அன்பார்ந்த வாசகர்களே, தங்களின் தொடர்ந்த ஏகோபித்த ஆதரவிற்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நேற்றைய கிரைம் பைல் என்ற நிகழ்ச்சியில் இந்தியாவில் தற்பொழுதும் நடைபெற்றுக் கொண்டு வரும் ஹை புரஃபைல் விபச்சாரம் பற்றிய நிகழ்ச்சி ஒன்றினைக் காண நேர்ந்தது.
http://www.escortserviceindelhi.com
http://charlieescort.com
http://www.eliteescortsdelhi.com
http://www.indianpari.com
http://www.indianbluescorts.org
http://www.eliteindianescorts.com
மேலே இருக்கும் இணையதளங்களை ஒரு பார்வை பாருங்கள். இந்தியா எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை அறிய முடியும்.
எஸ்கார்ட் என்று விளம்பரப்படுத்தி வாடிக்கையாளரைக் கவரும் சில இணையத்தளங்களைப் பற்றிய செயல்பாடுகளையும், அதில் உறுப்பினர்களாக இருக்கும் பெண்களைப் பற்றியும் விரிவாக விளக்கினர் அந்த நிகழ்ச்சியில். அந்த இணையத்தளத்தில் <சென்சார்> என்று நாமம் பெற்ற பெண்ணை பேட்டி எடுத்தார்கள்.
அம்மாவின் மருத்துவச் செலவுக்காகவும், தம்பியின் படிப்பு மற்றும் சாப்பாட்டிற்காகவும் இந்த வழிக்கு வந்ததாக கண்ணீருடன் சொன்னார் அந்தப் பெண். அம்மாவிற்கு மருத்துவம் பார்த்த மருத்துவரிலிருந்து, வேலைக்குச் சென்ற இடங்களிலெல்லாம் தன்னைப் பயன்படுத்திக்கொண்டார்கள் என்று அழுகிறார் அவர். எனக்கும் திருமணம், குழந்தைகள் என்ற ஆசைகள் உண்டு எனவும், நான்கு முறை எனது நிச்சயதார்த்தம் நின்று போய் விட்டது என்றும் சொல்லி கண்களில் கண்ணீர் சொட்டச் சொட்ட ஏக்கப்பார்வையுடன் குற்ற உணர்ச்சியில் பரிதவித்தார் அந்தப் பெண்.
சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இந்தியாவை ஆண்டு வந்த அரசியல் கட்சிகள் பெண்களுக்கு எதிரான சமூக குற்றங்களையும், சிறார்களுக்கு எதிரான குற்றங்களையும் அடக்க எந்த வித கடுமையான சட்டங்களையும் கொண்டு வரவில்லை. காரணம் அத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடுவோரில் பெரும்பாலானோர் அரசு அமைப்புகளில் இருக்கின்றனர். சிலர் அரசியல்வாதிகளாகவும் இருக்கின்றனர். பல அரசு, அரசியல்வாதிகளின் வீட்டில்தான் சிறார்கள் அடிமை வேலை பார்க்கிறார்கள் என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
சில அதிமேதாவிகள் சட்டங்களால் என்ன செய்து விட முடியும் என்று கேட்கிறார்கள். ஐரோப்பாவினை உதாரணம் காட்டுவார்கள். இந்தியாவில் விபச்சாரத்தை சட்டபூர்வமான தொழிலாக்கலாம் என்று சொல்கிறார்கள் சிலர். அப்படி சொல்பவர்கள் யாரென்று பார்த்தால் அவர்களின் வரலாறு நாற்றமெடுக்கும் பின்னணி கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்தியாவின் ஆதார சக்தியே குடும்பங்கள்தான். மேற்கண்ட நாடுகளில் குடும்பங்களின் நிலைகளைப் பற்றி ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். அப்போதுதான் புரியும் இந்தியாவின் கட்டமைப்பும் மற்ற நாடுகளின் கட்டமைப்பும்.
அப்படி விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கினால் என்ன நடக்கும் ?
ஏழ்மையில் சிக்கியிருக்கும் பெண்கள் விபச்சாரத்தில் தள்ளப்படுவார்கள். விபச்சாரத்தில் கிடைக்கக்கூடிய அபரிமிதமான வருமானத்தால் சிறுவயதிலேயே பெண் குழந்தைகள் கடத்தி வளர்க்கப்பட்டு விபச்சார சந்தையில் ஈடுபடுத்தப்படுவார்கள். குடும்ப அமைப்பு முற்றிலுமாக சீர் குலைந்து போய் விடும்.
இன்றைக்கு இந்தியா பொருளாதார இறக்கத்தில் பாதிக்கபடாமலிருக்க காரணம் குடும்ப அமைப்புகளின் சேமிப்பு காரணமாக இருக்கிறது என்கிறார் ஒரு பொருளாதார வல்லுனர். உலகெங்கும் இருக்கும் மானிடர்களுக்கு கனவு தேசமாய் விளங்கிய அமெரிக்காவின் பொருளாதார சீரழிவிற்கு காரணம் குடும்ப அமைப்பு முற்றிலுமாக சீர்குலைக்கப்பட்டதுடன் அரசாங்கம் குடும்ப அமைப்பை நிர்வகிக்க முயன்றதுதான் என்கிறார் அவர்.மனித வாழ்வின் அர்த்தமே மறு உருவாக்கத்தில் தான் இருக்கிறது. ஆனால் மறு உருவாக்கத்தை பெரும் சுமையாக கருத வைக்கின்றன இன்றைய நுகர்வோர் கலாச்சாரம்.
இன்றைய இந்தியாவின் அவசரத் தேவை விபச்சாரத்தை ஒழிக்ககூடிய மிகக் கடுமையான சட்டங்கள். பெண்களும் குழந்தைகளும் அரசால் பேணப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றவாளிகள் மிகக் கடுமையாக தண்டிக்கப்படல் வேண்டும். குழந்தைகளுக்கெதிரான குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும். இதை நிர்வகிக்க தனி நீதி அமைப்புகளும், சட்டத்தை அமல்படுத்த தனியான காவல்துறையும் உருவாக்கப்படல் வேண்டும்.
எப்படி பூமியும், சூரியனும் ஒருவித கட்டுப்பாட்டுக்குள் இயங்குகின்றனவோ மனிதனும் அத்தகைய ஒரு கட்டுப்பாட்டில் தான் வாழ வேண்டும். அவ்வாறு வாழாத சமூகங்களின் சீரழிவை எத்தனையோ சம்பவங்களின் மூலம் நாம் காணலாம்.

இப்போது http://tamil.hotlinksin.com/ இணையதளத்தில் தமிழ் செய்திகளை இணைத்து ஏராளமான வாசகர்களைப் பெறலாம்.
அதே போல ஆங்கிலத்தில் செய்திகளை http://www.hotlinksin.com இணையதளத்திலும் இணைத்து ஏராளமான வாசகர்களைப் பெற்றிடுங்கள்.
nobody destroy in the same.
chandrasekaran
manidhan manithanaai vazha vendum.marandhu vidukinranarmanitanai vazha
REMBA THEVIYANA NEWS THANK YOU
MIKA NALLA PATHIVU! 2000 VARUSHAMAAKA NADANTHUVARUM VIBACHAARATHTHAI ORE ADIYAAKA OZHITHU VIDA MUDIYUMAA? ARASIYAL THALAIVARKAL PERIYAVEEDU, CHINNAVEEDU ENTRU KONJAMUM VETKAPPADAAMAL VAITHTHUKKOLLUMBOTHU PAAMARA MAKKALAI THIRUNTHU YENDRU SOLLUVATHU VEDIKAIYAAHATHTHAAN IRUKKUM!!!
நாதன் அரசியல்வாதிகளை வம்புக்கு இழுக்காமல் இருக்கமாட்டீர்கள் போல. நேற்று சன் டிவியில் சோனா கஞ்ச் என்ற இடத்தில் நடக்கும் விபச்சாரத்தைப் பற்றி நிஜம் நிகழ்ச்சியில் காட்டினார்கள். ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இன்பலோகமான அப்பகுதி தொடர்ந்து இன்றைக்கும் விபச்சாரத்தில் கொடி கட்டிப் பறக்கிறதாம். இந்தியா சுதந்திரம் பெற்று இத்தனை வருடமாகியும் எந்த அரசியல் கட்சியாலும் சோனா கஞ்ச் பகுதியில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க முடியவில்லையே. இது தான் இந்தியா.
sssss