் நிழலாடியது. பூனை என்றாலே கள்ளம் தானே? நண்பர்களே !

ஹோட்டல் வாசலில் கார் நின்றது

- அனாதி


அரசியல்கட்சியின் பெண் பிரச்சாரகர் கடிதம்

April 11, 2012

அனாதி அவர்களுக்கு,

சில நாட்களுக்கு முன்பு தான் உங்களது பிளாக்கை படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. தொடர்ந்து படித்துக் கொண்டே வருகிறேன். அள்ள அள்ள குறையாத சுரங்கமாய் சுய எள்ளல், தங்களையே கதாபாத்திரமாக்கி தங்களையே கிண்டல் செய்து கொள்ளும் பதிவுகள் என்று இதுவரை படிக்காத கோணங்களில் எழுதிச் செல்லும் உங்களின் பாங்கு என்னை மேன்மேலும் கவர்ந்து கொண்டே செல்கின்றன.

நீங்கள் எப்படி இருப்பீர்கள், உங்கள் ஹோட்டல் எங்கு இருக்கிறது என்றெல்லாம் அறிந்து கொள்ள மாபெரும் ஆசை கிளர்ந்து நிற்கின்றது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் எங்கேனும் இருக்கிறதா என்று யோசித்தால் சிறிய ஆயாசம் மேலெழும்புகிறது. இருப்பினும் என்றாவது ஒரு நாள் உங்களைச் சந்திப்பேன் என்று நம்புகிறேன்.

ஒரு பிரபல கட்சியின் கொள்கைப் பிரச்சாரக் குழுவின் பிரதான பேச்சாளராய் இருந்து வருகிறேன். ஒவ்வொரு கூட்டத்திற்கு குறிப்பிட்ட அளவில் கட்டணம், போக்குவரத்து இன்னபிறவும் கிடைத்தாலும், நான் அந்த வருமானத்தை மட்டுமே நம்பி இல்லாமல் மேலதிக வருமானம் பார்ப்பேன். அவ்வாறு கிடைத்த பணத்தில் கோடிக் கணக்கில் பணமும், தோட்டங்களும், வீடுகளும் இருக்கின்றன.

பணமிருந்தால் போதும் உலகம் உன் பின்னால் ஓடி வரும் என்று எனக்குப் போதிக்கப்பட்டது. பணத்திற்காக என் உடலை நான் கடையாக்கினேன். கடையில் விற்பனை படு ஜோர். இந்த வயதிலும் என் மீது அதீத பிரியம் கொண்டவர்கள் இருக்கின்றதை நினைத்துப் பார்த்தால், கிழவி ஆகும் வரையிலும் எனக்கு மார்க்கெட் இருக்கும்.  நான் சேர்ந்திருக்கும் கட்சியில் கிழவர்கள் தான் அதிகம். அவர்களிடையே எனக்கு மார்க்கெட் கூடிக் கொண்டே தான் போகின்றதே ஒழிய குறைந்த பாடில்லை. பணம் கொட்டிக் கொண்டே இருக்கிறது. கடையில் வியாபாரம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. என் கடையின் பெயர் என்ன தெரியுமா? “ கொள்கை பரப்பு பேச்சாளர்”.

தனியாக படுத்து தூங்கி நீண்ட நாட்கள் ஆகின்றன. மனம் “கரன்சி கட்டுகளின் வாசனைக்காக” ஏங்குகிறது. ஒரு கட்டு குறைவானால் கூட அடுத்த தடவை இன்னும் அதிகம் சேர்க்க மனது துடிக்கிறது. எல்லாம் சரியாகச் சென்று கொண்டிருக்கின்றன. ஆனால் என் அடிமனதுக்குள் எழும் “பரிகாசச் சிரிப்பு” என்னை தினம் தினம் கொன்று கொண்டிருக்கிறது. அந்த பரிகாசத்திற்கு நீங்கள் சொல்லும் ஆதரவான பதில் என்ன என்று அறியத் துடிக்கிறேன்.

- தேவகி

தேவகி, உங்கள் பிரச்சினை விரைவில் சரியாகி விடும். ஒவ்வொரு காலகட்டத்தில் மனிதர்களுக்கு ஒவ்வொரு விஷயங்களின் மீது பிடிப்பு அதிகமாகும். நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாய் மாறி விடும். உங்களுக்கும் அதே போல நடக்கும். அதுவரை உங்களின் பிரச்சாரகர் வேலையைத் தொடர்ந்து செய்யுங்கள். விதியின் வேலை மிகவும் ரகசியமானது, மர்மமானது. அதன் விளைவுகள் வரும் போது அனுபவித்துக் கொள்ள வேண்டியதுதான். தப்பிக்கும் வழியே இல்லை. வாழ்த்துக்கள்

- அனாதி


குலா மாஸ்டர் என்றொரு பேரழகி

மார்ச் 12, 2012

தானாட மயிலாட நிகழ்ச்சி இருக்கிறதே அதை விடச் சிறந்த ஒரு கலா நடன நிகழ்ச்சியை எந்த உலகிலும் பார்க்கவே முடியாது. தமிழக கலாச்சாரத்தை கட்டிக் காத்து, பேணி வரும் அற்புதமான நிகழ்ச்சி. தலைஞர் டிவியில் உருப்படியான ஒரு நிகழ்ச்சி எதுவென்றால் அது “தானாட மயிலாட” என்பதுதான். ஒரு சிலர் “மார்பாட மயிராட” என்றெல்லாம் இந்த நிகழ்ச்சியை விமர்சித்தாலும் அது பொறாமைக்காரர்களின் வயித்தெரிச்சலில் விளைந்த ஒன்றாகும்.

கு மாஸ்டர் போன்ற அற்புதமான பேரழகியை இனி இந்த தமிழ் உலகம் கண்ணால் கூட காண முடியாது. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அவரின் உடையலங்காரம், நடையலங்காரம், பேச்சு, பேசும் போதே அசையும் அவரின் உடல் பாவங்கள் என்று ஒவ்வொன்றும் ஒரு வரலாறு. சுருக்கமாய்ச் சொன்னால், இரண்டு சதை மலைகளுக்கிடையே ஒரு அழகு மலை எனலாம். கிஷ்பூவும், குமீதாவும் குலா மாஸ்டரின் அன்பின் காரணமாய் அதிகமாய் அழகு காட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்றுச் சொல்வதே சாலச் சிறந்தது.

குலா மாஸ்டர் உடைகள் ஒவ்வொன்றும் அழகின் அற்புதமான வடிவமைப்பு கொண்டிருக்கும். இந்த ஞாயிறு அன்று கழுத்துக்கு கீழே ஒரு அழகிய கட் செய்த உடை அணிந்திருப்பார் பாருங்கள், அதைப் பார்த்த மடோனாவிற்கு மயக்கமே வந்து விட்டதாம். அமெரிக்க தமிழ்ச் சங்கத்தில் இருந்து உடனடியாக ஒரு மெயில் வந்தது. அதில் குலா மாஸ்டரை ஆடை வடிவமைப்பின் அற்புதமான கலைஞர் என்று அம்மெயில் விளித்திருந்தது. கிஷ்பூவும், குமீதாவும் எவ்வளவு சிவப்பாக இருப்பினும் குலா மாஸ்டரின் அழகுக்கு இணையாய் அவர்களிடத்தே எதையும் காட்டவே முடியாது.

தானாட மயிலாடவில் நடனமிடும் நடன மாதுகள் ஜோடி ஒவ்வொன்றும் பார்க்கப் பார்க்க பரவசமாய் தென்படுகின்றார்கள். நான் ஏன் நடன மாதுகள் என்றுச் சொல்கிறேன் என்றால் குலா மாஸ்டர் ஆண் நடனக்காரர்களைக் கூட வாடா போடா என்றழைத்து, பெண்ணுரிமையை நிலை நாட்டி, ஆணைக்கூட பெண்ணாய் மாற்றி ஆட விடும் அற்புத சித்திகள் பல கொண்டிருப்பதால் தான் மாதுகள் என்றுச் சொல்கிறேன்.

இப்படியான கவர்ச்சியும், கலை நோக்கமும் கொண்டிருக்கும் தானாட மயிலாட நிகழ்ச்சியை எந்த இடர் வறினும் விடாது தொடர்ந்து நடத்தி வரும் தமிழக பெண்களில் தலை சிறந்த நடன கலா மஞ்சரி, நடன பூசன பூஞ்சாதிபதி, கலா சேகர, நாட்டிய தேவத, பூர்வாக புண்ணியாதபதி மாண்புமிகு குலா மாஸ்டரை நாம் ஒரு பேரழகி என்று அழைப்பது எந்த விதத்தில் தவறாகும்?

- குஷியுடன் குஞ்சாமணி


மனுஷ்யபுத்திரனின் பொறியல்

செப்டம்பர் 28, 2011

எதேச்சையாக உயிர்மை வெப்சைட் பக்கம் போன போது,அங்கு மனுஷ்யபுத்திரனின் தலையங்கத்தைப் படிக்க நேர்ந்தது.  இதோ நீங்களும் படித்து விடுங்கள். சாருவை ஒரு இடத்தில் வாரி இருந்தார். என்னடா இது பெரிய அக்கிரமாய் இருக்கிறது (சாருவிற்கு எனக்கல்ல) என்று யோசித்தால் ஏதோ பிரச்சினை என்றுச் சொன்னார்கள். இதுவும் ஒரு நாடகமோ என்று நினைக்கத் தோன்றியது. பாம்பின் கால் பாம்பறியும் பாருங்கள். அவரின் அந்தத் தலையங்கத்தைப் படித்து விடுங்கள்.

http://uyirmmai.com/contentdetails.aspx?cid=4757

தமிழத்தில் போனியாகாத மதச் சார்புடைய (அரசியல் எப்படி எழுதுகிறேன் பாருங்கள்) இந்தியா டுடேவில் மனுஷ்யபுத்திரன் தமிழகத்தின் வலிமையான பத்து மனிதர்களில் ஒருவர் என்று லிஸ்ட் போட்டிருந்தார்கள். அதைச் சாரு கூட தன் பிளாக்கில் வெளியிட்டிருந்தார். படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.  இதை ஏன் இங்குச் சொல்கிறேன் என்றால் அதற்கும் காரணம் இருக்கிறது. அதை விரைவில் சாருவே உடைப்பார் என்று நிச்சயம் நம்புகிறேன்.

பத்திரிக்கைகள் எதுவும் காரணம் இல்லாமல் காரியம் செய்வதில்லை என்பதினை மட்டும் இவ்விடத்தில் நினைவில் கொள்க. அனாதி விரைவில் செலிபிரட்டிஸ் சீக்ரெட்ஸ் பதிவில், உங்களுக்குத் தெரிந்திருக்கவே தெரியாத ஒரு உண்மையை வெளிச்சத்தில் கொண்டு வரப் போகிறார். அதுவரை பொறுத்திருங்கள்.

இனி மனுஷ்யபுத்திரனுக்கு வருவோம்.

கருணாநிதியின் அறியாமை பற்றிய ஒரு பொறியலும், ஜெயலலிதாவின் அகம்பாவத்தினையும், கனிமொழியை அவமதிக்க விரும்புவர்களுக்கும் என்றும் பொது வாழ்க்கையில் இருப்போரைப் பற்றிய அவரின் பொறியல் தலையங்கத்தினை முன் வைத்து அவரையும் நாம் விமர்சிக்கலாம்.

1) கனிமொழியை எந்தப் பத்திரிக்கை விடாது இரண்டாம் பக்கத்தில் போட்டோ போட்டு வந்தது என்று மனுஷ்யபுத்திரன் சொல்லுவாரா?

2) கருணாநிதி செய்த தவறுகள், ஊழல்கள் எல்லாம் அறியாமையால் செய்யப்பட்டதா என்பதை மனுஷ்யபுத்திரன் விளக்குவாரா?

3) ஜெயலலிதாவின் அகம்பாவம் யாருக்கும் தெரியாத ரகசியம் என்பதால் தலையங்கம் எழுதினாரா இல்லை வேறு எதற்காகவா?

மேற்கண்ட கேள்விகளுக்கான பதிலை வாசகர்கள் யோசித்துக் கொள்ளலாம். ஏனென்றால் பதில்களே கேள்விகளுக்கு விடையாய் இருக்கிறது.

மனுஷ்யபுத்திரனின் சமையல் குறிப்புகள் ஒவ்வொன்றும் படிக்க மொக்கையாய் இருப்பது மொக்கை ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை தருகிறது.

ஐயாம் சாரி மிஸ்டர் மனுஷ்யபுத்திரன். கருத்துச் சுதந்திரத்தை முன் வைத்து, இப்பதிவு எழுத வேண்டிய கட்டாயம்.

- பஞ்சு


சட்டத்தை மீறிய குஞ்சு – ரகசியம் அம்பலம்

செப்டம்பர் 28, 2011

குஞ்சு ஒரு குஷி பேர்வழி என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் குஞ்சு சட்டத்தை மீறி சில காரியங்களைச் செய்கிறவன் என்பதை அவன் சொல்லக் கேட்டேன். ஆளில்லா சிக்னலில் குஷியாக ரூல்ஸ் பார்க்காமல் கார் ஓட்டுவது கூட ”சட்டப்படி குற்றம்” தான்.  என்ன சரிதானே?

இந்தக் குஞ்சுப் பயல் இருக்கின்றானே அவன் என்ன செய்தான் தெரியுமா? அவன் ஒரு குஷி மேட்டரில் சட்டத்தை மீறி நடந்து விட்டான். அது என்ன என்று தெரிய வேண்டுமா?

காலையில் போன் போட்டுக் கேட்டபோது, நேத்து இருந்த போதை தெளியாமல் உளறி விட்டான்.

”ஆன் லைனில் இருக்கிறேன் குஞ்சு. உன் ரகசியத்தை உடைக்கப் போகிறேன்” என்றேன்.

”நான் என்னடா தப்பு செய்தேன், என்னவோ பெரிய குற்றத்தை செய்துட்டா மாதிரி ரகசியம் அது இது என்கிறாயே” என்று பதறினான்.

“அதெல்லாம் முடியாதுடா, எழுதியே தீருவேன்” என்றேன்.

 கொஞ்ச நேரம் யோசித்தவன், ”பஞ்சு பஞ்சு நான் பதிவெழுதி ரொம்ப நாள் ஆச்சுடா, நானே எழுதி விடுகிறேன்” என்றான்.

அவன் ஒழுங்காக எழுதவில்லை என்றால் நான் விளக்கமாய் எழுதி விடுகிறேன். அவன் எழுதும் வரை பொறுத்திருக்கத்தான் வேண்டும். என்ன நீங்களும் பொறுத்திருப்பீர்கள் தானே?

- பஞ்சு


தேசத்துரோகிகள் தலைவர்களானால்

செப்டம்பர் 28, 2011

வாழும் வரை பிறருக்கு உபயோகமானவர்களாய் வாழ்தல் வேண்டுமென்பதுதான் இயற்கையின் நியதி. ஏனென்றால் எந்த ஒரு மனிதனும், எந்த ஒரு உயிரும் பிறரின் உதவியின்றி இவ்வுலகில் வாழவே முடியாது. சின்னஞ் சிறு கிருமிகளில் ஆரம்பித்து உலகையே அச்சுறுத்தி அழித்துக் கொண்டிருக்கும் அரக்கன் மனிதன் வரை இது தான் உண்மை.

ஆனால் மனித அரக்கர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பாருங்கள். வாழும் நாட்கள் 100 ஆண்டுகள் என்றால் அதற்குள் அவன் லட்சம் பேர்களைக் கொன்று குவிக்க ஆசைப்படுகிறான். தான் மட்டுமே வாழ வேண்டுமென நினைக்கிறான். பிறரை வாழ விடாமல் தடுக்கிறான்.

ஹாலிவுட் படங்களில் பார்த்திருப்பீர்கள். கிரைம் படங்களில் சாதாரண குடிமகனான ஒருவன் ஹீரோ ஆகி விடுவான்.  நாட்டு மக்களுக்குப் பிரச்சினை என்றவுடன் தன் அறிவைப் பயன்படுத்துவான். நாட்டு மக்களுக்காக தன் உயிரையும் விடுவான். சில கிளாசிக்கான ஹாலிவுட் திரைப்படங்களில் ஹீரோவின் மரணம் படம் பார்ப்பவர்களின் மனதை கனக்கச் செய்யும். அப்படிப்பட்ட ஹீரோயிசத்தை மனிதன் தியாக உணர்வின் மேலீட்டால் வெகு சாதாரணமாய் செய்வார்கள். இவர்களைப் போன்ற மனிதர்களை நாம் காவல்துறையிலும், ராணுவத்திலும் மட்டுமே பார்க்கலாம். நடு ரோட்டில் வைத்து வெட்டிக் கொன்றார்களே ஒரு இன்ஸ்பெக்டர் உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? அவர் யாருக்காக இறந்தார்? இரத்த வெள்ளத்தில் துடிதுடித்தவரைக் காப்பாற்றாமல் நின்று கொண்டிருந்தனரே திமுக அமைச்சர்கள்? இவர்கள் யார் என்று தெரிகிறதா?

(எனக்குப் பிடித்த ஹாலிவுட் ஹீரோ “சீகெல்”. அலட்டிக் கொள்ளாமல் அடிதடி செய்யும் அற்புதமான பாடி லாங்குவேஜ் மற்றும் கழுகின் கூர்மைப் பார்வை கொண்டவர் இந்த சீகெல்)

இன்றைய இந்திய அரசியல்வியாதிகளைப் போன்ற அரக்க மனம் படைத்த மனிதர்களை நீங்கள் எங்காவது பார்த்திருக்கின்றீர்களா?

அன்பு நண்பர்களே, இந்திய அரசியல்வியாதிகளில் மிகுந்த அரக்க குணமும் தான் மட்டுமே வாழ வேண்டுமென்று நினைக்கும் தலைவர்களை நீங்கள் இன்றைக்கும் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள்.

சாலையில் அடிபட்டுக் கிடக்கும் சக மனிதனுக்கும் கூட உதவாதவர்கள் தலைவர்கள் உயர் பொறுப்பில் இருக்கின்ற போது இந்திய மக்கள் உலகத்திலேயே மிக மோசமான ஆட்சியில் இருக்கின்றார்கள் என்பது தானே உண்மை.

ஊழல் என்பது தேசத்துரோகம். ஊழல் செய்யவே இல்லை என்று சொல்லி வரும் தலைவர்கள், பின்னர் கோர்ட் தலையீட்டினால் ஊழல் வழக்குகள் தொடுக்க அனுமதிக்கின்றார்கள். பின்னர் ஊழல்வாதிகள் பற்றி செய்திகள் வெளி வந்தால், அவர் நல்லவர் என்று சர்டிபிகேட் கொடுக்கின்றார்கள். ஊழல் செய்யும் தேசத்துரோகிகள் தலைவரானால் என்ன நடக்கும்?

நமது இந்தியாவைப் பாருங்கள் !

இந்தியத் தாய் துகிலுறிக்கப்பட்டு நட்ட நடு வீதியில் அரசியல்வாதிகளால் கற்பழிக்கப்படுகிறார். ஜன நாயகம் அரசியல்வாதிகளின் துர் நாற்றமெடுக்கும் பேச்சினூடே காணாமல் போய் விட்டது. இந்தியா இன்னும் விடுதலை அடையவே இல்லை.

-  பஞ்சரு பலராமன்


குமுதம் ரிப்போர்ட்டரும் அனாதியும்

ஆகஸ்ட் 1, 2011

மிஸ்டர் குஞ்சு, சமீபத்திய குமுதம் ரிப்போர்ட்டரைப் படித்த போது, இதென்ன குஞ்சு சொன்ன மேட்டராக இருக்கின்றதே என்று பார்த்தால் அதே தான். அழகிய ஆபத்து பதிவில் நீங்கள் சொன்ன அதே மேட்டர் குமுதம் ரிப்போர்ட்டரின் சொல்வதெல்லாம் உண்மையில் இருக்கிறது. நீங்கள் யார்? பத்திரிக்கையாளரா? – சாரதா, பெங்களூர்

குஞ்சுவின் பதில் :

அட நீங்க வேற சாரதா,  எனக்குப் பல நண்பர்கள் இருக்கின்றார்கள். அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது கிடைக்கும் தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அனாதி பிளாக்குன்னா சும்மாவா? தினம் 12,000 க்கும் மேல் பேஜ் ஹிட்ஸ் ஆகிறது. கதையெல்லாம் விட்டுக்கொண்டிருந்தால் வேலைக்காகுமா? சொல்லுங்கள் பார்க்கலாம்.  குமுதம் ரிப்போர்ட் நகலெல்லாம் எடுத்து மெயில் அனுப்பி இருக்கும் உங்களின் கரிசனத்துக்கு நன்றி.

ஆமா, அதென்ன சாரதா, போறதான்னு பெயர் வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். பேசாமல் சாரதாவைச் சுருக்கிச் ”சாரு” ன்னு  வைத்துக் கொள்ளலாம் அல்லவா? சூப்பரா இருக்குல்ல.

சரி நான் பத்திரிக்கையாளரும் அல்ல, பிசினஸ் மேனும் அல்ல. அனாதியின் ஹோட்டலின் சரக்கு மாஸ்டர். தட்ஸ் ஆல்.

- குஞ்சு


கதறினார் கண்ணீர் விட்டார் சி.எம்

ஜூலை 31, 2011

”என்னப்பா, சியெம் என்ன சொல்றாரு?”

“அட, ஆளு சும்மா வெத்து வேட்டுப்பா, என்ன விட்டுறுங்க, அவங்க கிட்டே சொல்லுங்க, நான் வேணா அப்ரூவரா மாறிடுறேன்னு அழுவுறானப்பா?”

“அப்படியா???”

“அதுமட்டுமா, என்னக் கொல்லத்தானே கூட்டிக்கிட்டு போறீங்க, உங்களுக்கு எவ்வளவு காசு வேணும்னாலும் தாரேன், விட்டுடுங்கன்னு அழுது துடிக்கிறானப்பா”

“ஓகோ… !”

“இப்படித்தானே நீங்கள் மொத்தம் மொத்தமாய் போட்டுத்தள்ளியவனெல்லாம் கதறியிருப்பான், இன்னிக்கு உனக்கு சங்குடான்னு, சொன்னாரு ஒருத்தரு, கேட்டானோ இல்லியோ, வேஷ்டியிலே மூத்தி போய்ட்டானப்போ”

“சி எம்முக்கு வேஷ்டியிலே மூத்தியா?”

”கழிஞ்சிட்டான். கர்மம் புடிச்சவன். பதவிக்கு வந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வீயாடான்னு கேட்டாரு ஒருத்தரு, வாரா வாராம் குட்டிகளோடு படுக்கவில்லை என்றால் உனக்கு தூக்கமே வராதாமேன்னு சொல்லிக்கிட்டு பூட்ஸ் காலை ஓங்கினாரு பாரு, ஆளு கீழே விழுந்து காலைப் பிடிச்சிக்கிட்டு கதறுறான்”

“அட, நாந்தான்டா சி.எம் பேசுறேன்னுல்லடா பேசுவான்”

“ஆமா, ஆமா, இவன் ஆடுன ஆட்டம் கொஞ்சமா நஞ்சமா???”

“ஆக யாருக்கெல்லாம் என்கவுண்டர் லிஸ்ட்”

“இவனுகளுக்கு என்கவுண்டர் போட்டா, துப்பாக்கிக்கே கேவலம்பா?, வெளிய வாரதுக்குள்ளே காயடிச்சுருவானுங்க. இல்லேன்னா ஒரு வாரம் மாத்திரையக் கொடுக்கலன்னா, மொத்தமா போயிடுவானுங்க”

“அப்படியா சேதி, ஆக இனி வேட்டுத்தான்னு சொல்லு”

“அப்படித்தான்”

- பஞ்சரு பலராமன்

இது ஒரு சிறுகதை யாரையும் எவரையும் குறிப்பிடுவன இல்லை.


அழகிய ஆபத்து – பஞ்சு vs குஞ்சு

ஜூலை 28, 2011

பஞ்சு :  பாகிஸ்தானில் இருந்து வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சு வார்த்தைக்காக இந்தியா வந்திருக்கின்றாராம். பார்த்தியா குஞ்சு ?

குஞ்சு : எஸ் எம் கிருஷ்ணா இடத்துல நான் இருந்தா, பேசாம காஷ்மீரைக் கொடுக்கிறோம்னு சொல்லிடுவேன் பஞ்சு.

பஞ்சு : அடப்பாவி, ஏண்டா இப்படி இருக்கிறாய்?

குஞ்சு : பின்னே பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இருக்கும் அழகுக்கு உலகத்தையே எழுதி வைக்கலாம். இது என்ன குட்டி காஷ்மீரு புடலங்காய்.

பஞ்சு : நீ உருப்படவே மாட்டியாடா?

குஞ்சு : டேய், பஞ்சு இப்படியெல்லாம் பேசுனா நீயெல்லாம் அயோக்கியன்னு ஒத்துக்குவாங்கன்னு உனக்கு நினைப்பாடா. உனக்கு ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ. நேரு மாமான்னு சொல்றீயே அவரு  ”கேரளா பெண்களைப் போல அழகிகள் உலத்திலேயே இல்லை” அப்படின்னு சொன்னாரு. அவரையெல்லாம் தலைவருன்னு ஒத்துக்கொள்ளும் இந்த உலகம், உண்மையே பேசி, உழைக்கும் குஞ்சுவை ஏண்டா தப்பா பாக்குறீங்க?

பஞ்சு : அவரு செத்துப்போய் எத்தனையோ வருஷமாச்சு, அவரை ஏண்டா உன் அரிப்புக்கு சொரிய அழைக்கிறாய்?

குஞ்சு : பாரு நிவேதிதாவை சொரிந்து விடும் கட்டுரைகளை அவரு பிளாக்குல போட்டுக்கிறாரே அதையெல்லாம் ஒத்துக் கொள்ளுவாய். ஆனால் நான் நேருவை துணைக்கழைத்தால் ஒத்துக் கொள்ள மாட்டாயாடா? என்னாங்கடா உங்க நியாயம்?

பஞ்சு : அடப்பாவி உனக்கு வேற ஆளே கிடைக்கவில்லையாடா. அவ்ரு பாட்டுக்கு ஏதோ கடலை போட்டாரு, அது ஓவரா புகைஞ்சு போச்சுன்னு, மாலையெல்லாம் போட்டுக்கிட்டு பாவத்தைப் போக்க போறாரு அவரைப் போயி ஏண்டா வம்புக்கு இழுக்கிறாய்?

குஞ்சு : என்னாது பாவத்தைப் போக்கறாரா? போடாங்…. சபரிமலைக்கு யாரெல்லாம் மாலை போடுவாங்க ?

பஞ்சு : ஆண்கள் அதிகமாக இருக்கும். அடேய்… அடேய்… என்னடா சொல்ல வாராய்???

குஞ்சு : நீதாண்டா ஒன்னா நம்பரு அயோக்கியன். உன் புத்தி எங்கே போறது பார் ! அவரு சதையை அடச்சே கதையை இளைஞர்கிட்டே பரப்பப் போறாருடா பஞ்சு…

பஞ்சு : ஓஹோ அப்படியா சேதி ! குஞ்சு, மொத மொதன்னு நாம பேசுறதை வாசகர்கள் படிக்கிறாங்க. இதுக்கும் மேலே பேசுனா இவனுங்களுக்கு வேற வேலை இல்லைன்னு நினைச்சுடப் போறாங்க. போதும்டா…

குஞ்சு : அதெப்டி, குஷி மேட்டர் சொல்லாம முடிச்சா என்னைப் பற்றி என்ன நினைச்சுக்குவாங்க. கல்யாணம் ஆன அந்த நடிகை, “ஏங்க, அந்தக் கிழட்டுப்பய வரச்சொல்லி இருக்கான். போயி தடவினாலே போதும், சீக்கிரமா வந்துட்ரேன்”  புருஷனுக்கிட்டே சொல்லிட்டுத்தான் ரகசிய பார்ட்டிகளைப் பார்க்கப் போகிறாராம்.  இதெப்படி இருக்கு பஞ்சு ???

பஞ்சு : அடேய் என்னடா இது கருமம் ????

குஞ்சு : அய்ய்… கேட்டுட்டு கருமமாடா போடாங் …

-

இத்துடன் சம்பாஷனைகள் முடிந்து விட்டன.


குத்தியானந்தா, குஞ்சிதாவிற்குச் சவால்

ஜூலை 15, 2011

குத்தியானந்தாவிற்கும், குஞ்சிதாவிற்கும் இந்தக் குஞ்சு சவால் விடுகிறான். சாதாரண ஆட்களாகிய குன் டிவியின் மீதும், ஏதோ பத்திரிக்கை வைத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் முக்கீரன் கூபால், குல்லக்கை குமராஜ் மீது குற்றம் சுமத்துகின்றீர்களே, உங்களுக்கு தைரியம் இருக்கிறதா என்று இந்தக் குஞ்சு கேட்கிறான்.

அகில உலகமே போற்றும், இலக்கிய உலகின் பிதாமகன், புரட்சி எழுத்தாளர் ஜட்டிகளே போற்றும் ஜால எழுத்தாளர், எனது அகில உலக ஆசான், குரு பாரு குவேதிதா மீது புகார் கொடுக்கவில்லையே ஏன்? குரசம், குல்லாபம், குசாமியார் என்று தொடர் எழுதிய பாருவை விடவா, குன் டிவியும், முக்கீரனும் உங்களைக் கேவலப்படுத்தின? நீங்கள் இருவரும் இருந்த வீடியோவை மட்டும் தானே மேற்படியாளர்கள் போட்டார்கள். ஆனால் ஆசான் அதற்கும் மேல் அல்லவா எழுதித் தள்ளினார்.

பாருவிடம் வழக்கு வைத்துக் கொண்டால், பின் பக்கம் ஆப்பு(ஹீ..ஹீ.. சும்மாச்சுக்கும்) அடித்து விடுவார் என்றுதானே அவர் மீது போலீஸில் புகார் கொடுக்கவில்லை? பாருவின் நண்பரின் துப்பாக்கியால் தங்களையும் சுட்டு விடுவார் என்று தானே பயந்து போய் போலீஸில் வழக்கினை தரவில்லை?

பாவம் குன் டிவியும், முக்கீரனும். ஏதோ போட்டோம், பிழைத்தோம் என்று இருப்பவர்களைச் சந்திக்கு இழுத்து விடுகின்றீர்கள். அவர்கள் எல்லாம் ஏழைகள் அய்யா ஏழைகள்.

கண்ணில் போடும் கூலிங் கிளாசே 50,000 ரூபாய்க்குப் போடும் என் ஆசானை உங்களால் தொடக்கூட முடியாது என்று இந்தக் குஞ்சு சொல்கிறான். அதுமட்டுமா 10 ரூபாய்க்கு ஜட்டி போடும் இந்தியாவில், 3000 ரூபாய் ஜட்டி போடும் ஆசானைப் பகைத்துக் கொண்டால், உலகமெங்கும் இருக்கும் என் ஆசானின் அடிப்பொடிகளை வைத்து, அடித்து தூள் கிளப்பி விடுவார் என்று பயந்து தானே இவர் மீது நீங்கள் புகார் கொடுக்கவில்லை?

என் ஆசான் மீது வழக்குத் தொடுக்க தைரியம் இல்லாத நீங்கள் எல்லாம் எதற்கு பேட்டி கொடுக்கின்றீர்கள்? உங்களுக்கு தைரியம் இருக்கிறதா என்று கேட்கிறேன். எங்கே ஒரு புகாரைக் கொடுங்கள் பார்ப்போம்?

பாவம் இந்தியாவிலேயே வசிக்க முடியாமல் ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் குன் டிவி மொதலாளியையும், முக்கீரனையும் ஏனய்யா தொடர்ந்து துன்பப்படுத்துகின்றீர்கள்? உங்களுக்கு மனச்சாட்சியே இல்லையா? பாவம் அவர்களை விட்டு விடுங்கள்.

ஜாலியாய் டென் டவுனிங்கில் தண்ணி அடித்து விட்டு, குட்டியின் ஜட்டியைத் தடவிக் கொண்டிருக்கும் என் ஆசான் மீது உங்களுக்கு தில் இருந்தால் புகார் கொடுங்கள் பார்ப்போம்.

இப்படிக்கு

உங்களின் மனம் கவர்

குஞ்சாமணி

குறிப்பு : இது யாரையும் எவரையும் குறிப்பன இல்லை. ஜாலியாய் ஒரு சிறுகதைப் பதிவு. இப்பதிவு மூலம் யாருக்காவது மனம் வருத்தமேற்பட்டால், தனி மெயிலில் தன் புகாரைத் தெரிவித்தால் மெயில் வந்த 48 மணி நேரத்திற்குப் பிறகு பதிவு நீக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


Follow

Get every new post delivered to your Inbox.

Join 108 other followers