பாரதப் பிரதமர் மோடி இலங்கையில் மலரபோகும் சுயாட்சி

ஏப்ரல் 14, 2013

எனது நண்பரொருவர் மெட்டீரியல் வாழ்க்கையினின்று தனியே தாமரை இலைத் தண்ணீர் போல வாழ்பவர். அவரைக் காணச் செல்வதுண்டு. இப்படியான ஒரு நாளில் அவர் என்னிடம் சொன்னதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

பாரதி ஒரு சித்தன். அவனைப் போல சிவனைப் பற்றி எவரும் விவரித்திருக்க முடியாது என்றார். இதோ பாடல்

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ? இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்; இந்தக் காட்சி நித்தியமாம்.

- பாரதியின் இப்பாடலை ஒரு நிமிடம் படித்துப் பாருங்கள். சிவனைப் பற்றி அவனின் பாடல் புல்லரிக்க வைக்கிறது இல்லையா?

அடுத்து அவர் சொன்னது தான் ரகளை.

மோடி பாரதத்தின் அடுத்த பிரதமர் ஆவார். அவரின் ஆட்சியில் இலங்களையில் மா நில சுயாட்சி மலரும் என்றார். இதற்கு கொஞ்ச நாள் ஆகும் என்றாரவர்.

பொறுத்திருப்போம். காத்திருப்போம்.

- அனாதி


வெகு விரைவில் பதிவுகள் தொடரும்

ஜனவரி 28, 2013

அனாதியும் நண்பர்கள் வட்டாரமும் வேலைகளில் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருப்பதால் பதிவு எழுத நேரம் கிடைப்பது அரிதாக இருக்கிறது. எவ்வளவோ விஷயங்களை பகிர்ந்து கொண்டு, நண்பர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற ஆவல் இருந்தாலும், நேரமின்மை தடுக்கிறது. விரைவில் எழுதுகிறோம். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

- அனாதி மற்றும் நண்பர்கள்.


கலைஞரின் வாழ்க்கை குறிப்பு

ஓகஸ்ட் 18, 2012

விடிகாலையில் போன் அழைத்தது. யாரென்று பார்த்தால் நண்பர்.

“டேய் சப்ளையரு, ஆர் பி ராஜ நாயஹம் எழுத ஆரம்பித்திருக்கிறார்” என்றார் நண்பர். ( என் பெயரைச் சொல்லுவதில் உனக்கு என்னடா அவ்வளவு காண்டு? சப்ளையர் சப்ளையருன்னு காய்ச்சி எடுக்கிறாயே நீ – இது எனது நண்பருக்கு )

”அட ! அப்படியா?”

இப்பதிவு எழுதக் காரணம் ஆர்பிராஜநாயஹம் அவர்கள் மட்டுமே ! சுவாரசியமான எழுத்துக்கும், ஏகப்பட்ட சரக்குக்கும் சொந்தக்காரர் அவர் ஒருவர் தான் இருக்கிறார்.

ஆர்பிரா எழுத வந்து விட்டால் எழுத்துலகில் ஒருத்தன் கூட தான் ஒரு எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்ளவே மாட்டார்கள். ஓடியே போவார்கள். எழுத்து என்ன பிராந்திக் கடையில் கிடைக்கும் சரக்கா? சரக்கு அடிக்கிறதைப் பற்றி எழுதியே “ஏய் நானும் ஒரு எழுத்தாளர்னு சொல்லிக்கிட்டு திரிவதற்கு”.

ஆர்பிரா சார் ! முதலில் உங்களுக்கு ஒரு சலாம்

கலைஞரின் வாழ்க்கை பற்றிய ஒரு பதிவினைப் படித்தேன். இதோ அதற்கான இணைப்பு கீழே. கலைஞர் தன் வாழ்க்கையில் தோற்றுப் போய் விட்டார். அதன் முழு உண்மையும் கீழே இருக்கிறது.

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_02.html

அன்பு நண்பர்களே எனது தளத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பேர் வருகின்றீர்கள். அப்படியே ஆர்பி. ராஜநாயஹம் சார் தளத்திற்கும் சென்று படித்து விடுங்கள் என்று உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

தகவல் பெட்டகமாய் கொட்டும் அவரின் எழுத்தை வாசிப்பது மட்டுமின்றி பின்னூட்டமும் இட்டு அவரை மேலும் மேலும் எழுத தூண்டுங்கள். அதன் பலன் கிடைப்பது நமக்கு மட்டுமே !

- அனாதி


குஞ்சுவிற்கு ஏற்பட்ட சந்தேகம்

ஓகஸ்ட் 6, 2012

சமீபத்தில் பிரசன்னா, சினேகா திருமணத்தையும், தமிழன் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜாவின் திருமணத்தையும் இல்லாத ஒன்றையும் இருப்பதாகக் காட்டி அலப்பறை செய்யும் விஜய் டிவியில் கண்டு களித்தேன்.

நன்றி மறந்தவர்கள் என்றால் இந்தச் சினிமாக்காரர்களைத் தவிர வேறு எவரையும் கை காட்டி விட முடியாது. தன் மகள் கல்யாணத்திற்கு ரசிகர்களுக்கு விருந்து போடுவேன் என்று அலப்பறை செய்த ரஜினி முதல் உதாரணம்.இதுவரையிலும் அவர் ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை.  தான் வாழும் சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டுமென்பார்கள். ஆனால் ரஜினி ஏகப்பட்ட இளம் வாலிபர்களின் நுரையீரலை பொசுக்கி அவர்களைச் சாவின் படுகுழியில் தள்ள சிகரெட் கம்பெனிக்கு வியாபார உத்தியாய் செயல்பட்டு ஸ்டைல் என்ற பெயரில் ஏமாற்றினார்.

கோடி கோடியாய் கொட்டி கொடுக்கும் ரசிகனை தூசி அளவுக்கு கூட மதிக்காதவர்கள் சினிமாக்காரர்கள் என்பதற்கு இன்னும் எத்தனை எத்தனையோ உதாரணங்களை காட்டலாம். தமிழ் பதிவுலகில் படம் வெளிவந்த உடனே சென்று படம் பார்த்து விட்டு விமர்சனம் எழுதும் சிலரைப் பற்றி வேதனைதான் ஏற்படுகிறது. தமிழ் சினிமாவின் தாக்கத்தால் உலகத்திற்கே முன்னுதாரணமாய் விளங்கிய தமிழன் எப்படியெல்லாம் சீரழிந்து கொண்டிருக்கிறான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. நன்கு படித்து, உண்மைகளை அலச தெரிந்தவர்களே இக்காரியங்களைச் செய்யும் போது மனதில் எரிச்சல் தான் ஏற்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

கவனிக்க : எங்களது “எந்திரன் திரைப்படத்தின் விமர்சனத்தை”

சிரஞ்சீவி காரு மகனுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்டதாக சர்ச்சையில் சிக்கி இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையின் பிரதாப் ரெட்டியின் பேத்தியை மணமுடிக்கின்றார்கள். ரஜினியின் மகள்கள் திருமணத்தையும் பற்றியும் ஒரு பார்வையை மனதுக்குள் ஓட்டி விடுங்கள். ஜாதி, மதம் என்பதெல்லாம் பணம் இருக்கும் இடத்தில் இருக்கவில்லை என்பதையும் மனதில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு இடத்தில் பணம் பணம். சொர்க்கலோகம் போல ஜோடனை செய்திருந்தார்கள். பணமிருக்கிறது என்பதற்காகத்தானே இத்தனை அலப்பறைகளைச் செய்கின்றார்கள். நான் கேட்கின்றேன்,

இப்படியெல்லாம் திருமணம் செய்த பிறகு மேட்டர் நடக்கும் தானே? அப்போது இவர்கள் வேறு என்ன வித்தியாசத்தைக் காட்டப் போகின்றார்கள்? மேலே, கீழே இரண்டு என்று மொத்தமாய் மூன்று ஓட்டைகளும், ஒரே ஒரு பயலும் தானே இருக்கும்? காசு இருக்கிறதே என்பதற்காக வேறு என்ன டிபரண்ட்டை இவர்களால் செய்ய முடியும்? அப்படி ஏதேனும் டிபரண்ட் இந்த குஞ்சுக்கு தெரியாமல் இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டு விட்டது.

- குஞ்சாமணி


இன்பரசம் – குஞ்சாமணியின் புதிய பகுதி

பிப்ரவரி 9, 2012

அன்பு நண்பர்களே,

விரைவில் தமிழகத்தின் தமிழர்கள் அகதிகளாய் மாற இருக்கின்றார்கள். வேறு வேறு மாநிலங்களுக்கு பிழைப்புத் தேடிச் செல்லும் நிலையில், காய்ந்து போன வறட்டு எலும்புகளாய் குத்தும் நினைவுகளில் குளிர்ச்சி பொறுந்திய பசுமை நினைவுகளாய், தகிக்கும் கோடையில் வீசும் தென்றலாய் இருக்கும் படியாய், குஞ்சாமணியாகிய உங்களின் மனம் கவர் நண்பன், உங்களுக்காக புதிய பகுதி ஒன்றினை ஆரம்பித்து எழுத இருக்கிறேன். இது எத்தனை நாள் தொடரும் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.

இன்பரசம் – பக்தி பரவசம் சொட்டும் அருமையான ஆஆஆஆஆன்மீக பதிவுகளாய் மலர இருக்கிறது.

சென்னை தவிர்த்த பிற மாவட்ட ரசிகர்களுக்காய் எழுதப்பட்டும் இந்த இன்பரசம் உங்கள் கனவினை விட்டு விலகவே விலகாது என்று அறிவிக்கின்றேன்.

- தொடர்ந்து இணைந்திருங்கள்

உங்கள் மனம் கவர்

குஞ்சாமணி


பில்லியர்ட்ஸ் (20+)

ஜனவரி 25, 2012

வணக்கம் நண்பர்களே,

நீண்ட நாளாய் இந்தப் பக்கமாய் வர முடியவில்லை. வேலைப்பளு அதிகம். வாசகி ஒருவர் மெயிலில் காதல் கடிதமெல்லாம் எழுதி அதை அனாதி பார்த்து, இந்த வேலையெல்லாம் வைத்து கொண்டால் “ நடப்பதே வேறு” என்று மிரட்டி விட்டார். நாமென்ன “ பாரு நிவேதிதா கூட்டமா?” என்று வேறு நக்கல். எதற்கு யாரை கம்பேர் செய்வது என்றே தெரியவில்லை. நானும் பாருவும் ஒன்றா? நீங்களே சொல்லுங்கள். 60 வயது வயாகரா மனுஷனை, என்னுடன் அனாதி ஒப்பிட்டதால் கடுப்பு வந்து விட்டது மை ஃப்ரண்ட்ஸ். அதனால் தான் கொஞ்சம் இந்தப் பக்கமாய் வர முடியவில்லை.

குட்டிகள் எல்லாம் படு குஜாலாய் காசு பண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். நாமெல்லாம் வாயில் கழுதை போவது கூட புரியாமல், எச்சிலை வடித்துக் கொண்டிருக்கிறோம். நடிகைகளில் யார் அடிக்கடி மேட்டர் பண்ணிக் கொண்டிருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க அனாதி எனக்கொரு டிப்ஸ் கொடுத்தார். அதை பலருடன் ஒப்பிட்டுப் பார்த்து அவர் சொன்னது சரிதான் என்று கண்டுபிடித்தேன். அதை சமூகத்தில் ஒப்பிட ஆரம்பித்த போது, எனக்கே பயமே வந்து விட்டது. அது என்ன டிப்ஸ் என்பதை விரைவில் ஒரு கதையாக எழுதுகிறேன். அப்போது படித்துக் கொள்ளுங்கள். ஓகே !

சென்னையின் முக்கியமான பிளாசாவில் திருமணமான பெண்கள் தங்களின் ஃபாய் பிரண்டுகளை தேர்ந்தெடுக்கின்றார்கள். நேரில் பார்த்து விட்டு, புஸ்டி புஸ்டியான மாமிகளையும், அவர்கள் வரும் கார்களையும் பார்த்து வயிற்றில் புஷு புஷு என்று புகை வந்து கொண்டிருக்கிறது. அனாதியின் ஸ்ட்ரிக்ட் உத்தரவின் பேரில்  அண்ணா வழியில் சென்று கொண்டிருக்கிறேன். அது என்ன அண்ணா வழி என்று கேட்காதீர்கள். விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கடந்த வாரம் திருச்சியில் அபார்ட்மெண்ட் கட்டிக் கொண்டிருக்கும் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் ஒரு மேட்டரை( ஏற்பாடு செய்தது ஒரு பிரபலம்) தள்ளிக் கொண்டு மஜா செய்து விட்டு கழட்டி விட்டு விட்டார். இந்தப் பத்திரிக்கையாளருக்கு ஒரு முறை டீல் பண்ணியதை மறுமுறை டீல் செய்வது பிடிக்கவே பிடிக்காதாம்(முன்னரே இது பற்றி எழுதி இருக்கிறோம்). இதுவரை அவர் எத்தனை டீல் போட்டிருப்பார் என்று ஒரு முறை நினைத்துப் பாருங்கள். நீங்களும் நானும் கம்ப்யூட்டரில் உட்கார்ந்து கொண்டு “வெறும் படத்தினை மட்டும்” பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பில்லியர்ட்ஸ் என்று தலைப்பிட்டு எதை எதையோ எழுதிக் கொண்டிருக்கின்றாயே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. பில்லியர்ட்ஸ் தான் எனக்குப் பிடித்த விளையாட்டு? ஏனென்று தெரியுமா? பதில் சொல்வோருக்கு “அந்த டிப்ஸ் உடனடியாக அனுப்பப்படும்”. ஓகே. இப்போது உங்களுக்கு வித்தியாசமான டாட்டா காட்ட விரும்பும் உங்களின் மனம் கவர் – குஞ்சாமணி


மனிதனின் அழிவிற்கு அவனே காரணம்

திசெம்பர் 31, 2011

தான் வாழ பிறரை ஏமாற்றும் பேர்வழிகள் மனிதர்களில் 100க்கு 99 பேர் இருக்கின்றார்கள். எங்கு நோக்கினும் சுய நலம். தன் சக மனிதனைக் கொன்று விட்டு, பதவி அதிகாரத்தில் இருக்கத் துடிக்கும் அழியப் போகும்  மானிடர்கள் இவ்வுலகிலே கோடானு கோடி பேர் இருக்கின்றார்கள். எத்தனை எத்தனை மதங்கள் இருக்கின்றன. இருந்தும் என்ன பயன்? கோவிலுக்கு போவோர் தான் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றார்கள். படிக்காதவனை விட படித்தவன் தான் தன் சக மனிதனை அழிக்கின்றான். சர்ச்சுக்குப் போகும் அமெரிக்கர்கள் தான் உலகின் பெரும்பான்மையான மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இயேசுபிரான் என்ன சொல்லி என்ன புண்ணியம்? கம்யூனிசம் பேசும் சீனாவில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கின்றார்கள்.  கம்யூனிச தத்துவத்தை விட மனிதன் மேலானவன் இல்லையா? தத்துவமும், கொள்கையும் மனிதனின் நல் வாழ்வுக்குதானே ஒழிய, மனிதனை அழிக்கவா இருக்கின்றன?

அன்பார்ந்த அனாதியின் வாசகர்களே, இதோ ஒரு பாடல் உங்களுக்காக. கேட்டு விட்டு மனதுக்குள் என்ன தோன்றுகிறதோ அதன்படி செய்யுங்கள்.

- பஞ்சு.


வெள்ளரி, கேரட் – வாசகியின் கடிதம் (18+)

திசெம்பர் 12, 2011

சார், நான் உங்களின் பிளாக்கின் நீண்ட நாள் வாசகி. டெக்ஸ்ஸாலில் வசிக்கிறேன். ஒரு மாலைப்பொழுதில் உங்களின் பிளாக்கினைப் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அன்றிலிருந்து விடாமல் படிக்கிறேன்.

சமீபத்தில் கேரட், வெள்ளரி போன்றவற்றைப் பெண்கள் கையில் கொடுக்காமல் , அதை நறுக்கித் தான் கொடுக்க வேண்டுமென்றும், அது ஆண் குறி போல இருக்கிறது என்றும் ஒருவர் சொன்னதாக செய்தியில் படித்தேன்.

பெண்களை அடிமை என்று தானே நினைத்து, அவர் அவ்வாறு சொல்லி இருக்கிறார். இன்னும் எத்தனை ஆண்டுகாலம் தான் பெண்களை வெறும் போகப் பொருளாகவே இந்தச் சமூகம் பயன்படுத்தப் போகிறது?

மயக்கம் என்ன திரைப்படத்தில் ஒரு காட்சியைக் கண்டேன். அதில் தனுஷ் தன் நண்பனிடம் சொல்வான் (இவனுக்கெல்லாம் ர் கேடா?). கேவலம் ஒரு பெண்ணுக்காகவா நான் இப்படி நடந்து கொண்டேன் என்பான். அண்ணனும், தம்பியும் பெண்களே இல்லாமல் படம் எடுக்க வேண்டியதுதானே? இவர்களைப் போன்றவர்களையாவது மன்னித்து விடலாம். வெளிச்சத்தில் என்ற பெயரை வைத்துக் கொண்டு, நீங்கள் போட்டு வரும் படங்களை பார்க்கச் சகிக்கவில்லை. நீங்களுமா இப்படி என்பதால் இக்கடிதம் எழுதுகிறேன்.

- உமா , டெக்ஸாஸ்

உமா, இதென்ன பயங்கரமான வேர்ட் ஃபயரா இருக்கிறதே உங்கள் கடிதம். அவுத்துப் போட்டா அவளை செலிபிரட்டி என்கிறது நாம் வாழும் சமூகம். ஸ்ப்ரிட்னி பேண்டை அவிழ்த்தால் அகில உலகப் பிரபலம் ஆகின்றாள். நீச்சலுடை போட்டு ஒய்யார நடை நடந்தால் அவள் உலக அழகி ஆகின்றாள். கண்டவர்களிடம் படுத்து பிள்ளை பெற்றுக் கொண்டு, அரசியலில் சேர்ந்தால் அவள் தலைவி ஆகின்றாள். ஒழுக்கம் இன்றி கிடப்பதை இச்சமூகம் விரும்புகின்ற போது, வெள்ளரிக்காயை ஆண்குறி என்றுதான் சொல்வார்கள். குடி என்கிற கேட்டினை இன்று சமூகத்தின் வழக்கமாய் மாற்றிய சினிமாவையும், அரசியல்வாதிகளையும் நீங்கள் உயர்ந்தவர்கள் என்கின்ற போது, இதையும் நீங்கள் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும். உலகின் மதங்கள் அனைத்தும் “அன்பே கடவுள்” என்கின்றன. அன்பைப் போதித்த புத்தர் மதத்தை தழுவும் இலங்கையும், சீனாவும் மனிதர்கள் கேவலம் மிருகங்களை விட கேவலமாய் நடத்துகின்றன. இதையெல்லாம் ஒத்துக் கொண்டால் அவர் சொன்னதும் சரிதான்.

நாங்கள் படம் போடுவது ரசிக்க அல்ல, வெறுப்பை உருவாக்குவதற்கு. இது ஒரு உளவியல் பிரச்சினை. இன்று உலக மக்களின் பெரும்பான்மையோர் “அரசியல்வாதிகளை” வெறுக்க ஆரம்பித்திருக்கின்றனர். அதே போல நாளடைவில் “சினிமாவும்” வெறுக்கத்தக்கதாய் அல்லது மாற்றப்பட்ட ரசனை உடையதாய் மாற வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்.

உமா, உங்களுக்குத்தெரியுமா? சினிமாவில் தான் பெண்கள் அடிமைகளை விட கேவலமாய் சீரழிக்கப்படுகின்றார்கள். சிதைக்கப்படுகின்றார்கள். பலராலும் அனுபவிக்கப்படுகின்றார்கள். சினிமா பெண்களை மேட்டுக்குடி விபச்சாரத்தில் தள்ளுகின்றது. பெண்கள் அழியக் காரணமாய் இருக்கிறது சினிமா. ஆனால் நீங்கள் சினிமாவை விரும்புவதை விடுவதில்லை. ஆகவே திருந்த வேண்டியது நீங்கள், நாங்கள் அல்ல.

யாருக்கு மரியாதை கொடுக்க வேண்டுமென்று நீங்கள் முடிவு கட்டிக் கொள்ள வேண்டும். அமெரிக்க அதிபர் வந்தால் அவரைக் காண க்யூவில் நிற்கும் மனிதர்கள் மாற வேண்டும். அவர் ஒன்றும் சாதாரண தலைவர் அல்ல. போர் என்ற பெயரால் உலகில் அதிக மக்களை கொன்றொழித்த மகா பாதகன் அவர்.  ஆனால் அவரைத்தான் உலகம் பெரும் தலைவர் என்று கொண்டாடுகின்றது. கேவலமாய் இல்லை?????

இதை நீங்கள் மாற்றப் போராட வேண்டும். உங்கள் பிள்ளைகளிடம் சொல்லிக் கொடுங்கள். தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டுமென்பதை? யார் உயர்ந்தவர் என்பதை? அதை எப்படி கண்டுபிடிப்பது என்பதை? அனாதி அதைத்தான் செய்து வருகின்றது. நீங்களும் உங்கள் குடும்பத்தில் அதைச் செய்ய முயலுங்கள். வாழ்த்துக்கள்.

- குஞ்சாமணி குலசேகர பாண்டியன்


குஞ்சாமணிக்குப் பிடிக்காத படம்

நவம்பர் 12, 2011

அன்புக் குஞ்சாமணியே,

மால்களில் டீக்காக டிரஸ் செய்து கொண்டு, கண்ணில் ஹை வேல்யூ கிளாஸுடன், கை கால்களில் தங்க செயின்களுடன், பிதுங்கும் பர்சின் கனபரிமாணத்தில், ஃபார்ச்சூனர் காரில் நீ கொத்திப் போகும் எத்தனை எத்தனையோ பெண்களின் சார்பாய், உனக்கு இந்தப் படம் சமர்ப்பணம். – பஞ்சு


குஞ்சின் கூல் களேபரம்

ஒக்ரோபர் 8, 2011

போட்ட சரக்கின் போதை தெளியாமல் பஞ்சுவின் போன் காலை அட்டெண்ட் செய்ததால் வசமாக சிக்கிக் கொண்டேன். எழுதவில்லையே என்று தினமும் அச்சுறுத்தல் வேறு செய்கிறான். வேறு வழியே இல்லை என்பதால் அந்த சமாச்சாரத்தை எழுதித் தொலைக்கிறேன். படித்து விட்டு நீங்களும் உருப்படாமல் போங்கள். என் வயெத்தெரிச்சலைக் கொட்டிக்கொண்ட பஞ்சுவே நீ ஒழிக.

மசாஜ் கிளப்பிற்கு போக வேண்டுமென்ற நீண்ட நாள் ஆவல், பிரபல பத்திரிக்கையாளர் நண்பரின் உதவியால் கடந்த வாரம் நிறைவேறியது. கொஞ்சூண்டு பணம். முதலில் குப்புறப் படுக்க வைத்து கண்ணில் பூ வெல்லாம் வைக்கின்றார்கள் பிசை பிசையென்று பிசைந்து விட, அந்த குஷி உணர்ச்சியெல்லாம் காணமல் போய் விடுகிறது. பின்னர் மல்லாக்கப் போட்டு பிசை பிசையென்று பிசைகிறார்கள்.

மசாஜ் குட்டியைப் பார்த்ததும், அடிமனதில் அந்த ஆசை வேறு வந்து விட பத்திரிக்கையாளர் நண்பரிடம் விசாரித்தேன்.

“அடப்பாவி, குஞ்சு அங்க போய் உன் மணியை ஆட்டினாய் என்றால் துண்டாய் நறுக்கி விடுவார்கள்” என்று களேபரப்படுத்தினார். பயமாக இருந்தாலும், பிலிப்பைன்ஸ் நாட்டுக் குட்டியின் அழகில் மயங்கிப் போய் என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தேன்.

ஒரு வாரத்திற்கு முன்புதான் மேட்டர் ஆயிடுத்து. அதை உளறிக் கொட்டி விட்டேன் பஞ்சுவிடம். உடனே மிரட்ட ஆரம்பித்து விட்டான்.

மசாஜ் கிளப்புகள் எல்லாமும் அப்படியில்லை. எனது சில பல பராகிரமத்தால் பிலிப்பைன்ஸ் குட்டியை மடக்கி விட்டேன். இதற்குப் போய் பஞ்சு “மஜாஜ் கிளப்பை வைத்துக்கொண்டு, டாக்ஸ் போட்டுக் கொண்டு விபச்சாரமா செய்கின்றார்கள்?” என்று ஒரே ரகளை செய்து விட்டான்.

அந்தக் கிளப்பில் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை நண்பர்களே. பாவம் அந்த கிளப் லேடி. கூல் லேடி. அடியேன் தான் சிறு சபலத்தில் ஏதேதோ செய்து காரியத்தை முடித்து விட்டேன். அதற்கு அந்த மசாஜ் கிளப் என்ன செய்யும் சொல்லுங்கள் பார்ப்போம்.

உடனே அது எந்த கிளப், சென்னையில் எங்கிருக்கிறது என்றெல்லாம் கேள்விக் கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது.

சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை. ஓகே..

ஓகேவாடா பஞ்சு. நாசாமாய் போக !

- சோகத்துடன் குஞ்சு


Follow

Get every new post delivered to your Inbox.

Join 137 other followers

%d bloggers like this: