அதிகாரிகளுக்கு சாதகமான சசிப் பெயர்ச்சி

தமிழக அரசியல் களம் படு சூடாக இருக்கிறது. சனிப் பெயர்ச்சி என்பது சசி பெயர்ச்சியாய் மாறி நிற்கிறது. யாருக்குப் பெயர்ச்சியோ தெரியவில்லை ஆனால் அதிகாரிகளுக்கு நல்ல பெயர்ச்சி என்றே கொள்ள வேண்டும் இந்த நிகழ்வை வைத்து.

இந்தியா சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகாலமாய் இந்திய மக்களில் முக்கால் வாசிப் பேர் ஏழ்மையில் வாழக் காரணமே “அரசு அதிகாரிகளும், அரசுப் பணியாளர்களும்” தான் என்பேன் நான். அரசியல்வாதி தவறு செய்யப் பணித்தால் முடியாது என்று சொல்ல வராமல் அடிக்கும் கொள்ளையில் பங்கு கிடைக்குமா என்றல்லவா இவர்கள் இதுகாறும் நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்களால் இன்று அண்ணா ஹசாரேக்கள் லோக்பால் வேண்டுமென்று உண்ணாவிரதம் இருக்க வேண்டி இருக்கிறது.

அதிகாரம் இருக்கும் இடத்தில் சில பல அதிகார மையங்களும் இருக்கும். அதில் முதலமைச்சரின் சமையல்காரனும் அடக்கம்.

முன்னாள் முதல்வரை எடுத்துக் கொண்டால், இவருக்கு இவரது குடும்பம் இல்லையென்றால் இந்த நேரம் “திமுக தொண்டர்களே” இவரைப் பரலோகம் அனுப்பி வைத்திருப்பார்கள். பணம், பதவி கிடைக்கவில்லை என்றவுடன் அடுத்த கட்சி தாவி, போட்டுக் கொடுப்போர் இரண்டு பக்கமும் இருந்து கொண்டுதானே இருக்கின்றார்கள் இதுவரையிலும்.

இன்றைய முதல்வர் அவர்களுக்கு சசி இல்லையென்றால் இந்த நேரம் என்ன ஆகி இருப்பாரோ தெரியாது. ஏனென்றால் ஏதேதோ இக்கட்டான பிரச்சினைகளில் எல்லாம் இவர்கள் தான் அவருக்குத் துணை நின்றார்கள். இன்று முதலமைச்சரைச் சுற்றி நிற்கும் எவராவது பைசா பிரயோசனம் இல்லாமல் அவருக்கு உள்ள சுத்தியுடன், உண்மை அன்புடன் தொண்டு செய்ய முனைவார்களா என்று கேட்டால், அப்படி எந்த ஒரு கேனயனும் இதுவரை பிறக்கவில்லை என்பார்கள்.

காவல்துறையினரை நம்பி ஒரு அரசியல்தலைவர் இருக்கலாமா என்றால் அதை விட நூறு விஷப் பாம்புகளுடன் குடித்தனம் நடத்துவது பெஸ்ட் என்பார்கள் விபரம் தெரிந்தவர்கள்.  இன்றைய காவல்துறையினர் நாளைய ஏவல்துறையினராய் மாறி விடுவார்கள் என்பதை இன்றைய முதலமைச்சர் நன்கு அறிவார்.

அரசியல்தலைவர்களுக்கு அவர்களைச் சுற்றிய உறவு வளையமோ அல்லது நட்பு வளையமோ மிக்க அவசியம். அப்படியான வளையம் இல்லையென்றால் எதிர்காலம் சூன்யத்தின் பிடியில் சிக்கி விடும்.

இனி தமிழக அதிகாரிகள் தங்கள் மனைவிகளுக்கு ஒட்டியாணங்களை வரிசையாய் வாங்குக் குவிப்பார்கள். காவல்துறையினர் பெரும் பேரங்களைப் பேசுவார்கள். உதாரணம் வேண்டுமென்றால் சவுக்கு இணையத்தைப் படித்துக் கொள்ளுங்கள். இனி தமிழகத்தின் பிசினஸ் செண்டர் “அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும்” தான். இதைத் தான் அவர்கள் எதிர்பார்த்தார்கள். இதற்கு ஒரு பெயரும் உண்டு. அது தான் “ நேர்மையான நிர்வாகம்”. காமராஜர் காலத்தில் கூட நேர்மையான நிர்வாகத்தைக் கொடுத்து விடாத அரசு அலுவலர்கள், இந்தக் காலத்திலா கொடுத்து விடப் போகின்றார்கள்?  மக்களின் பணத்தை இனிப் பலரும் ருசிப்பார்கள். மக்கள் பட்டினியில் கிடந்து தவிப்பார்கள். தமிழகத்தின் நல்லாட்சி இன்று அரசாட்சியாய் மாறி நிற்கிறது.

இன்றைய பிரச்சினைகளுக்கு காரணம் “சில பல பாப்பான்கள்” என்கிறது ஒரு உளவுத்துறைக் குருவி. பாப்பான்கள் எதுவுமே தெரியாது போல காட்டிக் கொள்வதில் மன்னர்கள். அவர்களுக்குத் தேவை “காரியம்” அன்றி “வீரியம்” இல்லை. தமிழகம் பாப்பான்களின் பிடியில் என்கிறார் ஒரு பத்திரிக்கையாளர்.

- பஞ்சு

4 Responses to அதிகாரிகளுக்கு சாதகமான சசிப் பெயர்ச்சி

  1. வேல் says:

    அதுவும் சரியாக வருமா? அரபு நாட்டில் தண்டனைகள் கடுமையானதுதான் அங்கும் குற்றம் குறையவில்லை.

  2. arun says:

    Atlast people only going to suffer…rightly said panchu sir…

  3. வேல் says:

    இப்படியும் ஒரு வாய்ப்பு உண்டா?, அப்போ என்னதான் செய்ய மக்கள்….

    • அனாதி says:

      இது விதி வேல்! மிகக் கடுமையான தண்டனைகளால் மட்டுமே ஜன நாயகத்தில் நீதியை நிலை நாட்ட முடியும் – பஞ்சு

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 108 other followers