இந்தியாவின் இன்றைய ஹாட் “லோக்பால்”. இதுபற்றி உங்களுக்கு ஒரு கதையை அதுவும் செக்ஸ் கதையை எழுதித்தான் ஆக வேண்டி இருக்கிறது. ஏனென்றால் அந்தக் கதைதான் உங்களுக்கு “லோக்பால்” என்பதில் அரசியல்வாதிகளின் நிலை என்ன என்பதை தெளிவாகச் சொல்லும். நேற்று ஷஸ்வந்த் சின்கா பிரதமரை “ஊழல்வாதிகளின் பிரதமர்” என்கிறார். வாயில்லா ஜீவன்களின் உணவில் ஊழல் செய்த உலக மஹா ஊழல் மன்னன் லல்லு லோக்பால் வேண்டாமென்கிறார். அன்னா பார்லிமெண்டேரியன்களில் பலர் “குண்டர்கள்” என்கிறார். ஷரத்பவார் மினிஸ்டரி 1000 கோடி நஷ்டத்தை இந்தியாவிற்கு ஏற்படுத்தி இருக்கிறது என்கிறது சிஏஜி. இந்த ஆயிரம் கோடி மட்டுமல்லாமல் 2006 – 11 ஆண்டுகளில் உணவுப்பொருட்கள் திடீர் விலையேற்றத்திற்கு இந்த மினிஸ்ட்ரியே காரணம் என்கிறது சிஏஜி. சரத்பவார் பெரிய டிரேடர்ஸ்க்க்கு உதவி செய்திருக்கிறார் என்கிறது அது.
ஊழல்வாதிகளுக்கு சாமரம் வீசிக் கொண்டிருக்கிறார் பிரதமர். 2ஜியில் ஊழலே நடக்கவில்லை என்று நாட்டு மக்களுக்கு தவறான தகவல் தந்த பிரதமர் உலகிலேயே நம் பிரதமர் தான். இப்போது ராஜா ஜெயிலில் கிடக்கிறார். பிரதமர் சொல்லிய ஊழலே நடக்கவில்லை என்பது என்னவாயிற்று. தன்மீதான நம்பிக்கையின்மையை பிரதமர் மீண்டும் மீண்டும் இந்திய மக்களிடம் நிரூபித்துக் கொண்டே வருகிறார்.
இனி அந்த செக்ஸ் கதைக்குச் செல்வோம்.
அது ஒரு அழகான கிராமம். கிராமத்தில் விவசாயம் தான் முக்கியத்தொழில். விளைபொருட்களை அருகில் இருக்கும் சந்தையில் விற்பனை செய்வார்கள். இக்கிராமத்தில் இரண்டு தோழியர்கள் வசிக்கின்றார்கள். இருவரும் யவன பருவத்தில், அழகே உருவான அற்புதமான் பேரழகிகள். ஒருத்தியின் பெயர் காவிரி, இன்னொருத்தியின் பெயர் முல்லை. தினம் தோறும் இருவரும் விளைபொருட்களை சந்தைக்குச் சென்று விற்று வருவர்.
இந்தக் கிராமத்தினருக்கு இருக்கும் ஒரே பிரச்சினை என்னவென்றால் சந்தைக்குச் செல்லும் வழியில் இருக்கும் “ஜன நாயக அரசியல்வாதிகள்” என்ற காடு. இக்காட்டில் பலவகையான திருடர்களும், கொலைகார மிருகங்களும் இருக்கின்றன. ஆனால் பகலில் வெகு அருமையான அழகு தவழும் காடாய் ஜன நாயக அரசியல்வாதி காடு திகழும். வேறு வழி இன்றி அந்தக் கிராமத்தார் இருட்டும் நேரத்திற்குள் அக்காட்டு வழியைப் பயன்படுத்துவதை தவிர்த்து வந்தனர்.
இப்படியான நாட்களில் ஒரு நாள் சந்தையில் இருந்து திரும்பி வரும் போது முல்லையும், காவிரியும் மசண்டை நேரத்தில் காட்டுக்குள் நுழைந்து விட்டனர். இருவருக்கும் சரியான பயம். எங்கே ஏதாவது பிரச்சினை ஆகிவிடுமோ என்று பயந்து கொண்டே நடையை எட்டிப் போட்டனர்.
இந்தக் காட்டில் இரண்டு திருடர்கள் உண்டு. இவர்கள் இருவரும் சரியான லொள்ளுத் திருடர்கள். முதலாமவன் பெயர் பிரதமன். இரண்டாவது திருடனின் பெயர் முதலமைச்சன். எவராவது சிக்குகின்றார்களா என்று பார்த்துக் கொண்டிருந்த இருவரின் கண்களில் காவிரியும் முல்லையும் தென்படுகின்றனர். காவிரி மற்றும் முல்லையின் காதுகளிலும் கழுத்திலும் தென்படும் தங்கச் செயின்களும், தோடுகளும் இரண்டு திருட்டுப் பயல்களை கவர்கின்றனது. திடீரென்று இருவரின் எதிரில் குதித்து கத்தியைக் காட்டி எல்லாவற்றையும் கழட்டிக் கொடுத்து விட்டு ஓடுங்கள் என்று மிரட்டுகின்றனர்.
காவிரிக்கும் முல்லைக்கும் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. பயத்தில் அலறியபடியே “எங்களை ஒன்றும் செய்து விடாதீர்கள், நீங்கள் கேட்டபடியே எல்லாவற்றையும் கழட்டிக் கொடுத்து விடுகிறோம் “ என்றுச் சொல்லியபடியே காதில் இருந்த தோடு, கையில் போட்டிருந்த வளையல், செயின்களையும், சந்தையில் பொருள் விற்ற பணத்தினையும் கொடுத்து விட்டனர். எல்லாவற்றையும் வாங்கிக் கொண்ட இருவரின் கண்களில் காவிரி, முல்லையின் அழகு பட அவர்களை அனுபவிக்க முடிவு கட்டிக் கொண்டனர்.
திருடர்கள் இருவரையும் நெருங்க, மேட்டரை மோப்பம் பிடித்த இருவரும் இரண்டு பேரின் கால்களில் விழுந்து “அண்ணே நாங்கள் உங்க தங்கச்சி மாதிரின்னே, எங்களை ஒன்றும் செய்து விடாதீர்கள்” என்று கதறிக் கொண்டு விழுந்தனர். இரண்டு திருடர்களுக்கும் கொஞ்சம் செண்டிமெண்ட் உண்டு. அடடே என்னடா இது இவளுக இரண்டு பேரும் நம்மை அண்ணேன்னு சொல்லிட்டாங்களேன்னு நினைச்ச அடுத்த செகண்டு, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சிரித்தனர்.
கண்களில் விஷமம் துள்ளியது. பிரதமன் முதலமைச்சனைப் பார்த்து ”மச்சான் நீ என் தங்கச்சியப் போடு, நான் உன் தங்கச்சியைப் போடுறேன்”னு சொல்லிக்கிட்டே பாஞ்சுட்டானுவ.
கதை முடிஞ்சிடுச்சு. பிற சமாச்சாரங்களை நீங்களே முடிவு கட்டிக் கொள்ளுங்கள். இது தான் லோக்பால் மசோதா பற்றிய பதிவு.
- பஞ்சு
