சேரில் இருந்து எழும்பிய குஞ்சு, எதிரே இருந்த போட்டோவைப் பார்த்ததும் அப்படியே உட்கார்ந்து கொண்டான். எழுந்தவன் வேலை முடிக்காமல் விடமாட்டானே, இது என்னடா கர்மம்? செவத்துல வச்சு தேய்க்கிறாப்பல என்று நினைத்த குஞ்சு அந்தப் போட்டோவை கொலவெறி பார்வையில் பார்த்தான்.
![]()

”ஏண்டா குஞ்சு, நல்லாத்தானேடா இருக்கு” என்றால், ”போடா ஒம்போது” என்றான். ஏம்பா வாசகா, உனக்கு அப்படியா இருக்கு?
தனுஷ் ஏன் கொலவெறி கொலவெறின்னுப் பாடினாருன்னு கேட்டா, பக்கத்துல்ல ஐஸ்வர்யாவை வச்சுக்கிட்டு வேறென்ன கான கீதமா பாடுவாருன்னு கேக்குறான் குஞ்சு.
அவனவனுக்குத்தானே தெரியும் காதல், கலைப்பு, குத்து, படுக்கையெல்லாம்னு சொம்பு தூக்கி தலைகீழா நின்னு பேசினான். யார்ரா இவன்னு கேட்டா, நாந்தாண்டா உங்கப்பன், ஊருக்கெல்லாம் சித்தன் என்கிறான் அந்தச் சொம்பு தூக்கி.
காசைப் பாத்தா, கஞ்சியைப் பத்திய கவலை என்னடான்னு கேட்கிறான் பினுஷ்சூ. காசேதான் சாமாண்டா என்கிறான் கூடச் சேர்ந்து.
கொலவெறி எதுக்கு வரனும்? அதான் வந்துடுச்சே பின்னே என்னாங்கிறானுவ மார்கெட்டுல. பினுஷ் பாடுன பாட்டைக் கேட்டா, சிரி சிரின்னு சிரிக்கிறானுவ.
வறட்டுப் பிரதேசத்துல புல்லு மொளச்சா எப்படி இருக்கும்னு கேட்டா, அதுக்கு ஏழாம் அறிவுப் பார்க்கனும்டாங்கிறானுவ. ஏழாம் அறிவு ஏதோ ஒரு கேம் அதான் வீடியோ கேம் அதைப் பார்த்து அப்படியே டப்பா அடித்தானாம் அந்த முள்ளா. பேப்பரில கூட வந்துச்சே படிக்கலையான்னு கேட்டா, நானென்ன எப்போ பார்த்தாலும் கவுச்சி வாடையடிக்கும் பேப்பரையே உத்து உத்தா பாப்பேன்னு கேட்கிறான் முள்ளா.
பயபுள்ளே, கொலவெறி கொலவெறின்னு பாடி, அனாதி பிளாக்குல கொலவெறி ஏற்படுத்தும் பதிவ எழுத வச்சுட்டானேன்னு நினைக்கிற குஞ்சின் ரசிக மகாப் பெருமக்களே, இது குஞ்சு எழுதியது. வாக்கியங்களை மாற்றி மாற்றிப் போட்டுப் படித்துப் பாருங்கள். புரியும்.
இது ஒரு அட்சரசுத்தமான இலக்கியப் பதிவு.
- குஞ்சு
அனாதி பதிப்பித்தது. 


