சில விஷயங்களுக்கு ஆதாரங்கள் இருந்தால் தான் நம்ப இயலும். கிசு கிசுவாக வேண்டுமெனில் என்னவேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் இந்தத் தலைப்பிற்கு நிச்சயமாய் ஏதாவதொரு ஆதாரம் வேண்டும். மண்ணுலகில் மனிதராய்ப் பிறந்த எவருமே முழுமையானவர்கள் கிடையாது. அவர்களின் ஒவ்வொரு செயலும் ஏதோ ஒரு காரணத்தால் இயக்கப்படும் என்பதை நீங்கள் நம்ப வேண்டும். இதற்கு எண்ணெற்ற உதாரணங்களைச் சொல்ல முடியும். அதை வேறொரு சமயத்தில் பார்க்கலாம்.
இப்போது இந்த நிகழ்விற்கு ஜூனியர் விகடன் செய்தியை ஆதாரமாக்கலாம். குத்தியானந்தாவின் மீது அதிருப்தியில் இருக்கிறார் பழைய ஆதீனம் என்கிறது அச்செய்தி.
குன் டிவிக்காரர்களின் பலி வாங்கல் நடவடிக்கைக்கு குத்தியானந்தா குத்திய ஆப்புத்தான் சதுரை இளைய ஆதீனமானது. எப்படி என்றுச் சொல்கிறேன். இப்போது இருக்கும் ஆதீனம் முன்னாள் கட்சி செயலாளர். குண்ணா ஆட்சியின் போது ஆதீனங்கள், மடங்கள் இன்னும் சில பல மதச் சக்திகள் ஆதரவு இன்றி வெற்றியை குவிக்க முடியாது என்பதால் அதற்கேற்ற சில அரசியல் நடவடிக்கைகளை எடுத்தார். அதன் விளைவாக பிரபலமான மத சம்பந்தப்பட்ட இடங்களில் தங்களின் ஆளுமையை உட்புகுத்தினார்கள். அப்படி வந்தவர்தான் இப்போதைய ஆதீனம்.
அதாவது ஒரு குறிப்பிட்ட கட்சியின் ஆதரவாளராய் இருந்து ஆதீனத்திற்குள் நுழைந்து ஆதீனமானார் என்றால் அவர் யாருக்கு ஆதரவாய் இருப்பார் என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். இந்த ஆதீனத்தின் சொத்துக்களைக் கணக்கெடுத்தால் நினைத்தேப் பார்க்க முடியாது அளவு கொண்டது. அத்தனை சொத்துக்களுக்கு உரிமையாளர் ஆனால் – குத்தியின் எண்ணமும் அதன் விளைவாக யாருக்கு பிரச்சினையாகும் என்பதையும் ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். இப்போது உங்களுக்குப் புரியும். குண்டிவியின் காரணமாய் இழந்த சொத்துக்களுக்கும் மேலே என்னால் குவிக்க முடியும் என்று காட்டி இருக்கிறார் குத்தியானந்தா.
குன் டிவியின் குத்தி மேட்டருக்கு ஆதரவாய் இருந்தவர் யார்? அந்த ஆதரவிற்கும், குன் டிவிக்கும் அதிர்ச்சி அளிக்க வசதியாக சில அந்த மாதிரியான செயல்களை நடத்தி ஆதீனமானார்.
பழைய ஆதீனம் அதிருப்தி என்பது குத்திக்கு பெரிய மேட்டரே அல்ல. அவர் எதிர்பார்ட்டிக்கு “அதிர்ச்சி” வைத்தியத்தைக் கொடுத்திருக்கிறார். அவர் நினைப்பு ஓவராகி விட்டது. அடுத்த குதானந்தா கவுடாவின் அதோகதி நிலைமை.
அவர் தன்னை எதிர்ப்போரின் நிலைமை என்னவாகிறது, எவனாக இருந்தாலும் அவனை ஒரு கை பார்ப்பேன் என்றுக் காட்டுகிறார். மேட்டர் இப்போதைக்கு ஓவர் அல்ல. இனியும் தொடருவார் என்றே பல நண்பர்களும் சொல்கின்றார்கள்.
ஆனானப்பட்ட குண்டிவி சம்பந்தப்பட்டோருக்கே இந்த நிலைமை என்றால் குத்தியானந்தாவை பலவாறு ரகளை செய்த ஒருவர் இருக்கின்றாரே (பாருவைத்தான் சொல்கிறேன்) அவரை இவர் என்ன செய்யவிருக்கிறார் என்பதை போகப் போகத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். பார்ப்போம்.
- பஞ்சு
ப்ரசன்னா கொஞ்சம் கொஞ்சமாய் எழுத முயலுகின்றோம். ஓகே. டென்சனாகி உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
First already committed articles have to post.
then you will wirte present articles…………………….
.foooool
சாரி பிரசன்னா, நேரமிருக்கும் போது தான் எழுத இயலும். நீங்கள் நல்ல புத்திசாலி என்பதை நாங்கள் நம்புகிறோம். – அனாதி நண்பர்கள்