இசையமைப்பாளர்களின் அரசியல்

சினிமா உலகில் நடக்கும் அயோக்கியத்தனங்களுக்கு எல்லை என்பது இல்லவே இல்லை. அதில் முதல் உதாரணம் “பிளாக் மணி”. ரஜினி காந்த் பிளாக் மணி வாங்கவே இல்லை என்று எந்த ரசிகனுக்காவது தெரியுமா? குதி குதியென்று குதிக்கின்றார்கள்.

சினிமாவில் கருப்புப் பணம் இல்லாமல் படமெடுக்க முடியுமா? இந்த விஷயம் எவருக்குத் தெரியாது? சிபிஐலிருந்து எல்லாத் துறையினருக்கும் தெரியும். ஆனால் யார் என்ன செய்தார்கள்? சொல்லுங்கள் பார்ப்போம் ?ரஜினி பிளாக் மணியில் தான் கல்யாண மணடபம் கட்டினார் என்கிறார் இளங்கோவன்.இல்லையென்று ரஜினியால் மறுக்க முடியவில்லையே ஏன்?ரசிகர்களை விட்டு ஆர்ப்பாட்டம் செய்கின்றார்.

ரஜினி ரசிகர்கள் “கருப்புப் பணத்தினை” ஆதரிக்கின்றார்களா என்றுச் சொல்ல வேண்டும். சும்மா குதிக்கக் கூடாது.

இந்தியாவின் பெரும்பகுதி கருப்புப் பணம் வைத்திருப்போர் சினிமா நடிகனும், நடிகைகளும் தான். தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வந்தது சில சினிமா நடிகர்கள் என்பதை மும்பை குண்டு வெடிப்பின் போது நாமெல்லாம் பார்த்தோம். ஏழை எளியோருக்கு கடுமையான சட்டவிதிகள், குண்டு வெடிப்பில் ஈடுபட்ட நடிகருக்கு ஜாமீன் வழங்கியது இந்திய நீதித்துறையின் கோரமுகத்தை வெளிச்சம் போடுகிறது. இன்னும் என்னென்ன அயோக்கியத்தனங்களை இந்தியா தன் மக்களுக்குச் செய்து வருகிறது தெரியுமா? அதை ஒவ்வொன்றாய் பார்ப்போம் வரும் காலங்களில்.  உண்மையைத்  தெரிந்து கொண்டீர்கள் என்றால் ஜன நாயகம் என்றால் இவ்வளவு கொடுமையா என்று நீங்கள் நிச்சயம் நினைப்பீர்கள். இதில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளைப் பற்றி எழுதவே முடியாது. அப்படி ஒரு கொடுமையைச் செய்கிறது இந்தியா. இனி மேட்டருக்கு வருவோம்.

சினிமாவில் இசையமைக்கும் சில புத்திசாலி ஆட்களின் அரசியல் வேலைகளை வெளிச்சத்தில் பார்ப்போம்.

 எஃப் எம் என்று ஒன்று இருக்கிறதே அதில் சில டிஜேக்களுக்கு இந்த சினிமா இசையமைப்பாளர்கள் “காசு கொடுத்து” தன் பாடல்களை அடிக்கடி ஒளிபரப்பும் படி செய்கின்றார்கள். டிவிக்களிலும் இதே போலத்தான் நடக்கிறது. அடுத்த சினிமாவைப் பிடிக்க இவர்களே இப்படி திகிடி வேலைகளைச் செய்து,  தயாரிப்பாளர்களை ஏமாற்றுகின்றார்கள். அதுமட்டுமா கவர் வாங்கும் நிரூபர்களுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, தன் பாடல்களைப் பற்றி அடிக்கடி செய்திகளில் வரும்படி செய்கின்றார்கள். இதுமட்டுமா, சில அடிப்பொடிகளை வைத்துக் கொண்டு அடிக்கடி போன் போடச் செய்து தான் இசையமைத்த பாடல்களைக் கேட்கச் செய்கின்றார்கள்.

ஏ ஆர் ரஹ்மானின் பாடல்கள் ஒவ்வொன்றும் திருடப்பட்ட டியூன்கள் என்று பல பதிவர்கள் எழுதி இருக்கின்றார்கள்.  இணையதள உதவியால் பல இசை வடிவங்களை கேட்கும் இந்த இசையமைப்பாளர்கள் ஏதோ ஒரு கோர்ப்பை எடுத்து சினிமா பாடலகளாய் உருவாக்குகின்றார்கள். இன்று வரும் பாடல்கள் ஒரு நிமிடம் கேட்க முடியுமா? எத்தனை பாடல்கள் வருகின்றன. எந்த பாடலாவது தொடர்ந்து கேட்க முடியும் வகையில் இருக்கின்றதா?

அடிக்கடி எஃப் எம் மற்றும் டிவிக்களில் ஒரு பாடல் ஒளிபரப்பாகின்றது என்றால் “காசு வாங்கப்பட்டிருக்கிறது” என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்பதிவு எழுதப்பட்டிருக்கிறது.

- பஞ்சு

 

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 108 other followers