அவர் ஒரு பிரபல இயக்குனர். மனைவியும் சினிமாவைச் சேர்ந்தவர். வெளியுலகில் அவருக்கு இருக்கும் பெயரும், புகழும் சொல்லித் தான் தெரிய வேண்டுவதில்லை. அவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விட்டால் எப்பேர்ப்பட்ட நடிகரானாலும் சரி, கையது கொண்டு மெய் பொத்தி நிற்பர். நடிகைகள் எல்லாரும் அரண்டு போய் அமைதியாய் கிடப்பர். அமைதியின் டெரர் என்று அழைக்கப்பட்ட அந்த இயக்குனரின் பட ஷூட்டிங்கிற்கு எனது நண்பி ஒருத்தி அழைப்பின் பேரில் (இயக்குனரின் அனுமதியுடன் தான்) சென்றிருந்தேன். என்னுடன் குஞ்சாமணி ட்ரைவர் கோலத்தில் வந்தான். எல்லோரும் ஆச்சரியமாகப் பார்த்தனர். பின்னே அஜித் குமாருக்கும் சவால் விடும் அழகோடு கன்னத்தில் குழியுடன், வொயிட் டிஷர்ட்டில், டார்க் ப்ளூ ஜீன்ஸ் பேண்டுடன் நின்றிருந்த உங்களின் பிரிய குஞ்சாமணியை பார்த்தாலே பார்க்கும் இளம் பெண்களின் இதயம் ஆசிட் வீசியது போல பொசுங்க ஆரம்பிக்குமே, யூனிட் ஆட்கள் எல்லாம் எம்மாத்திரம்? அசந்து போய் நின்றார்கள்.
தோழி என்னைப் பார்த்ததும் ஓடோடி வந்து இயக்குனருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இயக்குனர் அருகில் வந்து இரண்டு இரண்டு வார்த்தைகளில் வரவேற்றார். என் பின்னாலே ஒரு கண்ணை மட்டும் காட்டியவாறு, பம்மிக் கொண்டு நின்றான் குஞ்சாமணி. அது அவனின் ஸ்டைல். இம்ப்ரஸ் செய்கின்றானாம். தோழி என்னைக் கவனிப்பதை விட்டு விட்டு, குஞ்சாமணியைக் கவனிக்க ஆரம்பித்தாள்.
‘அனாதி, சார் யாரு?’
‘சாரோட ட்ரைவர்’ என்றான் முந்திக் கொண்டு
அவனின் ஆட்டம் ஆரம்பமாகி விட்டது. படுபாவி நம்மை பயன்படுத்திக் கொண்டானே என்று சிரித்துக் கொண்டேன். கண்ணுக்குத் தெரியாத தூசி கிடைக்கட்டுமே, சீனப் பெருஞ்சுவரையே கட்டி விடுவான் இந்த குஞ்சு.
தோழி, அவனுடன் பேச ஆரம்பித்து விட்டாள். குஞ்சு பெண்களின் கண்களுக்குள் பார்ப்பான். குறுகுறுவென பார்வை. இதழ் கடையோரத்தில் புன் சிரிப்பொன்று தவழும். கற்புக்கரசியானாலும் ஒரு கணம் சிலிர்த்து விடுவார்கள். நான் பலமுறை அவன் கண்களைச் சந்தித்து அரண்டு போய் இருக்கிறேன். அவன் ஏதோ தியானமெல்லாம் செய்கின்றானாம் என்று பஞ்சு சொன்னான். என்னவோ தெரியவில்லை.
அவனை முன்னிட்டு ஹோட்டலில் அழகிகளின் கூட்டம் வருவதால் நான் அவனின் பர்ஷனல் விஷயங்களில் தலையிடுவதில்லை. அதை விரும்புவதும் இல்லை.
இரண்டு முறை இயக்குனர் அருகில் வந்து ஏதோ சொல்லிச் சென்றார். ஷூட்டிங்கில் கொடுக்கும் ஷூஸ் கன்றாவியாக இருந்தது. நான் முகம் சுழிப்பதைக் கண்ட குஞ்சு, ஓடோடிச் சென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான்.
அதற்குள் தோழி குஞ்சுவுடன் ஒட்டிக் கொண்ட மாதிரி அவனோடு சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். அது மட்டுமா அவளின் நண்பிகளில் சிலரும் குஞ்சுவோடு கடலை போட்டுக் கொண்டிருந்தனர். வேட்டை மன்னன் ஆரம்பித்து விட்டான். அவன் காட்டில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. அனுபவிக்கட்டும். சமூகத்தில் கல்யாணத்துக்கு முன்பு வரையான வாழ்க்கைகள் எதுவும் புரட்டிப் பார்க்கப்படுவதில்லை. முற்போக்கு எண்ணங்கள் கொண்டவர்கள் அதிகமாகி விட்டனர். கோர்ட்டுகளில் விவாகரத்துக்கள் எண்ணிக்கை கூடுவது பெண்களின் சுதந்திரத்தையும், ஆண்களின் சுதந்திரத்தையும் வெளிக் கொண்டு வருகின்றன. இருக்கட்டும் சந்தோஷமாய்.
தோழியைச் சந்தித்து விட்டு, ஹோட்டல் திரும்பிக் கொண்டிருந்த போது காரை ஓட்டிக் கொண்டிருந்த குஞ்சு, ’அனாதி உனக்கு ஒரு விஷயம் சொல்கிறேன் கேட்கின்றாயா?’ என்றான்
’சொல்லுடா !’
’உன் தோழியிடம் கறந்த மேட்டர் டா !’
’ம்…!’
’இயக்குனர் இருக்காரே அவருக்கு டிவி நாடகம் தான் பிடிக்குமாம்’
’ஏனாம்?’
’அவரின் பெண்டாட்டி பதினைந்தாயிரத்திற்கும் மேலே கொடுப்பாராம். உன் தோழி பணத்தோடு சான்ஸையும் பிடித்து விட்டாளாம்’
‘அட, இப்படி ஒரு ரசனையா?’
இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று அல்லவா இயக்குனர் நடந்து கொள்கிறார். இயக்குனரின் படங்களில் ஹை கிளாஸ் நடிகைகளின் குத்து டான்ஸ் இருப்பது நினைவில் நிழலாடியது. பூனை என்றாலே கள்ளம் தானே? நண்பர்களே !
ஹோட்டல் வாசலில் கார் நின்றது
- அனாதி
miskin?
கொஞ்சம் முன்னாடி போங்க கதிர் !
மணி R
’அவரின் பெண்டாட்டி பதினைந்தாயிரத்திற்கும் மேலே கொடுப்பாராம். உன் தோழி பணத்தோடு சான்ஸையும் பிடித்து விட்டாளாம்’
I do’t understand pl explain, pppplllllllllllleaseeeeeeee
அனாதி அது மிஸ்டர் G.MR தானே சீக்கரம் சொல்லுங்க!!!!!!!!!!! ப்ளீஸ்
No ! i gave lot of clues. – Anathi