முன்பொரு காலத்தில் பிரபல்யமாக இருந்த முத்துப்பல் அழகி நடிகையின் சுவாரசியமான கதை இது. நடிகைகளை படத்தில் புக் செய்யும் போது சில பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அது தொழில் ரகசியமென்பதால் வெட்டவெளியில் போட்டு உடைக்கக் கூடாது என்ற கண்டிஷனோடுதான் இச்சம்பவங்களை ஒரு ப்ரடக்ஷன் பாய் சொன்னார். ஆகவே அந்த தொழில் ரகசியங்கள் இப்போதைக்கு ரகசியமாய் இருக்கட்டும்.
முத்துப்பல் அழகி அவ்வளவு பிரபல்யம் இல்லாத காலம். ஒரு படத்தில் நடிக்க தயாரிப்பாளரும், இயக்குனரும் நடிகையின் வீட்டுக்குச் செல்லும் முன்பு அவரின் மேனேஜரிடம் பேசி இருக்கின்றார்கள். அவர் பதினைந்து லட்சம் பேசியிருக்கிறார். (இன்கம்டாக்ஸ் ஆஃபீசர்களுக்கு இப்படிப்பட்ட வருமானமெல்லாம் கண்ணுக்கே தெரியாது போல, இந்தியாவின் கடனை அடைக்க வேண்டுமென்றால் நடிகை, நடிகர்களின் கணக்கை ஆராய்ந்து வரி வாங்கினாலே போதும். வடிவேலு 130 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போட்டிருக்கிறார் என்கிறது ஒரு செய்தி. அரசு நிச்சயம் கைப்படுத்தி விடும் அல்லது அதற்குப் பிரதிபலனாக வடிவேலு ஏதாவது செய்தாக வேண்டும்)அதற்கு தயாரிப்பாளர் ஒத்துக் கொள்ளவில்லை.
நடிகையிடம் சென்று பேசினார்கள். ஏழு லட்சத்திற்கு ஒத்துக் கொண்டார்கள். சும்மாவா 30 நாளுக்கு ஏழு லட்சம் என்றால் கசக்குமா? ஆனால் நடிகைக்கோ சற்று எரிச்சல். பதினைந்து லட்சம் கிடைக்கவில்லையே என்ற எரிச்சலில் இருந்திருக்கிறார். இதைச் சரியாக மோப்பம் பிடித்து விட்டாராம் மேனேஜர். அவுட்டோர் ஷீட்டிங் தேதி முடிவு செய்து, ஃப்ளைட் டிக்கெட் போட்டு அனுப்பி இருக்கிறார் தயாரிப்பாளர். மேனேஜர் நடிகையிடம் ஃப்ளைட் டிக்கெட்டைக் கொடுக்கச் சென்ற போது கூடவே தயாரிப்பாளரின் சொந்தக்காரரையும் அழைத்துச் சென்று அவுட்டோர் ஷூட்டிங் செல்வதற்கான ஃப்ளைட் டிக்கெட்டையும், தேதியையும் சொல்லி விட்டு வந்திருக்கிறார்கள்.
பட யூனிட் அவுட்டோர் சென்று விட, நடிகை எப்போது வருவார் என்று கேட்க தயாரிப்பாளர் நடிகையை அழைத்திருக்கிறார். நடிகை சொல்லியிருக்கிறார், என்ன சார் விளையாடுகின்றீர்களா, இதோ ஒரு மணி நேரத்திற்கு முன்னால் தான் ஃப்ளைட் டிக்கெட்டே கிடைத்தது, நானெப்படி வரமுடியும்? ஆகவே நாளைக்கு வருகிறேன் என்றுச் சொல்லியிருக்கிறார். போனைக் கட் செய்த தயாரிப்பாளர் மேனேஜரை போனில் பிடித்து உலகில் என்னென்ன கெட்ட வார்த்தைகள் இருக்கின்றனவோ அத்தனை வார்த்தைகளாலும் அவரை வறுத்து எடுத்திருக்கிறார். அனைத்தையும் பொறுமையாக கேட்ட மேனேஜர் சார் ஒரு நிமிடம் என்றுச் சொல்லி தயாரிப்பாளரின் சொந்தக்காரரை அழைத்துப் பேசும்படிச் சொல்ல நடிகையின் சித்து விளையாட்டு தயாரிப்பாளருக்குத் தெரிய வந்திருக்கிறது. ஆள் பெரிய ஆள். ஆள், படை, அம்பு என்று அதகளம் செய்யக்கூடிய வல்லமை கொண்டவர்.
மீண்டும் நடிகையை போனில் அழைத்து, இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள் நீ ஷூட்டிங் ஸ்பாட்டில் இல்லையென்றால் தமிழ் சினிமாவில் நீ இருக்கவே மாட்டாய் என்றுச் சொல்லி விட, நடிகைக்கு மூத்திரம் ஜட்டியோடு வழிந்து கால்மூலமாய் தரையில் பரவி விட அதை மோப்பம் பிடித்த ரசிகர்கள் (வேண்டாம் இத்துடன் நிறுத்தி விடலாம்). எங்கோ ஒரு காரைப் பிடித்து காற்றின் வேகத்துக்கும் மேலாய் ஷூட்டிங் சென்று சேர்ந்தாராம்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் தயாரிப்பாளர் நடிகையைத் தனியாக அழைத்து “ இந்தமாதிரி இன்னொரு தடவை செய்தாயென்றால் “ என்று எச்சரித்து இருக்கிறார். அன்றிலிருந்து அந்த நடிகை ஷூட்டிங் முடியும் வரை ஜட்டியே போடவில்லையாம். ஏனென்றால் அவருக்கு தன் ஜட்டி மீது அவ்வளவு ஆசையாம். அதுவும் ஆயிரக்கணக்கில் காசு கொடுத்து வாங்கிய ஜட்டி, மூத்திரத்தால் நனைந்து விட்டால் என்ன ஆகும் தெரியுமா?
அடுத்து இதே நடிகையின் சுமோ காருடன் இவரையும் காதலித்த இயக்குனரின் கதையும் வரும் !
- குஷியுடன், குஜாலுடன், கும்மாளத்துடன்
உங்களின் மனம் கவர் குஞ்சு
அனாதி பதிப்பித்தது. 