தமிழ்சினிமா பிரச்சினை உண்மை என்ன?

ஜனவரி 31, 2012

தமிழர்களுக்கு சாப்பாடு இருக்கிறதோ இல்லையோ ஆனால் சினிமா இருக்க வேண்டும். இல்லையென்றால் தமிழனுக்கு நிம்மதியான வாழ்க்கையே இல்லை. சினிமா என்றால் சூடு, சொரணை, வெட்கம், மானம், கற்பு, கலாச்சாரம் என எதை வேண்டுமானாலும் இழக்க அவன் தயாராகி விடுவான். தன் நாட்டையே சினிமாக்காரனுக்கு தூக்கி கொடுக்கும் அளவுக்கு சினிமாவின் மீது கொள்ளை அன்பு கொண்டவன் தமிழன். வெறி உணர்வு கொண்ட ரசிகர்களுக்கு எல்லாம் தற்போது சினிமா உலகில் நடந்து வரும் உண்மையான பிரச்சினை என்ன என்று தெரிய வேண்டுமென்பதற்காக இப்பதிவு.

பெரிய தயாரிப்பாளர்கள் அதிக சம்பளம் கொடுத்து சினிமா படங்களை தயாரித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்கிறார் ஃபெஃப்சியின் செயலாளர் சிவா. ஆனால் சிறிய தயாரிப்பாளர்கள் தான் சம்பளப் பிரச்சினையில் ஈடுபடுகின்றார்கள் என்கிறார். இந்தப் பதிலிலிருந்து இச்சம்பவத்தில் ஏதோ ஒரு மறைக்கப்பட்ட உண்மை இருக்கிறது என்பது புரியலாம். அது என்ன?

இயக்குனர்கள் சங்கத்தில் ஒரு முடிவு எடுக்கின்றார்கள். இனிமேல் புது கார்டு கொடுப்பதில்லை என்று. கேட்டால் இருப்பவர்களுக்கே வேலை இல்லை, இனி புது இயக்குனர்கள் வேறு வந்தால் நிலைமை என்னவாகும் தெரியுமா என்று எதிர் கேள்வி கேட்கின்றார்கள். அப்படி என்றால் என்ன தெரியுமா? இனிமேல் புதிதாய் எவரும் சினிமாவிற்கு வரக்கூடாது என்பது தான் அந்த கார்டு கொடுக்கமாட்டோம் என்பதற்கான மறுப்பிற்கு காரணம். ஒரு யூனியன் புதியதாய் வேறு எவரையும் இணைத்துக் கொள்ள மாட்டோம் என்றுச் சொல்கின்றது என்றால் அதில் இருக்கும் அக்மார்க் சுய நல அரசியலை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். படமெடுக்க வருபவர் எவராயிருந்தாலும் சரி பழைய இயக்குனர்களை வைத்தே படமெடுங்கள் என்கிறார்கள் இயக்குனர் சங்கத்தினர்.  பழைய இயக்குனர்களான பாலச்சந்தர், பாரதி ராஜாவை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்களின் கதி என்னவென்று கோடம்பாக்கத்தில் கேட்டால் சொல்வார்கள்.

கோடம்பாக்கத்தில் சினிமா இயக்குனர்களின் வீடுகளும், ஹீரோக்களின் வீடுகளும் தானே அதிகம் தென்படுகின்றன. ஏதாவது தயாரிப்பாளர்களின் வீடுகளை அதிகம் காணமுடியுமா? பிரபல தயாரிப்பாளர்களின் பிற்கால கதைகளை கோடம்பாக்கத்தில் சென்று கேட்டுப்பாருங்கள்? தெரியும். கண்ணீர் வரக்கூடிய பல கதைகள் இருக்கின்றன. ஜெகஜ்ஜால கில்லாடி இயக்குனர்களும், நடிகர்களும் பிழைத்துக் கொள்கின்றார்கள். தங்கள் வாழ்வையே இழந்து நடுரோட்டில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் தயாரிப்பாளர்கள். எத்தனை எத்தனையோ தயாரிப்பாளர்கள் வீடு, காடு, நகையெல்லாம் விற்று எடுத்த திரைப்படங்கள் பெட்டிகளுக்குள் தூங்கிக் கொண்டிருக்கின்றன. அதைப் பற்றி இந்த ஃபெப்சியோ இல்லை இயக்குனர்கள் சங்கமோ ஏதாவது கவலை தெரிவித்ததா? செய்யமாட்டார்கள்.

எந்த ஒரு டெக்னீஷியனுக்கும் அவனது சம்பளம் மட்டுமே குறி. ஆனால் படத்தின் முடிவு என்பது பற்றி யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை. தன் சம்பளம் மட்டும் பற்றிக்  கவலைப்படும் டெக்னீஷியன்களுக்கு தயாரிப்பாளரின் பணத்தைப் பற்றிய கவலை ஏது? வெறும் 500 ரூபாய் சம்பளம் பெறுபவருக்கு இவ்வளவு கவலை இருந்தால் கோடிக்கணக்கில் பணம் போடும் தயாரிப்பாளருக்கு எவ்வளவு கவலை இருக்க வேண்டுமென்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.  ஒரு கோடி போட்டால் இரண்டு கோடி கிடைக்க வேண்டுமென்று விரும்புவார்கள். இல்லையென்றால் அம்பது லட்சம் அதுவும் இல்லையென்றால் 25 லட்சமாவது கிடைக்க வேண்டுமென்று தயாரிப்பாளர்கள் விரும்புவார்கள். அதையும் கிடைக்க விடாமல் செய்வதில் சில இயக்குனர்களுக்கு அலாதி பிரியம் உண்டு. நஷ்டம் வந்தால் மட்டும் கேட்பீர்கள், லாபம் வந்தால் எங்களுக்கா கொடுப்பீர்கள் என்பார்கள். லாபம் சம்பாதித்தால் தானே அடுத்த படம் வரும், அடுத்து அடுத்து வேலை கிடைக்கும் என்பதைப் பற்றியெல்லாம் இவர்களுக்கு யோசனையே வராது. அப்பேர்ப்பட்ட மகானுபாவர்கள் இந்த டெக்னீஷியன்கள்.

டிவிப் பேட்டியில் சிவா நக்கலாக ஒரு வார்த்தை சொன்னார். தொழிலாளிகள் தான் ஸ்ட்ரைக் செய்வார்கள், ஆனால் சினிமாவில் தயாரிப்பாளர்கள் (முதலாளிகள்) ஸ்ட்ரைக் செய்கின்றார்கள் என்று. இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. 23 தொழிலாளர்கள்யூனியன்களிடமிருந்து என்ஓசி வாங்கினால் தான் லேப்பில் இருந்து படத்தை வெளியில் எடுக்க முடியும். பணத்தையும் போட்டு விட்டு, வேலைக்காரர்களின் அனுமதி கிடைத்தால் தான் படத்தையே வெளிவரச் செய்ய முடியும் என்று வைத்திருக்கும் சர்வாதிகாரப் போக்கினை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

இதுபற்றி பேசிக் கொண்டே போகலாம். சினிமாவை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களுக்கு எந்த வித நன்றியும் பாராட்டாமல், அவர்களுக்கு எதிராய் கிளம்பி இருக்கும் இயக்குனர்கள் சங்கம், ஃபெப்சியினர் செய்யும் செயல் எதுவும் நியாயமானதாகத் தெரியவில்லை.

மேற்படிப் பிரச்சினைக்கு என்ன காரணம் தெரியுமா? வாரிசு நடிகர்களும், தயாரிப்பாளர்களும் ஒன்று சேர்ந்து கொண்டு, இனிமேல் புதிய நடிகர்களும், இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தமிழ் சினிமா உலகில் வரவே கூடாது என்பதற்காக மேற்படி பிரச்சினையை கொளுத்திப் போட்டிருக்கிறார்கள் என்கிறது விபரம் தெரிந்த ஒரு கோடம்பாக்கத்து ஆந்தை.

இனி சினிமா படமெடுத்தால் மினிமம் பத்து கோடி வேண்டும். இல்லையென்றால் எவரும் சினிமா எடுக்க வராதே என்கிறார்களாம்.

கார்ப்பொரேட் நிறுவனங்கள் மட்டுமே இனிமேல் சினிமா தயாரிப்பில் ஈடுபட வேண்டுமெனவும், ஒரு கோடி இரண்டு கோடி பட்ஜெட் படமெல்லாம் வந்தால் வயிற்றுக்கு காணாது எனவும் முடிவு கட்டிக் கொண்டு இப்படியான பிரச்சினையை ஆரம்பித்து வைத்திருக்கின்றார்கள் என்கிறது ஆந்தை தொடர்ந்து.

தியேட்டர்களெல்லாம் சாதரணமானவர்களிடமிருந்து பெரிய பெரிய கம்பெனிகளுக்குச் சென்று விட்டன. முதல் வெற்றி இதிலே ஆரம்பித்திருக்கிறது. அடுத்த வெற்றி சிறு, குறு தயாரிப்பாளர்களை விரட்டுவதிலே இருக்கிறது. முடிவாய் தமிழ் சினிமாவை “வாரிசுகள்” கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள். அவர்கள் சொன்னதுதான் சட்டம், வைத்துதான் நியதி என்றாகி விடும். சாதாரணமானவர்கள் இனி சினிமா பக்கம் தலை வைத்துப் படுக்க முடியாது. வேண்டுமெனில் ஷூ துடைக்கும் வேலை கிடைக்கும்.

இதன் முடிவு தான் என்ன?

பணம் தான் ஜெயிக்கும் என்கிறது ஆந்தை. சட்டமும், உண்மையும், நீதியும், நேர்மையும் பணத்தின் முன்பு சலாமடிக்கும் என்பதெல்லாம் நமக்குத் தெரிந்த உண்மை.

இன்னும் சினிமா உலகில் நடைபெற்று வரும் அயோக்கியத்தனங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அதைப் பற்றி எல்லாம் எழுத ஆரம்பித்தால் பலருக்கு பெரும் பிரச்சினை வரும் என்பதால் எழுதுவதை நிறுத்தி இருக்கிறோம்.

- பஞ்சு


மாதவன் நாயருக்கு பேசவே யோக்யதை இல்லை

ஜனவரி 26, 2012

இஸ்ரோ முன்னாள் சேர்மன் மாதவன் நாயர் பதவியில் இருக்கும் போது 3ஜி பேண்ட் அலைக்கற்றையை வெறும் 1200 கோடிக்கு ஒரு தனியார் கம்பெனிக்கு, பனிரெண்டு வருடக் குத்தகைக்கு கொடுத்ததை, பொதுத் தணிக்கைக் குழுவின் கண்டுபிடிப்பிற்குப் பிறகு, அதிர்ச்சியாய் ஆச்சரியமாய் நம் பிரதமர் ஒரு ஐவர் குழுவை அமர்த்தி விசாரணை செய்து அந்த விற்பனைக்கு உதவியாக இருந்த நால்வரையும் (இஸ்ரோ முன்னாள் அறிவியல் துறை செயலர் பாஸ்கரநாராயணா, ஆன்ட்ரிக்ஸ் முன்னாள் மேலாண்மை இயக்குநர் கே.ஆர்.ஸ்ரீதரமூர்த்தி, இஸ்ரோ செயற்கைக்கோள் மைய முன்னாள் இயக்குநர் கே.என். சங்கரா) அரசின் வேறு எந்த முக்கியமான பணியிலும் அமர்த்த தடை செய்திருப்பதைக் கண்டு பத்திரிக்கைகளில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை விட நாங்கள் கெட்டவர்களா என்று அறிக்கை விட்டிருக்கிறார் இந்த மாதவன் நாயர்.

நான் பிரதமராக இருந்திருந்தால் தேசத்துரோகக் குற்றம் சுமத்தி வாழ் நாள் முழுவதும் ஜெயிலில் தள்ளி இருப்பேன். நாட்டின் உயர்ந்த பதவியில் இருந்த இவர், தான் பலனடைய நாட்டின் உயரிய சொத்தினை குறைந்த விலைக்கு விற்றிருக்கிறார். இவர் எந்த வகையில் நம்பகத்தகுந்த விஞ்ஞானியாவார்? உலகம் முழுவதும் இருப்போர் என்ன மாங்காய் மடையர்களா? இஸ்ரோவின் ரகசியங்களை வேறு நாடுகளுக்கு இவர் விற்கமாட்டார் என்று எப்படி நம்ப முடியும்? இந்திய மக்களுக்கு சேர வேண்டிய பணத்தை மிகக் குறைந்த விலைக்கு அதுவும் 3ஜி பேண்ட் அகலக் கற்றையை 1200 கோடிக்கு பனிரெண்டு வருடம் குத்தகைக்கு கொடுத்திருக்கிறார் என்றால் எவ்வளவு பெரிய ஊழல் இது என்று நீங்களே நினைத்துப் பாருங்கள். நடக்கும் முன்பு கண்டுபிடித்து தடுத்து விட்டார்கள். இல்லையென்றால் ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.

பாகிஸ்தான் தீவிரவாதி நேரடியாக வந்து சண்டை போடுகிறான். நேருக்கு நேராய் நிற்கின்றான். ஆனால் இவர் செய்தது நம்பிக்கைத் துரோகம் அல்லவா? பிரதமர் காரணம் இல்லாமல் காரியம் செய்பவர் அல்ல. மாதவன் நாயர் மீதானக் குற்றச்சாட்டில் உண்மை அல்லாமல், பிரதமர் இப்படியான உத்தரவைப் போட்டிருக்கமாட்டார் என நம்பலாம். மாதவன் நாயரையும் அந்த நால்வரையும் ஜெயிலில் போடாமல் விட்டது அவர்களால் நாட்டுக்கு ஏதோ கொஞ்சம் நன்மை கிடைத்தது என்ற காரணமாக இருக்குமே அன்றி வேறொன்றாகவும் இருக்க இயலாது.

அரசின் முக்கியப் பணிகளில் பணியாற்றி ஓய்வு பெறுவோரில் பெரும்பாலானோர் தனியார் கம்பெனிகளில் உடனடியாக உயர் பதவியில் அமர்ந்து தன் முன்னாள் தொடர்புகளை வைத்து தான் வேலை செய்யும் கம்பெனிகளுக்கு சாதகமான செயல்களை செய்து வருகின்றனர். பிரதமர் முன்னாள் அய்யேயெஸ், உயர் அதிகாரிகளுக்கு இதே போன்று தனியார் நிறுவனங்களில் சேர முடியாதவாறு சட்டத்திருத்தம் ஒன்றினை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அரசின் ரகசியங்களும், ராணுவ ரகசியங்களும் பல முன்னாள்களால் வெளியே விற்கப்படுகின்றன என்பதை பல பத்திரிக்கைகள் தெளிவாக எழுதி இருக்கின்றன.

ஊழல் செய்த மாதவன் நாயருக்கு பேசவே தகுதியில்லை. இதில் பேட்டி வேறு கொடுக்கிறார். கேட்கின்றவர்கள் கேனயர்கள் அல்ல என்பதை அவர் புரிந்து கொள்ள முடியாவிட்டால் அது அவருக்கு துன்பமே தவிர பிறருக்கு அல்ல. பொய் பேசுவதால் மட்டுமே ஒருவன் நியாயவான் ஆகிவிட முடியாது. செய்தது அயோக்கியத்தனம், பேசுவது நியாயமா?  பாரதப் பிரதமர் மன் மோகன் சிங்கிற்கு வாழ்த்தினை தெரிவிப்போம் இந்த நல்ல நடவடிக்கைக்காக.

- பஞ்சு

செய்தி ஆதாரம் - மாதவன் நாயருக்கு அரசுப்பணி செய்ய தடை


பில்லியர்ட்ஸ் (20+)

ஜனவரி 25, 2012

வணக்கம் நண்பர்களே,

நீண்ட நாளாய் இந்தப் பக்கமாய் வர முடியவில்லை. வேலைப்பளு அதிகம். வாசகி ஒருவர் மெயிலில் காதல் கடிதமெல்லாம் எழுதி அதை அனாதி பார்த்து, இந்த வேலையெல்லாம் வைத்து கொண்டால் “ நடப்பதே வேறு” என்று மிரட்டி விட்டார். நாமென்ன “ பாரு நிவேதிதா கூட்டமா?” என்று வேறு நக்கல். எதற்கு யாரை கம்பேர் செய்வது என்றே தெரியவில்லை. நானும் பாருவும் ஒன்றா? நீங்களே சொல்லுங்கள். 60 வயது வயாகரா மனுஷனை, என்னுடன் அனாதி ஒப்பிட்டதால் கடுப்பு வந்து விட்டது மை ஃப்ரண்ட்ஸ். அதனால் தான் கொஞ்சம் இந்தப் பக்கமாய் வர முடியவில்லை.

குட்டிகள் எல்லாம் படு குஜாலாய் காசு பண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். நாமெல்லாம் வாயில் கழுதை போவது கூட புரியாமல், எச்சிலை வடித்துக் கொண்டிருக்கிறோம். நடிகைகளில் யார் அடிக்கடி மேட்டர் பண்ணிக் கொண்டிருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க அனாதி எனக்கொரு டிப்ஸ் கொடுத்தார். அதை பலருடன் ஒப்பிட்டுப் பார்த்து அவர் சொன்னது சரிதான் என்று கண்டுபிடித்தேன். அதை சமூகத்தில் ஒப்பிட ஆரம்பித்த போது, எனக்கே பயமே வந்து விட்டது. அது என்ன டிப்ஸ் என்பதை விரைவில் ஒரு கதையாக எழுதுகிறேன். அப்போது படித்துக் கொள்ளுங்கள். ஓகே !

சென்னையின் முக்கியமான பிளாசாவில் திருமணமான பெண்கள் தங்களின் ஃபாய் பிரண்டுகளை தேர்ந்தெடுக்கின்றார்கள். நேரில் பார்த்து விட்டு, புஸ்டி புஸ்டியான மாமிகளையும், அவர்கள் வரும் கார்களையும் பார்த்து வயிற்றில் புஷு புஷு என்று புகை வந்து கொண்டிருக்கிறது. அனாதியின் ஸ்ட்ரிக்ட் உத்தரவின் பேரில்  அண்ணா வழியில் சென்று கொண்டிருக்கிறேன். அது என்ன அண்ணா வழி என்று கேட்காதீர்கள். விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கடந்த வாரம் திருச்சியில் அபார்ட்மெண்ட் கட்டிக் கொண்டிருக்கும் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் ஒரு மேட்டரை( ஏற்பாடு செய்தது ஒரு பிரபலம்) தள்ளிக் கொண்டு மஜா செய்து விட்டு கழட்டி விட்டு விட்டார். இந்தப் பத்திரிக்கையாளருக்கு ஒரு முறை டீல் பண்ணியதை மறுமுறை டீல் செய்வது பிடிக்கவே பிடிக்காதாம்(முன்னரே இது பற்றி எழுதி இருக்கிறோம்). இதுவரை அவர் எத்தனை டீல் போட்டிருப்பார் என்று ஒரு முறை நினைத்துப் பாருங்கள். நீங்களும் நானும் கம்ப்யூட்டரில் உட்கார்ந்து கொண்டு “வெறும் படத்தினை மட்டும்” பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பில்லியர்ட்ஸ் என்று தலைப்பிட்டு எதை எதையோ எழுதிக் கொண்டிருக்கின்றாயே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. பில்லியர்ட்ஸ் தான் எனக்குப் பிடித்த விளையாட்டு? ஏனென்று தெரியுமா? பதில் சொல்வோருக்கு “அந்த டிப்ஸ் உடனடியாக அனுப்பப்படும்”. ஓகே. இப்போது உங்களுக்கு வித்தியாசமான டாட்டா காட்ட விரும்பும் உங்களின் மனம் கவர் – குஞ்சாமணி


காங்கிரஸ் கட்சியும் இந்தியாவின் சீரழிவும்

ஜனவரி 25, 2012

64 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து காங்கிரஸ் செய்த சாதனைகள் பட்டியல்போட ஆரம்பித்தால் தலை கிறுகிறுத்துப் போய் விடும்.  விவசாயிகள் தற்கொலை, உலகம் அதிரும் ஊழல், அமைச்சர்கள் எல்லோரும் ஊழல்வாதிகள், கண்டுகொள்ளாத பிரைம் மினிஸ்டர், போதாதற்கு என்று தண்ணீர் பிரச்சினை, சாதாரண வெளி நாட்டுக் கம்பெனியிடம் தோற்றுப் போன சட்டங்கள் என்று அனைத்து விஷயங்களிலும் தோல்வி கண்ட காங்கிரஸ் கட்சி இனி இந்தியாவை ஆள்வதற்கு தகுதி அற்றுப் போய் விட்டது. ஒரே ஒரு விஷயம் மட்டும் தான் இத்தனை ஆண்டுகால காங்கிரஸ் கட்சியின் சாதனையாக கருத முடியும். அது ரைட் டு இன்ஃபர்மேஷன் ஆக்ட்.

உங்களுக்குத் தெரியுமா? சேர் மார்க்கெட் இருக்கிறதே ஷேர் மார்க்கெட், முக்கியமான மூவரின் கட்டுப்பாட்டில் தான் இந்தியாவின் ஷேர் மார்க்கெட்டே இருக்கிறது என்கிறார்கள் மிக முக்கியமான பத்திரிக்கையாளர்கள். இவர்கள் மூவருக்காகத்தான் இந்தியாவின் ஷேர் மார்க்கெட்டே இயங்குகிறது என்கின்றார்கள். இந்தியாவின் பெரும்பான்மையான சொத்துக்கள் இவர்களின் பினாமி வசம் இருக்கிறதாம். மும்மையின் பெரும்பான்மையான முக்கிய விலை உயர்ந்த சொத்துக்களை இந்த மூவர் கூட்டணி கபளீகரம் செய்து விட்டதாம்.

வெளி நாட்டில் இருக்கும் இரு கம்பெனிகள் இணைகின்றன. இந்தியாவிலும் இணைந்தன. ஆனால் அதற்கான பரிவர்த்தனைக்கு வரி கட்ட வேண்டியதில்லையாம். எப்படி இருக்கிறது பாருங்கள் வெளி நாட்டு மூலதனம் பற்றிய சட்டங்கள். இந்த ஓட்டையைச் சரியாகக் கண்டு பிடித்து இந்திய மக்களுக்குச் சேர வேண்டிய பணத்தை தனியார் கம்பெனியார்கள் கொள்ளை அடித்து விட்டார்கள்.

இதுவரையிலும் அதிகார துஷ்பிரயோகம் செய்து டிவியை வளர்த்த இருவரை ஒன்றும் செய்யாத சிபிஐ பற்றியும், அதை தன்னிடம் வைத்திருக்கும் பிரதமர் பற்றியும் தொடர்ந்து எழுத என்ன இருக்கிறது? இப்படி ஒரு சட்டத்தின் ஆட்சி இந்தியாவில் நடக்கிறது.

ஒரு வழக்கு கோர்ட்டில் இருக்கும் போது, அதைப் பற்றி கேரள மினிஸ்டர் ஒருவர் தீர்ப்பு கேரளாவிற்கு பாதகமாய் இருந்தால் ஏற்க மாட்டோம் என்கிறார். அவர் இந்தியாவில் தான் இருக்கின்றாரா? அவர் மினிஸ்டர் தானா? கேரளா தனி நாடா என்றெல்லாம் கேள்வி கேட்டால் பதில் சொல்வார் யாரோ? சுப்ரீம் கோர்ட் இவரின் மீது என்ன வித நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப் போகின்றது ?

இந்த கேரள மினிஸ்டர், மினிஸ்டராக இருக்கவே தகுதியற்றவர் அல்லவா? இவர் மீது தமிழக அரசு ஏன் வழக்கு தொடருமா? இல்லை சுப்ரீம் கோர்ட்டே விசாரிக்குமா? இவர் என்ன டெக்னாலஜியை வைத்து இப்படிச் சொல்கின்றார்? இதைப் பற்றி ஏதாவது தெரியுமா?

கூடங்குளம் அணு உலை பற்றியச் செய்திக்கு தினமலர் போராட்டக்காரர்களைப் பற்றிய தனிப்பட்ட செய்திகளை பெரிது படுத்தி, போராட்ட்டத்தை நீர்க்கச் செய்யும் அக்கிரமமான வேலையைச் செய்து வருகிறது.  முன்பே அனாதியில் அணு உலையை இயக்கச் செய்வார்கள் என்று எழுதி இருந்ததை நண்பர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எந்த ஒரு போராட்டமும் அதிகாரமும், அயோக்கியத்தனமும், சுய நலமும் பொருந்திய ஆட்சியாளர்களிடம் எடுபடாது. போராட்ட மக்களை அழித்து விடுவார்கள் என்பதற்கு அணு உலை உதாரணம். மீடியா மாஃபியாக்களினால் ஜன நாயகத்தின் வேர்கள் தீக்கிறையாக்கப்பட்டு விட்டன. இத்தனை ஆண்டுகால ஜன நாயக ஆட்சியை காங்கிரஸ் கட்சி பெரும் கம்பெனிக்காரர்களின் ஆட்சியாய் மாற்றியதைத் தவிர இந்திய மக்களுக்கு தீங்கினையே செய்து வந்துள்ளது என்பது உண்மை.

சுய நலமற்ற தலைமையும், இந்தியாவின் மீது பற்றுமுள்ள, அதிரடி நடவடிக்கைகளை எடுக்கக் கூடிய தலைவர்கள் தான் இந்தியாவிற்குத் தேவை. ஒருவர் கூட காங்கிரஸ் கட்சியில் இல்லை.

- பஞ்சு


naked lies (5) – பத்திரிக்கையாளர்கள்

ஜனவரி 22, 2012

ஒத்து இல்லை என்றால் சில ராகங்கள் இசைக்கும் போது அபஸ்வரமாய் கேட்கும். ஒத்து ஓட்டைகளை அடைக்க உதவும். இதே ஒத்தை சினிமாவில் செய்தால் இயக்குனராகலாம். இதே ஒத்தை அரசியலில் செய்தால் எம் எல் ஏ ஆகலாம். பின்னர் அமைச்சர் ஆகலாம். இதே ஒத்தை அரசு அலுவலர்கள் செய்தால் பதவி உயர்வு பெறலாம். இதே ஒத்தை பத்திரிக்கையாளர்கள் செய்தால் “ஆட்சியே நமது” எனலாம்.

பிரபல பத்திரிக்கைகள் என்றுச் சொல்லும் குகடன், கிமுதம், அனுபவிக்க தினம் ஒரு மலர் பத்திரிக்கை, குஞ்சு குகடன் போன்றவை எல்லாம் ஒரு சாராரின் கையில் இருப்பவை என்று உங்களுக்குத் தெரியும். தமிழ் கலாச்சாரத்தில் மகளைத் தாயே என்றழைப்பார்கள். இவர்கள் கலாச்சாரத்தில் அடியே என்று அழைப்பார்கள். காசு கொடுத்தால் எதை வேண்டுமானாலும் தரிசனம் காட்டும் அட்டகாசமான ஜாதியைச் சேர்ந்தவர்களால் நிர்வகிக்கப்படும் பத்திரிக்கைகள் இன்றைக்கு தமிழகத்தில் “ நடப்பது எங்கள் ஆட்சி” என்று பிரபல ஹோட்டல்களின் பார்களில் அமர்ந்து அமரிக்கைச் செய்து கொண்டிருக்கின்றனர்.

என்ன வேலை நடக்கணும், என்னிடம் வா, நான் சொல்வதை எவன் கேட்கவில்லை? அவனுக்கு கட்டம் கட்டு என்பது தான் இவ்வகைப் பத்திரிக்கைகளின் தாரக மந்திரம். மந்திரி, எந்திரிகளிடம் மிரட்டும் தொனியில் பேசும் இவ்வகை ஆக்டோபஸ் பத்திரிக்கையாளர்களிடமிருந்து தமிழக அரசு எவ்விதம் தப்பிக்கப் போகின்றது என்பது கண்ணைக் கட்டி நடு கடலில் விட்டவன் நிலை போலத்தான் தெரிகிறது.

சமீபத்தில் ஒரு மாமியை மஜா செய்த பிரபல பத்திரிக்கையாளரின் உளறலைக் கேட்ட அந்த மாமி, தன் இளம் வயது பத்திரிக்கைக் கள்ளக்காதலனிடம் போட்டுக் கொடுக்க, அவன் அட்சர சுத்தமாய் மேட்டரை லீக் செய்து விட்டான்.

ஆகாதவன் யாரென்று பார், அவனைப் பற்றி இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி செய்தியைக் கட்டம் கட்டு. பின்னர் நடப்பதைப் பாரும் என்கிறாராம் அந்த பத்திரிக்கையாளர். அரசில் உயர் பதவி வேண்டுமா, பத்திரிக்கைகாரனுக்கு கூட்டிக் கொடு, மேட்டர் ஓவர் என்கிறார் விவரம் தெரிந்த ஒருவர். இவர்களிடம் காசுக்குக் குறைவில்லை. ஆனால் குட்டிகள் சிக்குவதில் தான் பிரச்சினை. அதை எவர் செய்கின்றார்களோ அவர்களுக்கு பத்திரிக்கைகளில் இலவச போட்டோ விளம்பரம் கூட கிடைக்குமாம். எப்படிப் போகிறது பத்திரிக்கைகள் என்பதைப் பாருங்கள்.

எந்த ஒரு செய்தியும் பலன் இல்லாது வெளியிடுவது இல்லை. விளம்பரம் கொடுத்தால் கம்பெனி பற்றி இலவச விளக்கம் போடுவார்கள் அல்லவா? அது போல.

அனாதியின் வாசகர்கள் செய்திகளைப் படித்ததும் அதன் உள்ளர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அது உண்மை என்று நம்பி விடக்கூடாது. ஓகே !

- அனாதி

குறிப்பு : இது யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல. இது ஒரு அரசியல் தொடர்பு நாவல்.


சன்னி லியோனை கேள்வி கேட்க எவனுக்கும் தகுதியில்லை

ஜனவரி 12, 2012

மானம் கெட்ட இந்திய மக்களில் ஒரு சிலர் வயிற்றுப் பிழைப்புக்காக பிறரோடு படுத்து, அதை படமாக்கி விற்கும் சன்னி லியோன் நடித்த, இந்தியாவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பக்கூடாது என்று சொல்லி இருக்கின்றார்கள்.

மும்பையில், கல்கத்தாவில், சாலையின் ஓரங்களில், சினிமாக்களில், இருட்டறையில் மேலாதிக்க அயோக்கிய சிகாமணிகள் பிறர் மனைவியை, பச்சைக் குழந்தைகளை கற்பழித்து, சிதைத்துச் சின்னா பின்னப்படுத்தி, அதற்குப் பதிலாக காசை தூக்கி எரிந்து விட்டு வருகின்றார்களே அந்த அயோக்கிய சிகாமணிகளுக்கு சன்னியின் முன்னால் நின்று கேள்வி கேட்க தகுதியில்லை.

தேவடியாத்தனம் செய்யும் எத்தனையோ பேருக்கு, அவார்டு கொடுக்கும் திருட்டுக் கூட்டத்தாருக்கு, சன்னி லியோனைப் பற்றி ஒரு வார்த்தைப் பேச தகுதியில்லை.

இன்னும் படுகாட்டமாய் விமர்சிப்பேன். படிக்க நாராசமாய் இருக்கும். வேண்டாம் என்று இத்தோடு விட்டு விடுகிறேன். மதத்தின் பெயரால் ஒரு பெண்ணை இழிவுபடுத்தவும் எவருக்கும் தகுதியில்லை. ஏனென்றால் அப்படிப் பேசுபவர்கள் கூட யாரோ இருவர் தனிமையில் இருந்ததால் தான் வெளிவந்திருக்கின்றனர்.

நாய் எங்கே போனாலும் நக்கித்தான் தண்ணீர் குடிக்க இயலும். நாய் என்றைக்கும் அன்னப்பறவையாகாது. சன்னி லியோனைப் பற்றி அவதூறு பேசியோரெல்லாம் தூயவர் ஆகாது. அவர்கள் தான் சமூகத்தைச் சீரழிக்கும் அயோக்கியர்கள், திருடர்கள், மொள்ளமாரிகள், முடிச்சவிக்கிகள்.

குறிப்பு : இப்படியான எழுத்து எப்படி இருக்கிறது என்று வாசகர்கள் பின்னூட்டமிட்டு தங்கள் கருத்தினை தெரிவிக்கலாம்.

- பஞ்சு


சதியில் சிக்கிய முதல்வர் ஜெ

ஜனவரி 8, 2012

நக்கீரன் பத்திரிக்கை செய்திகளை உட்டாலக்கடி செய்து திரித்து வெளியிடும் என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை. நக்கீரன் காமராஜ் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை சவுக்கு தளம் விரிவாக எழுதி இருந்தது. மீடியா மாஃபியாவில் நம்பர் ஒன் நக்கீரன் என்று அது தொடர்ந்து எழுதி வருகிறது. அதுமட்டுமல்லாமல் திமுக தலைவருக்கு நெருக்கமான பத்திரிக்கை என்று பல கதைகள் சொல்லுகின்றன. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, நக்கீரன் பத்திரிக்கையில் வெளிவந்திருக்கும் கட்டுரை ஒன்று “ மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான் – விவரிக்கும் ஜெயலலிதா” என்ற தலைப்பிடப்பட்டு அச்செய்தி வெளியாகி இருக்கிறது. அதை கீழே இருக்கும் இணைப்பில் படித்துப் பாருங்கள்.

மீடியாக்கள் தற்போது முதல்வர் செய்து வரும் சில அட்டகாசமான திட்டங்களுக்கு ஆதரவு அளித்து, அதுபற்றிய செய்திகளை வெளிச்சமிடுவது எதிர்பார்ட்டியினருக்கு  “வயித்தெரிச்சலை” உண்டாக்கி இருக்கிறது. அதை எப்படியாவது கெடுக்க வேண்டுமென்பதற்காக நக்கீரனை வைத்து, இது போன்ற கட்டுரையை எழுத வைத்திருக்கிறார்கள் என்று 100000% அடித்துச் சொல்லலாம். இன்றைய முதல்வரின் இயல்பு பட்டென்று ஒரு விஷயத்தினை கையாள்வது. சிலரின் இயல்பு அது. அந்த இயல்பை மனதில் வைத்துக் கொண்டு, இப்படியான செய்திகளை உருவாக்கி, அவரைச் சிக்க வைத்திருக்கின்றார்கள்.  நேற்று வெகு விரிவாக நக்கீரன் பத்திரிக்கை அலுவலகத்தை தாக்கியது பற்றி கவரேஜ் வெளியானது. சில பத்திரிக்கையாளர்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். இதையெல்லாம் செய்ய வைத்து, அதிமுக அரசின் மீதான எரிச்சலை ஏற்படுத்த முனைந்து வெற்றியும் பெற்றிருக்கின்றனர். நக்கீரன் கோபாலை பெரிய மனிதராக கொண்டு வர இச்செயல் உதவும். கண்டு கொள்ளாமல் விட்டும், நக்கீரன் பத்திரிக்கையை முற்றிலுமாய் ஒழித்துக் கட்ட என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல் இப்படி பட்டவர்த்தனமாக அடிதடியில் ஈடுபடுவது நக்கீரன் கோபாலுக்கு நன்மையைத்தான் செய்யும். ஆள்பவர்களுக்கு தீமையாகத்தான் முடியும். முதல் கோணல்.. இனி கோணலாகவே தொடரும்.

பால், பஸ் டிக்கெட் விலையை மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர். இதை வைத்து தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆகவே இப்படியான சதிச்செயல்களில் ஈடுபட ஆரம்பித்து விட்டனர். இனி மீடியாக்கள் தன் எரிச்சலை அதிமுக அரசின் மீது காட்டும்.  சதியில் முதல்வர் சிக்கிக் கொண்டார்.

- பஞ்சு

நன்றி : நக்கீரன்

 


விபச்சாரத்தை வளர்ப்பது மக்கள்

ஜனவரி 8, 2012

மிஸ்டர் அனாதி,

உங்களின் “சான்ஸ் பிடிப்பது எப்படி?” என்ற பதிவை எனது தோழி இமெயில் செய்திருந்தாள். காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்ற உங்களின் செய்தி,  முற்றிலும் தவறானது. நாங்கள் நடிக்கத்தான் வருகின்றோமே ஒழிய, படுக்க அல்ல என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.  எங்களை அதைச் செய்யும் நிலைக்குத் தள்ளுவது ஆண்களாகிய நீங்கள். உங்களின் வக்கிர எண்ணம். நானொரு நடிகை, என்னை தொடர்பு கொண்ட ஒருவர், அவர் தலைவரிடம் படுக்க வரவில்லை என்றால் முகத்தில் ஆசிட் வீசி விடுவேன் என்றும், வீட்டினை நெருப்பு வைத்துக் கொளுத்தி விடுவேன் என்று மிரட்டினார். போடா பு… என்றுச் சொன்னேன், மறு நாள் எனது கார், எரிக்கப்பட்டது. காரின் விலை 16 லட்சம். என்னால் என்ன செய்ய முடியும் ? யாரிடம் சென்று முறையிடுவது? வேறு வழி இல்லாமல் கிழட்டுக் கபோதியிடம் போக வேண்டியதாகப் போயிற்று. மக்களாகிய நீங்கள் இது போன்ற கழிசடைகளைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கின்றீர்கள்.  நாங்களும் இந்த பன்றிகளிடம் படாது பாடு படுகிறோம்.

இயக்குனரிடமோ, ஹீரோவிடமோ, தயாரிப்பாளரிடமோ அட்ஜஸ்ட் செய்யவில்லை என்றால் ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னென்ன கொடுமைகள் நடக்கும் தெரியுமா? ஒரு நாள் முழுவதும் கொடுமையான மேக்கப் போட்டு ஷாட் எடுக்காமல் உட்கார வைத்து விடுவான் பரதேசி இயக்குனர். அதை நக்கலாய் பார்த்துச் சிரிப்பான் ஹீரோ. டார்ச்சர்களில் இது போல இன்னும் பல விதம் இருக்கிறது மிஸ்டர் அனாதி.

உங்கள் பிளாக்கைப் படித்த போது, முன்னணி பதிவாய் “பால் கொடுக்கும் சதா” என்ற தலைப்பு இருக்கிறது. இணைய தளத்தில் படிக்கும் வாசகர்களின் லட்சணம் என்ன என்பது பற்றி உங்களுக்கு நன்கு தெரியும். நாங்கள் விபச்சாரம் செய்வதில்லை. மக்களாகிய நீங்கள் விபச்சாரம் செய்கின்றீர்கள்?

அவன் பொண்டாட்டியை இவன் வைத்துக் கொள்வதும், முத்தமிடுவதும், கண்ட கண்ட இடங்களில் கூட்டாக செக்ஸ் வைத்துக் கொள்ளும் சினிமாக்காரர்களை நீங்கள் செலிபிரட்டி என்கின்றீர்கள். இவர்களை நடு ரோட்டில் வைத்துச் செருப்பால் அடித்தால் அல்லவா விபச்சாரம் தவறு என்கிற வாதம் எடுபடும்.  சினிமாவில் செக்ஸ் உணர்ச்சியைத் தூண்டி விடுகின்றார்கள். அதை அனுமதிக்கிறது சென்ஸார் போர்டு. செக்ஸ் உணர்ச்சி ஏற்படும் ஒருவன் சுவற்றிலா தேய்த்துக் கொள்வான். காசு கொடுத்து, எங்களை மாதிரி நடிகையிடம் தான் வருவான். நாங்கள் வரவில்லை என்றால் கூட விடமாட்டான்கள்.

குத்துப்பாட்டு போட்டால் குதித்து ரசிக்கும் மக்களாகிய நீங்களே எல்லாவற்றிற்கும் காரணம். நாங்கள் படுத்துச் சான்ஸ் பிடிக்க காரணமே நீங்கள் தான். நாங்கள் அல்ல. இது போன்று எழுதுவதை முதலில் நிறுத்துங்கள். ஏற்கனவே நொந்து நூடுல்ஸாகியிருக்கும் எங்களை மேலும் மேலும் துன்புறுத்தாதீர்கள். ப்ளீஸ்.

குறிப்பு : உங்களின் ஹோட்டலுக்கு உங்களைச் சந்திக்க விரும்பி வந்த போது, பார்க்க முடியவில்லை. பொங்கலும், சாம்பாரும் சூப்பராக இருந்தது. அடிக்கடி அங்கு வருவேன். என் போட்டோவை  அனுப்பி இருக்கிறேன். உங்களுக்கு விருப்பமிருந்தால் என்னைச் சந்திக்கலாம்.

- இந்திரா, சென்னை

அன்புத்தோழிக்கு,

உங்களை எனக்கு நன்கு தெரியும். நீங்கள் வரும் போது நான் அவசர வேலையாக வெளியூர் சென்றிருந்தேன். இன்று நீங்கள் வந்தால் அவசியம் சந்திப்பேன். எனது அப்பதிவு உங்களை மன வருத்தம் ஏற்படச் செய்திருந்தால், வருந்துகிறேன்.

- அனாதி.


சான்ஸ் பிடிப்பது எப்படி?

ஜனவரி 6, 2012

சமீபத்திய சில சினிமா அலப்பறைகளை நீங்கள் பிளாக்கில் படித்திருக்கலாம்.  இணையதள வீடியோக்களில் பார்த்திருக்கலாம். எல்லாம் ஒன்றை மட்டுமே தான் சொல்கின்றன. எதிர்காலம் பற்றி இன்று என்ன கவலை, எப்படியாவது வாழ், எதையாவது செய்து காசு பார் என்பதுதான். பெண்கள் கலர் மாறிக் கொண்டிருக்கிறார்கள். காசொன்றே வாழ்க்கை என்பதாய், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராய் இருக்கின்றார்கள். சமூகம் சீரழிந்து கொண்டிருக்கிறது.

சமீபத்தில் எனது துபாய் நண்பரின் சிறப்பு விழாவிற்குச் சென்றிருந்தேன். அங்கு தமிழ், தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகை ஒருவரைப் பார்த்தேன்.  பத்து பேருக்கு குறைவாக கலந்து கொண்ட அந்த விருந்தில் கலந்து கொள்ள, அந்த நடிகைக்கு ஒன்றரைக் கோடி பணம் கொடுத்து அழைத்து வந்திருக்கிறார் நண்பர். அது பாலிங்கிற்கும் (டபுள் பால்ஸ் கேம்ஸ் பாய்ஸ்) சேர்த்துதான்.

மூன்று நாட்கள் உற்சாக பானத்துடன் நண்பரின் தனி அறையில் நிர்வாணமாகவே கிடந்தார் நடிகை. நண்பர் வேண்டிய மட்டும் அவருடன் கும்மி அடித்தார்.

இந்தியா வரும் போது, இருவரும் சேர்ந்தே வந்தோம். அப்போது அவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட சில விஷயங்கள்.

பிரபல இயக்குனர்களின் படங்களில் நடிக்க சான்ஸ் பிடிக்க வேண்டுமானால் இயக்குனரிடமும், தயாரிப்பாளர்களிடமும், ஹீரோவிடமும் கண்டிப்பாக படுக்க ஒப்புக் கொண்டால் மட்டுமே சான்ஸ் கிடைக்குமாம். சில இயக்குனர்கள் புதிய தயாரிப்பாளர்களிடம் இந்த நடிகையின் டேட் இருக்கிறது, நடிகரின் டேட் இருக்கிறது என்றுச் சொல்லி, படம் முடியும் வரை “இலவச அனுபவிப்பு” உண்டு என்றுச் சொல்லி சரிக்கட்டுவார்களாம். ஆனால் தயாரிப்பாளர்கள் அதுக்கு தனி அமவுண்டு கொடுத்து விடுவார்களாம். அது மட்டுமல்லாமல் பிரபல நடிகையுடன் பேச்சு வார்த்தை என்று செய்திகள் வருகின்றன அல்லவா, அது படுக்கின்றாயா என்ற பேச்சு வார்த்தை தானாம். அதற்குச் சரி என்றால் படம் கிடைக்கும். சரியில்லை என்றால் படம் கிடைக்காது. காசு கிடைக்காது.

அதுமட்டுமல்ல, பிரபல கம்பெனிகளின் விளம்பரப்படங்களில் நடிக்க 10 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை கட்டணம் உண்டு. பாலிங் சமாச்சாரத்திற்கு ஸ்பெஷல் ரேட்டு உண்டாம். இப்படி செட்டிலான நடிகைகள் தமிழ் சினிமாவில் அதிகம் உண்டு.

ஒரு நடிகை அடிக்கடி ஃபாரீன் சென்று விடுவார். அங்கு தான் கச்சேரியே. தொழிலதிபர்கள் ஃபாரீன் டிரிப் செல்லும் முன்பு காரில் பெட்டி பெட்டியாய் பணம் சென்று சேர்ந்து விடும். இரண்டு அறைகளை தனித்தனியாக் புக்கிங் செய்து, அடுத்த ஒரு சில நாட்களில் ஃபாரீன் செல்லும் தொழிலதிபர் நடிகையைப் பதம் பார்ப்பார். அத்துடன் நடிகைக்கு இலவசமாய் ஷாப்பிங்கிற்கு டிப்சும் உண்டாம். கூடப் போகும் அம்மா வகையறாக்களுக்கு தனித் தனி டிப்ஸ் உண்டாம்.

சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குனர்,  ஹீரோ படுக்க வைக்காமல் விட மாட்டார்கள். இப்படியே பலருடன் படுத்துப் படுத்து செக்ஸே மறத்துப் போய் விடுவதால், இந்த நடிகையின் எதிர்பார்ட்டி நடிகை ஒருத்தி ஹிராயின் பயன்படுத்துவாராம். ஒரு இரவில் பல இலட்சம் காசு என்றால் சும்மாவா?

இதில் புத்திசாலிகள் கேரள நடிகைகள் தானாம். ஓரளவிற்கு காசு சேர்ந்ததும் செட்டில் ஆகி விடுவார்களாம்.

ஒரு டான்ஸ் மாஸ்டர் கலைப்பயணம் என்றுச் சொல்லி வெளி நாடுகளுக்குச் சென்று “அந்தச் சேவையை” இங்குள்ள பல தொழிலதிபர்களுக்கும், அங்குள்ள தமிழர்களுக்கும் சேவையை வாரி வழங்குகின்றாராம். ஒரு ஸ்டேஜ்ஜுக்கு மினிமம் இரண்டு லட்ச ரூபாயுடன், பாலிங்கிற்கு ஸ்பெஷல் அமவுண்டு என்றார் நடிகை. இவர்தான் உங்க ஹீரோ என்ற தொடர் ஏதோ ஒரு பத்திரிக்கையில் வந்தது நினைவில் இருக்கலாம். அதை விட படுபயங்கர ரசனைகள் இருப்பவர்கள் ஹீரோக்கள். ஒவ்வொன்றாய் எழுதுவேன்.

அனாதியின் வாசகர்கள் சினிமாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட, தன் குடும்பத்தாருக்கும், தன் நண்பர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்பதால் சில அப்பட்டமான ரகசிய சம்பாஷனைகளை இந்த நடிகையின் அனுமதியோடு எழுதுகிறேன்.

அரசியல் வேண்டாம், சினிமா வேண்டாம். அதை விடுத்து அழகான வாழ்க்கை நம் வசம் இருக்கிறது. அதை நீங்கள் அனுபவியுங்கள். வாழ்த்துக்கள்.

- அனாதி

 


டாக்டரைக் கொன்றது சரியா?

ஜனவரி 4, 2012

அனாதி அவர்களுக்கு,

தூத்துக்குடியில் தன் மனைவி இறந்ததற்கு கோபப்பட்டு, சிகிச்சை அளித்த டாக்டரே காரணம் என்று நினைத்து, கொலை செய்திருக்கின்றாரே ஒருவர், அது சரியா? தவறா? நீங்கள் எப்போதுமே வித்தியாசமான பார்வையில் ஒரு விஷயத்தை அணுகுவதால் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன்.

வீணா, ஃப்ரான்ஸ்

வீணா,

டாக்டர்கள் தங்களைப் பிறர் கொல்லும் படி வைக்கின்றார்கள், ஆகவே இப்படியான சம்பவங்கள் நடக்கின்றன என்றுத்தான் சொல்ல வேண்டும். பெரும்பாலான அரசு மருத்துவர்கள் தனியாக பிராக்டீஸ் செய்து கொண்டு, அரசுப் பணத்தினையும் வாங்கிக் கொண்டு தில்லாலங்கடி வேலைகளைச் செய்கின்றார்கள். தமிழகத்தில் பெரும்பாலான ஆக்சிடெண்ட் நடப்பது யாரால் என்று பார்த்தோமென்றால் அரசுப் பஸ்களால் என்று உடனடியாகச் சொல்லலாம். அரசு டிரைவர்கள் நட்ட நடு ரோட்டில் பஸ்ஸினை பார்க் செய்து விட்டு டீக்குடிக்கச் செல்வார்கள். அது போல அரசு மருத்துவர்களும் “காசு” ஒன்றே பிரதானம் என்கிற வகையில் நடந்து கொள்வது சிகிச்சைக்குச் செல்லும் மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகின்றது. சாதாரண காய்ச்சலுக்கு இன்றைக்கு 500 ரூபாய் இல்லாமல் மருத்துவம் பார்க்க முடியாது. அரசு இதுபற்றி எதுவும் செய்வதில்லை. அரசு மருத்துவமனையிலோ அவலம் நடக்கின்றது. நன்றாக இருக்கும் ஒருவர் அரசு மருத்துவமனைக்குள் சென்று திரும்பினால் உடனடியாக நோயாளி ஆகி விடுவான். போலி மருந்து, போலி மருத்துவம், மக்களை ஏமாற்றிக் காசு பறிக்கும் மருத்துவமனைகள், கிட்னி திருடிய மருத்துவமனைகள், இல்லாத நோயை இருப்பதாகச் சொல்லி காசு பறிக்கும் திருட்டு மருத்துவர்கள் இருக்கும் வரையிலும், அரசு இது பற்றி கண்டு கொள்ளாத நிலையிலும் இது மாதிரியான கொலைகள் நடக்கத்தான் செய்யும். யாரும் எதுவும் செய்யமுடியாது.

தமிழகத்தில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் அநீதிக்கு எதிராய் அடிபோடும் பழக்கம் உருவாகி வருகிறது. அமைச்சரையே அடிக்கின்ற போது, டாக்டரெல்லாம் பச்சா. ஊதி விடுவார்கள் ஊதி.

ஒழுங்காய், சரியாய் அரசு அலுவலர்கள் மட்டுமல்ல தனியார் மருத்துவமனைகளும் அதனதன் வேலைகளைச் செய்ய வேண்டும். இல்லையென்றால் அதீத கோபத்தில் இப்படியான சம்பவங்கள் நடக்கத்தான் நேரிடும். ஒரு காலத்தில் ஆசிரியரைத் தெய்வமாக மதித்தார்கள். அதற்குக் காரணம் அந்த ஆசிரியர்கள். ஆனால் இன்று ஆசிரியர்களை அடிமைகள் போல மதிக்கின்றார்கள். இதற்கும் காரணம் ஆசிரியர்களே. அது போல மருத்துவர்கள் மாபெரும் திருடர்களாய் மாறிக் கொண்டிருக்கின்றார்கள்.

இக்கொலை நடக்க காரணம் அம்மருத்துவரே ஆகின்றார். அதற்கு தமிழக மருத்துவர்கள் செய்கிற ஸ்ட்ரைக் அப்பட்டமான திமிர்! அகங்காரம். அரசை மட்டுமல்ல மக்களையும் மிரட்டும் செயல். மக்கள் சேவையில் இருப்போர் இப்படியான ஸ்ட்ரைக்கில் கலந்து கொள்வது என்பது ஆணவமும், அகங்காரம் இருப்பதால்.

 நான் அரசுக்கட்டிலில் இருந்திருந்தால் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்ட மருத்துவர்களை கைது செய்து சிறையில் அடைத்து, அவர்களின் மருத்துவ லைசென்ஸை பிடுங்கி, அவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்திருப்பேன். இதற்கெல்லாம் சுய நலம் அற்ற தலைமை வேண்டும். அது இந்தியாவில் கிடையவே கிடையாது.

அவரவர் கடைமைய ஒழுங்காய் செய்தால் ஏன் பிரச்சினை வரப்போகிறது. படித்தவன் சூது செய்தால் அய்யோ என்று போவான் என்பார்கள். இந்தியா மட்டுமல்ல உலகெங்கிலும் படித்தவர்களால் தான் பெரும் பெரும் பிரச்சினைகளே வருகின்றன. படிக்காதவர்களுக்குச் செல்ல வேண்டிய வசதிகளைக் கூட படித்தவர்கள் திருடிக் கொள்கின்றார்கள். வேறு வழி இன்றி கொதித்துப் போன மக்கள் அடி போட கிளம்பி விடுவார்கள். அது தப்புக்கு உரிய தண்டனை தானே ஒழிய தவறில்லை என்பேன்.

- அனாதி

 


Follow

Get every new post delivered to your Inbox.

Join 108 other followers