அன்பு நண்பர்களே,
ஏதோ ஒரு படத்தில் வடிவேல் “ நானும் ஒரு ரவுடி” என்றுச் சொல்வது போல “ நானும் ஒரு எழுத்தாளர்” என்று எழுதிக் கொண்டிருக்கும் பாரு நிவேதிதாவை எங்கள் நண்பர்கள் பல முறை “ரேக்கி” இருக்கின்றார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
ஒருவனின் எழுத்தைப் படிக்கும் போது “ஏன், எப்படி, எதற்கு” என்று ஒரு முறை கூட எண்ணிப் பார்க்க மாட்டார்களா என்று யோசித்ததுண்டு.பல பதிவர்கள் பாருவைப் பற்றி ஆகா ஓகோ என்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை நினைக்கையில் எனக்கு பெரும் மனக்குழப்பம் ஏற்படும். ஏன் இப்படி ஒரு அடிமுட்டாள்தனத்துடன் நடந்து கொள்கிறார்கள்.
கீற்று இணையதளத்தில் பாருவின் மனைவி சிவந்திகா எழுதியாக குத்தியானந்தர் வெளியிட்டதாக ஒரு கடிதம் வெளியாகி இருந்ததைப் படித்தேன். அதற்கு ஒரு பதிவர் கடுமையான கண்டனத்தையும் வெளியிட்டு இருந்ததையும் படித்தேன்.
பாருவின் எழுத்தைப் படிக்கின்ற போது அவருக்குள் இருக்கும் சமுதாய சீர்கேடுகளுக்கு எதிரான பெரும் வன்முறை உணர்ச்சியை அறிய இயலும். ஆனால் அவரின் தொடர்ந்த எழுத்துக்களில் அந்த வன்முறை மிகச் சரியான சுய நலம் சார்ந்ததாக இருப்பதை நான் பலமுறை படித்திருக்கிறேன்.
உண்மையா பொய்யா என்பதை அறியாமல் கீற்று இணையதளம் அக்கடிதத்தை வெளியிட்டு இருப்பதை கண்டித்து இருக்கின்றீர்கள் மிஸ்டர் பதிவர். அக்கடிதத்தில் இருக்கும் அத்தனையும் உண்மை என்பதை, நீங்கள் அவரின் புத்தகம் ஒன்றிலிருந்து அறிந்து கொள்ளலாம். அவருக்கு கற்பனையாக எதுவுமே எழுத வராது. அப்படி அவர் எழுதுகிறார் என்றால் அது வேறொருவரின் ஆக்கமாகத்தான் இருக்கும். அப்படி ஒரு புத்தகத்தையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். அப்படியான ஒரு அபத்தமும் நடந்திருப்பதை நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள்.
இப்படி எழுதுவது அவர்மீதான அவதூறு என்று யாரும் சொல்ல முடியாது. ஏனென்றால் பாருவைப் பற்றிய பல கடிதங்கள் எங்களுக்கு ஆதாரங்களுடன் வந்திருக்கின்றன. அவைகளை வெளியிட எங்களுக்கு விருப்பமில்லை.
காரணம், நாங்கள் பாருவை மிகக் குறுகிய சுய நலம் சார்ந்த மனிதராய் மதிக்கிறோம். அவரளவில் அவரது எழுத்து என்பது அவருக்கான ஃபேண்டசிக்கான உதவியாகத்தான் இருக்கிறது. இருந்து வருகிறது. இணையதளத்தினை நன்றாகப் பயன்படுத்துவோரில் மிஸ்டர் பாரு ‘கை’ தேர்ந்தவர்.
இதோ கீற்று இணையதளத்தில் வெளியான திருமதி சிவந்திகாவின் கடிதம்.
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15619:2011-07-17-06-08-51&catid=1:articles&Itemid=264
பாருவிற்கு வக்காலத்து வாங்கும் பதிவர்களிடம் கேட்கிறேன். இந்த வன்முறை உணர்ச்சியை அவரளவில் சமரசப்படுத்திக் கொள்வது என்பது அவரின் எழுத்தின் மீதான சந்தேகப்பார்வையை வெகு சாதாரணமாய், அவரின் எழுத்தைப் படிக்கும் வாசகனுக்குள் ஏற்படுத்துவதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்களா?. ‘நான் ஒரு பாரதி’ என்று எழுதும் அவர், அடுத்த சில நொடிகளுக்குள் ‘என்னைக் கொன்று விடுவார்கள்’ என்று எழுதுவதை நீங்கள் எல்லோரும் படித்திருக்கின்றீர்களே,அதை எப்படி நியாயப்படுத்துவீர்கள் மிஸ்டர் பதிவர்கள்?
மஹா கவி பாரதிக்குள் இருந்த ‘அக்னிக் குஞ்சு’ என்பது எரிமலைக்கும் மேலானது. அந்த கவியை நீங்கள் படித்திருந்தீர்கள் என்றால் பாருவின் அபத்தமான வார்த்தையின் அர்த்தம் உங்களுக்குப் புரிந்து இருக்கும்.
உங்கள் ‘பாருவிற்குள் இருக்கும் அக்னி குஞ்சுவோ (குஞ்சு நீ அல்லடா இது) ஒரு கோக் பாட்டிலுக்குள் இருக்கும் கார்பன் டை ஆக்சைடு போல’ என்பதை நீங்கள் உணர்ந்திருக்க வேண்டும். அப்படி நீங்கள் உணரவில்லை என்றால் அது உங்களின் அனுபவமின்மையே காரணம்.
பாரு நிவேதிதாவின் ரகசியங்களை வெளியிட்ட “ குத்தியானந்தா” (குஞ்சு ஸ்பெஷல் வார்த்தை இது, நன்றிடா)விற்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரு ஒரு தடவை எங்கள் பிளாக்கை “ஒரு பயங்கரமான பிளாக்” என்று அடைமொழி கொடுத்து அவரின் தளத்தில் வெளியிட்டு இருந்தார். அதற்கு ஒரு நன்றியினை மிஸ்டர் பாருவிற்குத் தெரிவிக்கிறோம். (எங்கள் நன்றியை எப்படித் தெரிவிக்கிறோம் என்பதை பதிவர்கள் கவனிக்கவும், அவர் பிளாக்கில் லிங்க் கொடுத்தாலே புளகாங்கிதப்படுபவர்கள் அல்லவா சில பதிவர்கள். அதுவும் பாருவின் கை தேர்ந்த டெக்னிக் என்பதை அப்பதிவர்கள் அறியவில்லை)
மேலே இருக்கும் இணைப்பிலுள்ள கடிதமே “பாருவின் சீக்ரெட்ஸ்” பற்றிப் பேசுவதால் எழுத ஒன்றுமில்லை ஃப்ரண்ட்ஸ்.
தட்ஸ் ஆல் டியர் ஃப்ரண்ட்ஸ்
- அன்புடன் அனாதி
Like this:
Like ஏற்றப்படுகின்றது...