நண்பர் அனாதி, குடிகாரன் மற்றும் பஞ்சர் பலராமன் மற்றும் இருட்டில் நடக்கும் விசயங்களை வெளிச்சத்தில் எழுதும் நண்பர்களுக்கு என் வணக்கம். நான் எத்தனை வலைப்பூக்களுக்கு ரசிகன் என்றாலும் உங்கள் வலைத்தளத்திற்கு ஸ்பெசல் ரசிகன் என்றே சொல்ல வேண்டும். தினமும் அலுவலகத்திற்கு வந்தவுடன் முதலில் பார்ப்பது மின்னஞ்சல் என்றால் இரண்டாவது உங்களுடைய வலைத்தளம். ஆனால் என் அலுவலகத்தில் வலைத்தளம் பார்க்க தடைசெய்யப்பட்டுள்ளது என்பதால் கூகிள் ரீடர் மூலமாக படித்து வரும் ரசிகன். இப்படி திடிரென்று சொல்லாமல் கொள்ளமால் கூகிள் ரீடரில் முழு பதிவையும் படிக்க விடாமல் ஏன் தடுத்து விட்டீர்கள். உங்கள் வலைத்தளத்திற்கு கூட்டம் சேர்க்கும் எண்ணமா ஏன் உங்களுக்கு தானாக சேரும் கூட்டம் இருக்க இப்படி நீங்களும் அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் நடிகர் நடிகைகள் போல கூட்டம் சேர்க்க ஆசைப்படுகிறீர்கள். என்னுடைய கோரிக்கை ஒன்று தொடர்ந்து எழுதுங்கள் அனைத்து வழிகளாலும் உங்கள் வலைத்தளத்தை முழுவதும் படிக்க வழி செய்யுங்கள் அவ்வளவே. உங்கள் எழுத்துக்கள் மிக பிரபலமாக இருக்கும் அனைவருடைய இன்னொரு பக்கத்தையும் படிக்க உதவியாக இருக்கிறது. இது எனக்கு உதவி மட்டுமல்ல என்னுடைய தாழ்மையான கோரிக்கை. நானும் ஒரு வலைப்பதிவாளன் ஆனால் தொழில் ரீதியாக அல்ல ஆத்மதிருப்திக்காக மட்டுமே எழுதி வருகிறேன். முடிந்தால் ஒரு எட்டு வந்து என் வலைத்தளத்தை பற்றி உங்கள் கருத்துக்களை கூறுங்கள். முடிந்தால் மட்டுமே. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை இன்னும் கூர்மையாக எழுத வாழ்த்தும் உங்கள் தோழன் <<<<<<< . நன்றி வாழ்க வளமுடன்.
- வாசகரின் பெயர் மறைக்கப்பட்டுள்ளது.
கூகுள் ரீடர் ஆக்டிவேட் எப்படி செய்வது என்றே தெரியாது. ஆனாலும் முயற்சிக்கின்றோம். நிச்சயம் செய்து விடுகிறோம். கோரிக்கையெல்லாம் வைக்க வேண்டாம். இது வேண்டுமென்று சொல்லுங்கள். நிச்சயம் செய்கிறோம். கோடிக் கணக்கில் பணமா கேட்கின்றீர்கள்? உங்கள் பிளாக்கை படித்தோம். கம்யூட்டர் ஆசாமியாய் இருப்பீர்கள் போல. வாழ்த்துக்கள். தொடர்ந்து படிக்கிறோம். நீங்கள் விரும்பினால் ஒரு தனி இணைப்பை போட்டு விடுகிறோம். பாராட்டுக்கு நன்றி
- அனாதியும், நண்பர்களும்
அனாதி பதிப்பித்தது. 
