பெண்களை உணர்ந்து கொள்வது எப்படி? (18+ மட்டும்)

அக்டோபர் 26, 2009

உலகம் இயங்கக் காரணமே பெண்கள் தான். அவர்கள் இல்லையென்றால் அவனவன் குப்புறப்படுத்து கும்மியடிக்க வேண்டியதுதான். கடல், ஆழம், பெண்கள் என்ற பழமொழிகளை எல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். பெண்களைப் பற்றி உணர்ந்து கொள்வது ஒன்றும் பெரிய சூத்திரம் இல்லை. சற்றே உன்னிப்பாய் கவனித்தால் போதுமானது. கணித்து விடலாம். காமத்திலிருந்து ஆரம்பிக்கலாம். காம விளையாட்டுக்கு சரியான பெண் எப்படி இருப்பாள் என்பதை முதலில் தொடங்கி விடலாம்.

சின்ன உதடு, அகன்ற இடுப்பு, சற்றே உயரம் கொண்டவர்கள் கட்டில் விளையாட்டை வெகு சுவாரசியப்படுத்தி விடுவார்கள். அப்படி யார் இருக்கிறார்கள் என்று தேடிப் பார்த்ததில் சினிமாவில் ஒரு பிகர் கிடைத்தது. ஒருவரை நம்பி விட்டால் போதும் கடவுளே வந்து சொன்னாலும் போடா ஙொய்யா என்று சொல்லி விடுவார்கள். காதலில் கசிந்துருகி புருஷனை கைக்குள் போட்டுக் கொள்வதில் இவ்வகைப் பெண்கள் தில்லாலங்கடி. கட்டிலுக்கு கெட்டிக்காரியானால் அவள் தான் வீட்டிற்கும் தலைவியாவாள். அவள் சிறந்த நிர்வாகியாகவும் இருப்பாள். இவர்களின் புருஷர்கள் வேறு எந்தப் பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள் என்று வெகு நிச்சயமாய் சொல்ல முடியும். இவர்கள் கட்டிலில் அவளது புருஷனுக்கு மேலோகத்துச் சொர்க்கத்தையே காட்டி விடுவார்கள். காதல் விளையாட்டில் இவர்களை மிஞ்ச வேறு எந்தப் பெண்களாலும் முடியாது.

நானும் எத்தனையோ பெண் நண்பர்களைச் சந்தித்து இருக்கிறேன். படங்களில் பல நடிகைகளையும் பார்த்து இருக்கிறேன். அப்படி சந்தித்தவர்களில், பார்த்தவர்களில் ஒருவர் கூட நெஞ்சுக்குள் நீதி சீச்சீ… நெஞ்சுக்குள் தீயைப் பற்ற வைக்கவில்லை. பச்சைக்கிளி முத்துசரம் படத்தில் நடித்த செல்வி ஆண்டிரியா மட்டுமே என் உள்ளத்தை கவர்ந்தவர். காரணம் மேலே நான் சொன்னதுதான். உடனே வேறு ஏதேனும் முடிவுக்கு வர வேண்டாம். எனது கணிப்பு இது. உங்களுக்கு அப்படிப் பட்ட பெண்ணைக் காட்ட வேண்டுமென்பதற்குத் தான் ஆண்டிரியாவின் புகைப்படத்தை உபயோகப்படுத்தி இருக்கிறேன். மற்றபடி ஆண்டிரியாவின் நடிப்பு வெகு அபூர்வம். மிகச் சிறந்த நடிகை அவர். இவரைப் போன்ற நடிகைகளை சினிமாவில் காண்பது அரிது.

பழங்காலத்தில் பாரதி என்ற நடிகை ஒருவரும் இருந்தார். சிவகுமாருடன் ஒரு பாட்டில் தொடாமலே பாட்டுப் பாடி நடிப்பார். கண்களாலே பார்க்கும் ஆண்களை காமவயப்படுத்துவதில் இவருக்கு நிகர் வேறு எவரும் இல்லை. ஆண்டிரியாவை போன்ற தோற்றம் கொண்டவர் அவர். சிரித்தாலே போதும் மனசு மயங்கி விடும்.

andrea-14

மற்றபடி திரிஷா, ஜோதிகா, சிம்ரன், நமீதா போன்றவர்கள் எல்லாம் சர்க்கரை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூதான் சர்க்கரை என்பார்களே அதைப் போன்றவர்கள்.

இந்த சர்க்கரை மேட்டரில் ஒரு குசும்பு கூட உண்டு. கிராமப்புறங்களில் குழந்தைகளின் ஜெனனேந்திரியங்களை சர்க்கரை என்று விளையாட்டாய்ச் சொல்லுவார்கள். எங்கே பாட்டிக்கு கொஞ்சம் சர்க்கரை கொடு என்று பாட்டி கேட்க, பேரன் டவுசருக்குள் கையை விட்டு கொஞ்சம் எடுத்துக் கொடுப்பான். இந்த சமாச்சாரமெல்லாம் உங்களுக்கும் தெரியும் தானே.

மேற்படிச் சமாச்சாரத்தில் தான் உலகப் புகழ் பெற்ற மனோதத்துவ அறிஞர் பிறந்த சிக்மெண்ட் ப்ராய்டு சிக்கலான பாசம் என்பதற்கான காரண காரியங்களை கண்டு பிடித்தார். அது என்ன என்று விளக்குவதெல்லாம் இந்த பதிவுக்கு ஆகாது என்பதால் விட்டு விடலாம்.

பெண்களின் நடை உடை பாவனைகளிலிருந்து அவர்களைப் பற்றிய சில முடிவுகளுக்கு வரலாம் என்று பலரும் சொல்ல கேட்டிருப்போம். அது உண்மைதானா என்று நான் சந்தித்த தோழிகளை முன் வைத்தும் முன்னோர்கள் சொல்லிய சில கருத்துக்களை முன்வைத்தும் இனி வரும் காலங்களில் விளக்குகிறேன்.


ஹார்டுகோர் குடும்பக் கதைகள் – ஒரு கிராமத்துப் பெண்ணின் உண்மைக் கதை

அக்டோபர் 25, 2009

நகர்ப்புறங்களில் வசிக்கும் பெண்மணிகளில் சிலர் காசுக்கு ஆசைப்பட்டு விபச்சாரிகளாய் மாறி விடுவதில் ஒன்றும் ஆச்சர்யம் இருக்காது. ஆனால் கிராமப்புறங்களில், சமூகக் கட்டுப்பாடுகள் அதிகம் கொண்ட கிராமங்களில் கட்டுப் பெட்டித் தனமாக வாழ்ந்து வந்த குடும்பத்துப் பெண்களில் சிலரும் விபச்சாரிகளாய் மாறி விடுகின்றனர். அப்படி மாறிய ஒரு குடும்பப் பெண்ணின் கதை தான் கீழே குஞ்சாமணி சொல்லி இருப்பது. படிக்க வேதனையாய் இருந்தாலும் உண்மை நெஞ்சை சுடுகிறது. அப்பெண்ணின் மீதான இரக்கமும் உருவாகிறது – அனாதி.

ரெண்டு கொழந்தைங்க. ஆணு ஒன்னு. பொண்ணு ஒன்னு. நாலேக்கர் வயக்காடு. கூரை வீடு. வீட்டுக்காரரு வாத்தியாரு. தென்னந்தோப்புன்னு வசதியாத்தான் இருந்தா தேவி. அக்கம்பக்கத்து வீட்டுல எல்லாம் நல்ல பேரு எடுத்து வாக்கப்பட்டு வந்த ஊருல பேருமெடுத்து சொக்கத்தங்கமா இருந்தா. எவன் கண்ணு பட்டுச்சோ தெரியல. விதி அவ வீட்டுக் கூரையில சனிய ஏத்திப்புட்டான். ஏறுன சனி சும்மா இருந்தானா ? அவன் பாட்டுக்கு இப்போ கலைஞருக்கிட்டேயும் காங்கிரசுக்கிட்டேயும் வெளையாடற மாதிரி வெளயாட ஆரம்பிச்சுட்டான்.

அதெப்படின்னா, கலைஞருக்கும் காங்கிரசுக்கு குடுமிபிடிச் சண்டே ஆரம்பிச்சுடுச்சுன்னு எல்லாருக்கும் தெரியும். காங்கிரஸ்ஸால தமிழ் நாட்டுக்கு ஒரே ஒரு நல்லது தான் நடந்துச்சு – அது காமராசு. அதுக்கப்பறம் காங்கிரசு ஆப்பு மேல ஆப்பைத்தான் அடிக்குது. அது தெரியாம தமிழனுவ எல்லாம் நாங்கல்லாம் காங்கிரசுக்காரன்னுவன்னு சொல்லிக்கிட்டு வெள்ளையும் சொல்லையுமா திரியுறானுவ. இன்னிக்கு காவிரியில தண்ணி வாராதுக்கு காரணமே கலைஞருதான்னு எத்தனை பேருக்குத் தெரியும்னு கேக்குறாரு பழ.கருப்பையா. அடுக்கடுக்கா கலைஞரு மேல குத்தம் சொல்லுறாரு. அதுக்கும் காரணம் காங்கிரசுதான்னு வேறு சொல்லுறாரு.

அது என்னான்னு தெரியனுமா அனாதி பிளாக்கில இருக்கற இது தான் சரியான நேரம்ங்கிற பதிவை படிச்சுடுங்க. 2004லுல திமுக காலால இட்ட வேலைய தலையால செஞ்ச காங்கிரசு இன்னிக்கு போனு ஊழல விசாரிக்க சிபிஐய்ய அனுப்பி வச்சுடுச்சு. கலைஞரு ஆளு எவரையும் கண்டுக்கிறதே இல்லை. அதுக்குள்ளே இங்கே அண்ணன் தம்பிக்குள்ளே சிக்கல்லுனு பத்திரிக்கை காரங்க எழுத ஆரம்பிச்சிட்டானுவ. என்ன கன்றாவியோ தெரியலை. ஆட்சிக்காக இலங்கையில தமிழர்களைக் கொன்னு குவிச்ச அயோக்கியப்பயலுக்கு தொணை போன காங்கிரசுக்கு கூலக் கும்பிடு போட்ட கலைஞரு மேல படிந்த ரக்கக்கறைக்கு சனி எப்படி பழி வாங்கப் போறான்னு இனிமேத்தான் தெரியும். கூடிக் குலாவி, கொஞ்சி கிஞ்சி கும்மியடிச்சுக்கிட்டு இருந்த திமுகவுக்கும் காங்கிரசுக்கும் சனி ஆப்பு அடிக்க ஆரம்பிச்சா மாதிரிதான் தேவி வாழ்க்கையிலேயும் சனி புகுந்து விளையாட ஆரம்பிச்சாரு. சரி கதைக்கு வாரேன்.

பொம்பளையளுவளுக்கு சேலைன்னா புருசன் புள்ளயக் கூட கண்டுக்க மாட்டாளுவ. அந்த ஊருக்கு வந்தான் ஒரு சேலை விக்கிற பொறம்போக்கு. அக்கம் பக்கத்துல பொம்பளய சேலகள எடுக்க, கையில காசு நெறய வச்சுருந்த தேவிக்கும் ஆசை வந்துடுச்சு. சேலைய விரிச்சான் பொறம்போக்கு. அவனுக்கிட்டே என்னத்தை பாத்து விழுந்தாளோ தெரியல. விழுந்துட்டா. தேவியோட புருஷன பொம்பளைச்சட்டின்னுதா அந்தக் கிராமத்துல அழைப்பாங்க. அதான் காரணமான்னு தெரியல. ஆனா இருக்க வாய்ப்பும் இருக்கு. அந்தாளைப் பாத்தா பொட்டச்சி நடக்கிறா மாதிரியே நடந்துக்கிட்டும் பேசிக்கிட்டும் திரிவான். சமயப் போற பொண்ணு இருக்குது. பையனோ தோளுக்கும் மேல வளந்துட்டான். இப்பப் போயி இவளுக்கு அந்த ஆசை வரலாமா? ஆனா வர வச்சுட்டான் அந்த சனிப்பய.

அந்த ஊரு இளந்தாரிபபயலுவ சில பேரு புருஷங்காரன் வெளியூருக்கு போன சமயமாப் பாத்து தனியா வீட்டுல இருக்கிற பொம்பளை புள்ளகளை புடுச்சு அமுக்கிப் புடுவானுங்க. அதுக்குப் பயந்துக்கே அம்மா வீட்டுக்கு ஓடீபோயிருவாளுவ. இல்லேன்னா அந்தப் புருஷங்காரன் பொண்டாட்டிக்கு காவலை வச்சுட்டுப் போவான். ஏன்னா ஒரு காலத்துல அவனும் அப்படித் திரிஞ்சவன். குத்தமுள்ள மனசு குறுகுறுக்குமுல்ல. சேலைக்காரனுக்கும் தேவிக்குமிடையே கள்ளக்காதல்லுன்னு கண்டு பிடிச்சிட்டுனுவ சில இளந்தாரிப்பயலுவ. பத்து நிமிஷம் கெடச்சாப் போதும் புகுந்துறுவானுங்க. அவளுக்கும் வேற வழியில்லாமப் போக பயலுவலுக்கும் சேத்துக் கால விரிக்க ஆரம்பிச்சுட்டா.

இவ கதை ஊருக்குள்ள லேசுபாசா தெரிய ஆரம்பிச்சுடுச்சு. ஒரு நாளு இருந்த காசு, நகை, பணத்தையெல்லாம் எடுத்துக்கிட்டு சேலக்காரனோட கம்பி நீட்டிட்டா. புள்ளையலும், புருஷனும் அனாதையா நிக்கிறாங்க. ஒரு வாரம் போச்சு, இவளக்காணாம்னு போலீசுல கம்ளையிண்டு கொடுத்தான் புருஷன். ஒரு மாசம் கழிச்சு போலீசுக்காரனுவ இவனை டேசனுக்கு வான்னு அழைக்க அங்க போயி பாத்தா தேவி உக்காந்திருக்கிறா.

இவன் ஆம்பளயே இல்ல, அதனால தான் இவனோட போனேன்னு சொன்னா தேவி. பஞ்சாயத்துப் பேசி அவ இருந்த வீட்டையும் இடத்தையும் இவளுக்கிட்டே கொடுத்துட்டு புள்ளயல கூட்டிக்கிட்டு வேற பக்கமா கொட்டகை போட்டுக்கிட்டு போயிட்டான் புருஷங்காரன்.

சந்து கிடச்சா சிந்து பாடுன இளந்தாரிப்பயலுகளுக்கு இப்போ ரோடே கிடைச்சுப் போச்சு. அவ வீட்டுப் பக்கமா இருக்கிற நாயிகள்ளாம் ராத்திரி பத்து மணிக்கு மேல பேயப் பாத்தா மாதிரி கொலக்க ஆரம்பிச்சுடுச்சு. ஊரு ஆம்பளப் பயலுக எல்லாம் அடிக்கடி அவ வீட்டுப் பக்கமாவே நடந்தானுவ. படுத்தானுகளெ தவிர அவளுக்கு எவனும் காசு ஒன்னும் கொடுக்கல. பேரும் கெட்டுப் போச்சு. வீட்டை விட்டு வெளியே வராமயே கிடந்தா. அம்மா வீட்டுக்கும் போக முடியல.

யாரோ எவனோ சொன்னான்னு வீட்டைப் பூட்டிப் போட்டுட்டு திருப்பூருக்கு போனா தேவி. போன இடத்துல எல்லாஞ்சேந்து அவளை பதம் பாத்தானுவ. உடம்பு புண்ணானதுதான் மிச்சம். திரும்ப ஊருக்கு வந்து மவளை பாக்கனும், மகனைப் பாக்கனும்னு அங்கனக்கு அங்கன பிராக்கு பிடிச்சா மாதிரி திரியுறா தேவி !


இது தான் சரியான நேரம் !

அக்டோபர் 23, 2009

உச்ச நீதிமன்றம் கேரளா அரசை நோக்கி வீசிய கேள்விக்கணைகளையும், மேலும் அதே உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை கையில் வைத்துக் கொண்டும் தமிழக அரசுப் பணியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் முல்லைப் பெரியார் அணையின் நீர் மட்டத்தை உயர்த்தும் சூழல் தற்போது கனிந்து இருக்கிறது.

தமிழக அரசு காலம் கடத்தாமல் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினை செயல்படுத்தி விட்டால் தான் கேரள அரசின் முழுப் பூசணிக்காய் பிரச்சாரத்தை பொய்யாக்கலாம். முல்லைப் பெரியார் அணை பலமாகத்தான் இருக்கிறது என்று உலகோருக்கு காட்டக்கூடிய அருமையான சூழல் தற்போது நிலவுகிறது. தமிழக அரசு விழித்துக் கொள்ள வேண்டும்.

கர்நாடகத்தில் ஹேமாவதி அணை கட்டப்பட்டபோது வாளாமல் இருந்ததால் இன்று தமிழர்கள் காவிரியை காண தவம் கிடக்கிறார்கள்.

இவ்விடத்தில் ஒரு இடைச்செருகல்.

கர்நாடக முதலமைச்சர் 1971ல், ‘ஹேமாவதி அணை கட்டப்போகிறேன்’ என்று வெளிப்படையாகச் சொன்ன போது, ‘ஹேமாவதியைக் கட்டுவதற்கு என்னை ஏன் கேட்கிறாய் ?’ என்று இன்றைய முதல்வர் கேட்டதன் விளைவு, கர்நாடக முதல்வர் ஒன்றுக்கு இரண்டாக ஹேமாவதியையும் கட்டினார். கபினியையும் கட்டினார். காவிரியில் நீர் வரத்து சுருங்கியது

அணையைக் கட்டிய பிறகு என்ன செய்ய முடியும் ? கட்டியது தவறு என்று கருணானிதி வழக்கு தொடர்ந்தார். அதே வேகத்தில் வழக்கு தொடர்ந்திருந்தால், சீதையைச் சிறை மீட்டது போல காவிரியையும் சிறை மீட்டிருக்கலாம். ஆனால் அந்த வழக்கையும் டெல்லி சக்கரவர்த்தினி இந்திரா சொல்லி விட்டார் என்று திரும்ப பெற்று விட்டார். டெல்லிக்கு பாத பூஜை செய்வது கருணா நிதிக்கு முக்கியமாக இருந்ததற்கு காரணம், நினைத்தவுடன் அதி நவீன காலப் பெண்கள் சர்வ சாதாரணமாய் கருவைக் கலைப்பது போல, பழைய காலங்களில் மா நில ஆட்சியைக் கலைத்து விடுவது, டெல்லியின் இயல்பாக இருந்தது. சிற்றரசர்களுக்கு அச்சம் இருப்பது நியாயம் தானே ? …..

- துக்ளக் இதழில் ஐயகோ தமிழ் நாடே என்ற தலைப்பில் திரு பழ கருப்பையாவின் கருத்து மேற்கண்டது.

காவிரியைப் போன்று முல்லைப் பெரியாரும் ஆகிவிடாமல் தடுக்க, அணையின் நீர் மட்டத்தை உயர்த்தி தமிழக மக்கள் பயன்பெற நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். செய்யுமா தமிழக அரசு ?


ஹார்ட்கோர் குடும்பக் கதைகள் – 1

அக்டோபர் 23, 2009

எனக்கு தெரிஞ்ச கிராமம் ஒன்னு இருக்கும். அங்கே இரண்டு ஏக்கர் சொத்து, பத்தாம் வகுப்பு படிப்பு, சொந்தமாய் ஓடு வேய்ந்த வீடு இருந்தால் இரண்டு லட்ச ரூபாய் பணம், பைக்கு, பாத்திரம், இருபது முப்பது பவுன் நகை வரதட்சினையோடு பொண்ணு குடுப்பானுவ பொண்ணைப் பெத்த ஏமாந்த சோனகிரிங்க. கல்யாணத்தை அந்த மாப்பிளையின் பங்காளிக ஏற்பாடு பன்னுவானுக. சிரிக்கச் சிரிக்கப் பொண்ணு வீட்டுல பேசி இருக்கற சொத்தை மொத்தமா கொள்ளை அடிச்சுட்டு வந்துறுவானுங்க. இதுல இவங்களுக்கு என்ன லாபம்ன்னா, சோறும் கறிக்கொழம்பும் கிடைக்கும். அவ்வளவுதான். ஆறுமாதம் வயக்காட்டுல வேலை பாப்பானுவ. அடுத்த ஆறுமாசம் எவ தாலிய அறுக்கலாம்னு கூட்டம் போட்டுப் பேசி காரியத்தை முடிச்சிருவானுவ.

ஊர்ப் பெரிய மனுசனுவ பேசுற பேச்சுக்கு ஒரே ஒரு உதாரணத்தைச் சொல்றேன் கேட்டுக்கங்க. எவளாவது ஏப்ப சாப்ப பொம்பளை வந்தா அவளை குஜாலா பேசியே மடக்க நினைப்பானுவ. ”வாம்மா, வா வா என்னா இந்தப் பக்கமா காத்தடிக்குது. உக்காரு உக்காருன்னுவாய்ங்க. மெதுவா உக்காரு. வெடிச்சுக் கிடிச்சுறப்போவுதுன்னு” பேச்சுலே லைட்டா கொக்கிய மாட்டுவானுவ. அவனுக எதை வெடிச்சுறப்போவுதுன்னு சொல்றாங்கன்னு உங்களுக்குப் புரியுதா ???? சரி அதவுடுங்க… ஹி..ஹி….

இரண்டு மாசம் பைக்கில் மாமனார் வீடு, கோயில், குளமென்று புருஷனும் பொண்டாட்டியும் கூத்தடிப்பாங்க. சாங்காலம் ஆறு மணிக்கே வீட்டுக்குள் ஒதுங்கிடும். மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள். முடிஞ்சது கல்யாண ஜோர்.

அந்தக் கருங்காலிப்பய என்ன பன்னுவான் தெரியுமா ? பொண்டாட்டிக்கிட்டே இருந்து வாங்கிய வரதட்சினையை வட்டிக்கு விடுவான். வசூல்ங்கிற பேருல கண்ட நேரத்துக்குப் போயி, கண்ட நேரத்துக்கு வருவான். பொண்டாட்டிக்கும் புருஷனுக்கும் லேசா ஒரு மனக்கசப்பு ஆரம்பிக்கும். மருமக மேல மாமியார்காரி மெதுவா குத்தம் சொல்ல ஆரம்பிப்பா. வட்டி வசூல் பண்ணப் போனவனுக்கு அங்கே எவளாவது ஒருத்தி வட்டிக் கொடுக்க முடியாம திணறுவா. அவகிட்டே தினமும் வட்டி வசூல் செய்வாரு இந்த மாப்பிள்ளே. வட்டியும் கழியும் இவம்பொண்டாட்டி கொண்டுக்கிட்டு வந்த பணமும் போகும்.

மேற்கண்ட சம்பவங்கள் அந்த ஊரில் மிகவும் பிரபலம். அப்படித்தான் ஒரு கருங்காலி நாயி கல்யாணம் பண்ணுச்சு. இவன் அப்பன் இருக்கானே ஊருக்கே அடங்காத பய. கடைசிக் காலத்துல கையும் காலும் இழுத்துக்கிட்டு பீயை படுக்கையிலே பேண்டுகிட்டு செத்தான். வயக்காட்டுல பக்கத்து வயலு வரப்பை சன்னமா செதுக்கிடுவான். வரப்புகு அடியில மம்பெட்டிய கொடுத்து வரப்பையே பேத்து கொஞ்சம் கொஞ்சமா வரப்பையே நகர்த்தி வச்சுருவான். உழுவப் போனான்னா சண்டையும் சச்சரவுமாக் கிடக்கும். அப்படி ஒரு கொடுமைக்கார கொலகாரன். அவனுக்கு பெறந்தவன் மட்டும் என்ன புத்தராவ இருப்பான். அவனும் அப்படித்தான்.

கல்யாணம் கட்டி வட்டித் தொழிலுக்கு போன பய பக்கத்து ஊருல ஒரு வேற்று ஜாதிக்காரப் பொண்ணை வளச்சுப்புட்டான். பொண்டாட்டியைக் கட்டி வச்சுட்டு காசு சம்பாதிக்க வெளினாடு போயிட்டான் அந்த பொண்ணு புருஷன். இவன் வலையில விழுந்தவ கஷ்டப்பட்டு உழச்சுப் புருஷன் அனுப்பிய காசு நகையெல்லாம் இவனுகிட்டே கொடுத்துப்புட்டாள். இந்தக் கருங்காலியும் கொடுக்கிறதைக் கொடுத்துட்டு வசமா வசூலைப் போட்டுட்டான். அந்தப் பொண்ணு புருஷன் வெளி நாட்டுல இருந்து வந்து பாத்தா மொத்தமும் காலி. பய சும்மா இருப்பானா ? போடி ஙொப்பன் வீட்டுக்குன்னு விரட்டி விட்டுட்டான்.

ஊரு முழுக்க தெரிஞ்சு, ஊரே சிரியா சிரிச்சு அந்த பொண்ணு மானமும் போச்சு, வாழ்க்கையும் போச்சு. பஞ்சாயத்துல பேசி அந்தப் பொண்ணுக்கிட்டே வாங்கினதையெல்லாம் கொடுக்கனும்னு அந்தக் கருங்காலிப்பயகிட்டே எழுதி வாங்கிக்கிட்டு விட்டுட்டானுவ.

காலிப்பய பொண்டாட்டி சும்மா இருப்பாளா ? என்ன ஏதுன்னு அவன் இவனுக்கிட்டே கேட்க இவன் என்னா பன்னுன்னானா, பொண்டாட்டிய ரத்து வெட்டி விடுன்னு பஞ்சாயத்துல சொல்லி ஒரே ரகளை. இவம்பொண்டாட்டியோட அப்பங்காரன் பாக்கறவங்ககிட்டே எல்லாம் சொல்லிச் சொல்லி அழுவுறான். அந்தக் கருங்காலி நாயி ரூமு எடுத்துக்குட்டு ஹோட்டல்ல சாப்பிட்டுக்கிட்டு திரியுது…

இது தான் அந்தக் கிராமத்துல வசிக்கிற ஒரு இளந்தாரியோட வாழ்க்கை. இது இப்படி இருக்க நாளைக்கோ இல்லை இன்னொரு நாளைக்கோ பொம்பளை கருங்காலியப் பத்திச் சொல்றேன் என்னா ?

மேற்படி கதையும், அந்தக் கருங்காலியும் இப்பவும் அந்தக் கிராமத்துலதான் இருக்காங்க. இது ஒரு உண்மைக் கதை.
கதையும் கருத்தும் – குஞ்சாமணி


போதை!

அக்டோபர் 16, 2009

கீழே இருக்கும் ஒரு வாசகரின் பின்னூட்டத்தைப் படித்துப் பாருங்கள். சும்மா ஃபுல் பாட்டில் பக்கார்டியை உள்ளே இறக்கியது போல இருக்கும்.

தமிழனின் பின்னூட்டம் ஆங்கிலத்தில். நன்றி தமிழன்.

tamilian சொல்வதென்னவென்றால்:
3:49 மு.பகல் இல் 2009/10/14 | பதில் திருத்து

Dear Anadhi,
First excuse my English, I am not able to type in Tamil.
I discovered your blog last month and I should say, I’m hooked instantly. It was refreshing to find a similar view point like mine in your blog. I can feel a familiarity and closeness in most of your posts. I almost agree with every viewpoint you bring out in your posts. I don’t know how many people can really see and think about the world like you describe and analyze each and every issue that is happening in Tamilnadu. In cinema, politics or any other matter the style you discuss is completely different and genuinely true. Many times I felt happy after seeing your writeup because your words gave me assurance that there is someone also like me to see and feel about tamilnadu and tamils. I read all your posts but never left comment but this time I could not avoid. And about comments, please don’t feel bad for anyone not writing comments. I know you are doing a good job and I wish you to continue this. I want to thank you from my heart and wish you all the best in life. Thanks again for a great blog. You are doing a wonderful job.
Tamilian.


தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு ஒரு எதிர்வினை

அக்டோபர் 16, 2009

கட்டுரையைத் தொடரும் முன்பு பதிவர் என்வழியின் வீடியோ தொகுப்பினை முழுவதும் பார்த்து விட்டு படிக்க வேண்டுகிறேன். நன்றி என்வழி பிளாக்.

வீடியோவைப் பார்க்கவும் கேட்கவும் இவ்விடத்தில் கிளிக் செய்யவும்

குறிப்பு : இந்தக் கட்டுரை வெகு ஹாட்டாக இருக்கிறது. இதை ஒரு சிறுகதை என்று எடுத்துக் கொள்ளவும். கொந்தளித்துப் பேசிய உதவி இயக்குனர் ஒருவரின் கருத்தை அப்படியே மேலே பதிவு செய்கிறேன். மேற்படி கருத்துகள் அனைத்தும் உண்மையா அல்லது பொய்யா என்பது எனக்குத் தெரியாது. மேலும் இக்கட்டுரை யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால், பதிலுரை மூலம் தெரிவித்தால் உடனடியாக நீக்கி விடுகிறேன்.

வணக்கம் ஹீரோக்களே !

ஒரு நாளிதழின் செய்திக்கு எதிரான உங்களின் கோபாவேச பேச்சையும் கேட்டேன். வெகு நன்றாய் இருந்தது. நடிகைகளின் கண்ணீரைத் துடைக்கும் முயற்சிக்காக, உங்கள் பேச்சு நடிகைகளுக்கு மிக்க சந்தோஷம் தரும். அதனால் உங்களுக்குப் பயனும் கிடைக்கும். ஆனால் உங்களின் பேச்சைக் கேட்ட எங்களுக்குத்தான் கோபம் வந்தது. ஏன் என்று சொல்கிறேன்.

namitha-sathyaraj

பத்திரிக்கைக்காரர்களை ஈனப்பயல்கள் என்று சொன்னீர்கள். நடிகைகள் உட்காரும் நாற்காலியின் அடியில் புகைப்படமெடுக்காதீர்கள் என்றெல்லாம் கருத்துகளை அவிழ்த்தீர்கள். ஆம் அவிழ்த்தீர்கள். உங்களுக்கு வேலையே நடிகைகளின் டிரஸ்களை அவிழ்ப்பது தானே? செய்வது எல்லாம் நீங்கள். ஆனால் குற்றம் சொல்வது பேப்பர்காரனை. இது என்ன அய்யா நியாயம் ?

பிள்ளைக்கறி விற்பனைக்கு எனக் கூவுவது நீங்கள். பிள்ளைக்கறியை விற்கிறார்கள் என்று படம் போட்டு காட்டுகிறது நாளிதழ்கள். எப்படி இருக்குமென்று டேஸ்ட் பார்க்கலாமென்று உங்கள் ரசிகர்கள் (பாவம்) வாங்குகிறார்கள். உங்களுக்கு தேவையான பணம் பணப்பெட்டிக்குள் குவிந்து விடுகிறது.

veedokkade0063
நடிகைகளின் மீதான சமூகத்தின் பார்வையை மாற்றச் செய்வதே உங்களைப் போன்ற ஹீரோக்கள் தானே. உங்களின் படங்களில் குத்துப் பாட்டு, காம ரசம் சொட்டும் வார்த்தைகள் இல்லாமல் உங்களால் படமெடுக்க முடியுமா? மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்! உங்கள் முகத்தைப் பார்க்கவா ரசிகன் தியேட்டருக்கு வருகிறான்? இல்லவே இல்லை. அவனுக்குத் தேவை தொடை, முலை, கிளிவேஜ், சூடான முத்தம், குலுக்கல், மினுக்கல், கற்பழிப்புக் காட்சிகள். இவையெல்லாம் ரசிகனுக்கு கிளர்ச்சியை உண்டு பன்னும். அதற்காகத்தான் தியேட்டருக்கு வருகிறான். ரசிகனின் உள்ளார்ந்த ஆர்வத்தை நன்கு தெரிந்து வைத்துக் கொண்டுதானே குத்தாட்டம், கிளர்ச்சியூட்டம் அசைவுகள், வசனங்களைப் படத்தில் வைக்கின்றீர்கள்? இல்லையென்று உங்களால் மறுக்க முடியுமா? பெண்களை விற்பனை செய்வது நீங்கள். பெண்கள் செய்யும் விபச்சாரத்தைக் கூட ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம். அது இரு வேளை சோற்றுக்கு என்று கூட சொல்லலாம். ஆனால் நீங்கள் செய்யும் வேலைக்கு என்ன பெயர்?

ஒரு ஹீரோ அண்ணன் முன்னாலேயே தங்கையை கிஸ் பண்ணுகிற படத்தில் நடித்தவர். உம்மா, உம்மம்மா என்று பதினெட்டு வயதுக் குமரியுடன் குத்தாட்டம் போட்ட ஹீரோ இன்ஸெஸ்ட் செக்ஸ் படத்தை அல்லவா தமிழர்களுக்கு தந்தார். அது என்ன இன்ஸெஸ்ட் படமென்கிறீர்களா? வயதான கிழவர்கள் இளம் பெண்களைப் புணருவது. வயதான அப்பாக்கள் தன் இளம் மகள்களைப் புணருவது என்று அர்த்தம். செக்ஸ் படங்களில் அது இன்ன படம் தான் என்று ஆரம்பத்தில் சொல்லி விடுவார்கள். ஆனால் நீங்கள் கமர்சியல் என்ற பெயரில் இன்ஸெஸ்ட், பப்ளிசிட்டி, பப்ளிக், டார்ச்சர் மற்றும் ரேப் போன்ற காட்சிகளையெல்லாம் அல்லவா காட்டுகிறீர்கள். போதாத குறைக்கு செக்ஸ் உரையாடல் வேறு.

ஹீரோக்களின் கூடவே வந்து ஹீரோ ஹீரோயினை ரூட்டுப்போட உதவி செய்யும் சில துணை நடிகர்கள் படத்தில் என்ன ஆன்மீக வேலையினையா செய்கிறார்கள். ஒருத்தனுக்கு ஒருத்தியை செட்டப் செய்ய உதவுபவரை சமூகத்தில் மாமாப்பயல் என்றல்லவா அழைக்கின்றார்கள். நடிப்புதானே என்ற பட்சத்தில் உங்கள் அம்மாவையோ, அக்காவையோ நடிக்க வைத்து ஹீரோக்கள் லவ்வடிக்க உதவலாமே? அதையேன் நீங்கள் செய்யவில்லை?

tamil-movie-banner

ஷகீலா என்றாலே செக்ஸ்படம் நினைவுக்கு வந்து விடும். ஆனால் உங்களின் படங்கள் அதை விட ஹார்ட்கோராக அல்லவா இருக்கிறது. வெளி நாட்டில் ரகசிய சில செக்ஸ் நடவடிக்கைகள் உண்டு என்று கேள்விப்பட்டேன். அதற்குப் பெயர் ஸ்னஃப் மூவி என்பார்கள். அதாவது அந்த செக்ஸ் படத்தில் நடிக்கும் நடிகையை உண்மையிலேயே செக்ஸுவல் டார்ச்சர் செய்து, கொஞ்சம் கொஞ்சமாய்க் கொல்வார்கள். அதை விடவும் மோசமான படத்தை அல்லவா தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் எடுக்கிறார்கள்.

பத்து வருடத்திற்கு முன்பு நடித்த நடிகைகள் இன்று ஹீரோயினாகவா நடிக்கின்றீர்கள்? அப்படி நீங்கள் நடிக்கத்தான் விட்டு விடுவீர்களா? இல்லையே. ஐம்பது வருடத்திற்கு முன்பு நடிக்க வந்த ஹீரோக்களுக்கு இன்றைக்கு இளம் வாளிப்பான நடிகைகள் அல்லவா கூட நடிக்கத் தேவைப்படுகிறார்கள். நடிகையின் உடம்பை வைத்து அவர்களின் வயதை வைத்து பிசினஸ் செய்பவர்கள் நீங்கள். பத்திரிக்கைக்காரன் அல்ல. அவன் நீங்கள் நடிக்கும் படத்தில் வரும் காட்சிகளை படம் போட்டுக் காட்டுகிறான். பத்திரிக்கை இல்லையென்றால் நீங்கள் எல்லாம் குப்பைக் கூடைக்குச் சமானம். இல்லையென்று உங்களால் மறுக்க முடியுமா ? கிசு கிசுவில் தான் உங்களைப் பற்றிய பிம்பங்கள் மக்களின் மனதில் பதிய வைக்கப்படுகிறது. அதற்கு பெரும் உதவியாய் இருப்பவை பத்திரிக்கைகள். மைக் கிடைத்து விட்டது என்பதற்காக குதிப்பது எல்லாம் படத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

பெண்களை தன் படங்களில் வியாபார உத்திக்காய், ரசிகனை கவர்ந்திழுக்க கவர்ச்சியாய் காட்டுவீர்கள், கற்பழிப்பீர்கள், குத்தாட்டம் போட வைப்பீர்கள் இன்னும் என்னென்ன விதங்களில் நடிகைகளின் அங்கங்களைக் காட்ட வேண்டுமோ அப்படியெல்லாம் காட்டுவீர்கள். பொது மேடையில் பேசும்போது பெண்களுக்கு ஆதரவாய் பேசுவீர்கள். கேட்பதற்கு நாங்கள் என்ன கேனயர்களா ?

உங்களில் பலபேர் தனது அப்பாவாலோ அல்லது அம்மாவாலோ திரைக்கு வந்திருக்கின்றீர்கள். திறமைகள் ஏதுமின்றி இன்றி திரையுலகில் மகா கேவலமாய் வந்தவர்கள் நீங்கள். எத்தனையோ இளம் உள்ளங்களின் கனவுகளை, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளைத் தட்டிப் பறித்துக் கொண்டு அந்த உள்ளங்களை மண்ணுக்குள் புதைத்தவர்கள் நீங்கள். எத்தனையோ கதா நாயகிகளின் சதையினால் முன்னுக்கு வந்தவர்களில் உங்களில் பல பேர் இருக்கின்றீர்கள். ஆகையால் திரைத் துறையில் பெண்களை அவமானப்படுத்துவதும், அவர்களை கருவேப்பிலை போன்று பயன்படுத்தி தூக்கி எறிவதும், அழகுப் பெண்களை சிண்டிகேட் வைத்துக் கொண்டு கசக்கி எறிந்தும் வருகிறீர்கள்.

நடிகைகளை வைத்துக் கோடிக்கணக்கில் பிசினஸ் செய்வது நீங்கள். அதன் அத்தனை பிரதிபலனையும் காசு போட்டு படமெடுக்கும் தயாரிப்பாளரை விட, உங்களுக்காக கதை எழுதி இயக்கிய இயக்குனர்களை விட, நீங்கள் தான் ஒரு படத்தின் வெற்றியை அனுபவிக்கின்றீர்கள். உங்களின் படம் தோல்வியுற்றால் பலிகடா இயக்குனர். உங்களுக்கு வேறு இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் கிடைத்து விடுவார்கள்.

மழையில் நனைந்த ஆட்டுக்கு ஓநாய் இருக்க இடம் கொடுத்த கதைதான் உங்கள் கதை. ஆடு என்பது நடிகைகள் என்பதை உங்களுக்கு சொல்ல வேண்டுமா என்ன? ஆட்டு சதையை மனிதர்கள் தின்கிறார்கள். நடிகையின் சதையை நீங்கள் தின்கிறீர்கள். தேவையின்றி மற்றவர்களை குற்றம் சொல்லாதீர்கள். போதும் உங்களின் நடிப்பு. இனிமேலும் ஏமாற நாங்கள் என்ன கோமாளிகளா?

மேற்படி வேலைகளை செய்யும் உங்களை எப்படி அழைப்பது ? உங்களின் தொழில் எப்படிப்பட்டது என்பதை நீங்களே அவதானித்துக் கொள்ளுங்கள்.

நன்றி : உதவி இயக்குனர்.


மனைவி சினிமாவில் கணவனோ கண்ணீரில் !

அக்டோபர் 13, 2009

நண்பர் அபிஷேக் பெரிய பிசினஸ் மேன். சென்னையில் கடற்கரையோரம் மிகப் பெரிய பங்களாவாசி. பங்களாவின் மதிப்பு மட்டும் பல கோடிகள் இருக்கும். மனைவிக்கு கடைக்குச் சென்று வர ஹோண்டா சிட்டி. ஒரே ஒரு பெண் குழந்தை, கொடைக்கானலில் படிக்கிறது. அபிஷேக் தான் ஒரு முற்போக்குவாதி என்று பிறரிடம் காட்டிக் கொள்வதில் ஆர்வமுடையவர். முற்போக்குச் சிந்தனைகள் தான் மனித வாழ்க்கைக்கு வசந்தத்தைத் தருமென்று சொல்லுவார். பேச மட்டும் செய்யாமல் தன் வீட்டிலேயும் அதன்படி நடக்க ஆரம்பித்தார். நான் பலதடவை அவரிடம் தவறான பாதையில் செல்கிறீர்கள் என்று சுட்டிக்காட்டி இருக்கிறேன். ஆனால் அவர் என் பேச்சைக் கண்டுகொள்வதே இல்லை.

பேச்சுக்கு வேண்டுமானால் முற்போக்குவாதம் ஒத்து வரும். குடும்ப வாழ்வில் இருப்போருக்கு அதுவும் குழப்பமான கலாச்சாரச் சூழல் இருக்கும் தமிழகத்தில் ஒத்து வராது என்பதுதான் உண்மை. முற்போக்கு வாதம் பேசுபவர்கள் தங்கள் வீட்டில் பிற்போக்குவாதிகளாய் இருப்பார்கள். வயிற்றுப் பிழைப்புக்கும், மற்றவர் கவனத்தை தன்மீது ஈர்க்கவும் தான் மேற்படி வாதங்கள் ஒத்துவரும். ஒரு உதாரணம் சொல்கிறேன்.

நாத்திகம் பேசிய கட்சிகளின் இன்றைய முகம் ஆத்திகம். கடவுள் மறுப்புக் கொள்கை மற்றும் இதரக் கொள்கைகளை அக்கட்சிகள் மறந்து விட்டதா என்று யோசித்தால் இல்லையென்றே சொல்ல வேண்டும். அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது என்று.

கட்சிக்கு கொள்கை வேண்டும். கொள்கை மக்களின் பிரச்சினையை அவர்கள் முன் வைக்க வேண்டும். அப்பிரச்சினையைப் பற்றிப் பேசினால்தான் தொண்டன் கட்சியில் சேருவான். கட்சி வளர அப்பேச்சுகளும், கொள்கைகளும் தேவைப்படும். கட்சி வளர்ந்து விட்டால் இனிமேல் கொள்கைக்கு என்ன தேவை இருக்கிறது?

மக்களின் கவனத்தை ஈர்க்க மட்டுமே கொள்கைகள் தேவைப்படும். ஆனால் அவை மக்களின் பிரச்சினையை தீர்க்காது. கட்சிகளின் தேவை தமிழகத்தை ஆள்வது. அது நிறைவேறி விட்டது. இனிமேல் கொள்கையும் தேவையில்லை. தொண்டனும் தேவையில்லை. தொண்டனுக்குத்தான் கட்சி தேவை. ஆரம்பத்தில் கட்சியும், கொள்கையும் தொண்டனைத் தேடியது. இன்றோ தொண்டன் கட்சியைத் தேடுகிறான். கட்சிகள் எல்லாம் லிமிட்டட் கம்பெனிகள் ஆகிவிட்டது. அவர்களுக்கு என்று தொண்டர்கள், ஓட்டுக்கள் என்று படு பக்காவாய் செட்டிலாகிவிட்டார்கள். அவர்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் அவர்களின் வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ள ஏதேனும் சில காசு வாங்கும் கட்சிகளின் ஓட்டுக்கள். அதைத் தான் மற்ற கூட்டணிக் கட்சிகள் கூட்டணி தர்மத்தின் படி கட்சி மாறி மாறிச் செய்து வருகின்றன. காசு வாங்கும் கட்சிகளின் தலைவர்களுக்குத் தெரியும்? எங்கு சென்றால் காசு பார்க்கலாம் என்று. கட்சியாவது, தொண்டனாவது, கொள்கையாவது, கோட்பாடாவது ? அதெல்லாம் மைக்கின் முன்னால் நிற்கும் போது தான் கட்சியின் தலைவருக்கு நினைவுக்கு வரும்.

காலத்திற்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொண்ட கட்சிகள் இன்றைக்கு பத்திரிக்கை மீடியா, சினிமா, டிவி, என்று என்னென்னவோ துறைகளில் எல்லாம் கொடிகட்டிப் பறக்கின்றனர். ஆசியாவிலேயே பெரிய பணக்காரர் என்ற பெருமையும் சில கட்சியினர் பெற்று இருக்கிறார்கள். வயித்தெரிச்சல் பார்ட்டிகள் கட்சிகள் கொள்ளை அடிக்கிறது என்று கூப்பாடு போடுவார்கள். நான் அவ்வாறு பார்க்கவில்லை. ஒரு கட்சியை லிமிட்டட் கம்பெனியாக மாற்றத் திறமை வேண்டும். அந்தத் திறமையைக் கொண்டவர்கள் கட்சியின் தலைவர்கள் என்பதில் யாருக்கேனும் மாற்றுக் கருத்து இருக்கிறதா ?

கொள்கை என்பது வேறு, வாழ்க்கை என்பது வேறு. அதி புத்திசாலி கொள்கையை, வாதத்தை தன்னை வளர்க்கப் பயன்படுத்திக் கொள்வான். உதாரணம் இன்றைய அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும். முட்டாள் தன் வாழ்விலே அவற்றைப் பயன்படுத்தி வீணாய்ப் போவான். அப்படி மாட்டிக் கொண்டவர் தான் அபிஷேக்.

அபிஷேக்கின் சமாச்சாரத்திற்கு வருகிறேன்.

”அனாதி வீட்டில யாரும் இல்லை, தயவு செய்து இன்றைக்கு இரவு என்னுடன் டின்னர் சாப்பிட வந்து விடு, மனசு விட்டுப் பேசனும்” என்று அழாத குறையாக அபிஷேக்கிடமருந்து போன் வந்தது.

நீச்சல் குளத்தின் அருகில் இருவரும் அமர்ந்திருந்தோம். அழுதார். அவரையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன்.

“அன்றைக்கே சொன்னாய் அனாதி. நான் தான் முட்டாள்தனம் செய்து விட்டேன்” என்று புலம்பினார்.

விஷயத்தைச் சுருக்கமாய்ச் சொல்லிவிடுகிறேன்.

அவரது மனைவி இன்றைக்கு சினிமா, டிவியில் நடிக்கிறார். வீட்டில் தனியாக இருக்க வேண்டாமென்று சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவர் இன்றைக்கு அதிலேயே மூழ்கி விட்டாராம். அடிக்கடி வெளி நாடுகளுக்குச் சென்று விடுகிறாராம். போகும் போது இங்கே போகிறேன் என்று மட்டும் தான் சொல்லுவாராம். குழந்தையைப் பார்ப்பதும் கிடையாதாம். வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் வந்தால் அடித்த நொடியே அலறியடித்துக் கொண்டு ஓடி விடுவார்களாம். மனைவி தடம் மாறிச் சென்று கொண்டிருக்கிறாள் என்று அழ ஆரம்பித்தார்.

தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாய் இன்று தண்ணீரில் மிதக்கிறார் அபிஷேக். மனைவியோ யாரோ ஒரு நடிகனுக்கு மனைவியாய், யாரோ ஒரு குழந்தைக்கு தாயாய் நடித்துக் கொண்டிருக்கிறார். தனது கணவனையும் விட்டு விட்டார். குழந்தையையும் விட்டு விட்டார்.

இதற்குக் காரணமென்னவென்று நினைக்கின்றீர்கள் ? நீங்களே முடிவு கட்டிக் கொள்ளுங்கள் .


ரகசியங்கள் ரகசியமாய் – ரயிலில் கும்மாளம் !

அக்டோபர் 11, 2009

இயக்குனர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்த போது அந்த நடிகையைப் பற்றிய பேச்சு வந்தது.

” செட்டிலாயிட்டா, குழந்தை வேறு ” என்றேன்.

”அடப்போங்கன்னே, அது ஆடிய ஆட்டமெல்லாம் இண்டஸ்ட்ரி முழுக்க தெரியுமே “

” புரியலியே “

” பெரிய தயாரிப்பாளரு படத்துல அது நடிச்சுதுன்னே. திடீருன்னு தயாரிப்பாளருக்கு பண நெருக்கடி. தன் நண்பரான அரசியல் கட்சித் தலைகிட்டே ஒரு ரூபாய் வேணும்னு கேட்டாரு. அதுக்கு அந்த தலைவரு காம்பிளிமெண்டா அந்த நடிகையைக் கேட்டாருன்னே. ராத்திரியோட ராத்திரியா தயாரிப்பாளரு அந்த அம்மாவைக் அழைச்சுக்கிட்டு ஸ்டேஷன் போயி ஏத்தி விட்டாருன்னே. கூடவே ஒரு காரும் போச்சுதா, ரயில்லேயே மேட்டரை முடிச்சவரு இரண்டாவது டேசன் தாண்டி இறக்கி விட்டுட்டாருன்னே.. காருல பிக்கப் பன்னிட்டு வந்துட்டாங்க. கூடவே பணமும் வந்துடுச்சுன்னே ! “

“அடப்பாவிகளா ரயில்லே மேட்டரா ? ”

”ஆமான்னே, பெரும்பாலும் அரசியல்வாதிகளின் மேற்படி சமாச்சாரம் ரயிலிலதான் நடக்கும். அடிப்பொடிகள் எல்லா மேட்டரையும் முன்னேயே பன்னி வச்சுருவாங்க. அப்படித்தானே ஒரு தடவை சென்னையிலேருந்து கிளம்புன ரயிலுல நானும் ஏறினேனா என் கூட பக்கத்து கம்பார்ட்மெண்டுல அட்டகாசமா பிகருன்னு ஒன்னும் ஏறுச்சு. அந்தப் பிகருகிட்டே பேச்சுக் கொடுத்து உசார் பன்னிட்டே போன் நம்பரையெல்லாம் வாங்கிக்கிட்டேன். இன்னிக்கு ராத்திரி நீச்சலடிக்கலாம்னு நினைச்சேன். ஆனா இரண்டு டேஷன் தள்ளி ஒரு வேஷ்டி உள்ளே வந்து நின்னாரு, அவன் கூட இவ போயிட்டா. பக்கத்து கம்பார்ட்மெண்டுக்குள்ளே போயி கதவைச் சாத்திக்கிடுச்சு பிகரு. அடுத்த அடுத்த ஸ்டேஷன்ல இறங்கி அந்தக் கம்பார்ட்மெண்டுக்குள்ளே போகலாம்னு பார்த்தா கதவு நாலையும் லாக் பண்ணிட்டானுவ. அதுக்குள்ளே யாரு இருக்கான்னு டிடிக்கிட்டே விசாரிச்சேன். அந்தக் கட்சியோட அதி முக்கிய தலைவருன்னு சொன்னானுவ. மச்சத்தைப் பாரேன்னு பெருமூச்சு விட்டுக்கிட்டே வந்து குப்புற படுத்துகிட்டேன்.

மேலும் ஒரு விஷயம் சொல்றேன் கேட்டுக்கோங்கன்னு கொசுறா சொன்ன செய்தி…

இண்டஸ்ட்ரியில பேமசா இருக்கற இயக்குனரு கதை டிஸ்கஸ்சனுக்கு அந்த பிரபல நடிகையை போனில் அழைத்தார். அந்த நடிகையோ ஆரம்பத்தில் கண்டவனுக்கெல்லாம் காலை விரிச்சு இப்போதான் பேமசா இருக்கு. இனிமே பாச்சா பலிக்குமா ? போடான்னு சொல்லிட்டு அந்த இயக்குனரின் பொண்டாட்டிக்கிட்டே போட்டுக் கொடுத்துடுச்சு. பெரிய பிரச்சினையாகி இப்போ குடும்பத்துக்குள்ளே குழப்பம் வந்து ரணகளமாயிடுச்சு. அந்தாளுக்கு வேலையே கதாநாயகிகளுடன் டிஸ்கஸன் செய்வது தானாம். பெண் போதையில் தான் கதை கச்சிதமாய் வந்து உட்காருமாம்.

பெரிய இடத்துச் சமாச்சாரம். இதுக்கு மேலே விபரமாய் சொன்னா நமக்கு டப்புக்கு ஆப்பு அடிச்சுருவாங்கன்னு சொன்னார்.

குறிப்பு : இது ஒரு சிறுகதை. யாரையும் குறிப்பிடுவன இல்லை.


உர மானியம் கொள்ளையடிக்கப்படுகிறதா ? நம்மாழ்வார் கேள்வி கேட்கிறார் !

அக்டோபர் 9, 2009

முதலில் பசுமை விகடனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உரமானியத்தில் நடக்கும் சில ரகசிய விஷயங்களை வெளியிட்டு தனது பத்திரிக்கை தர்மத்தைச் செவ்வனே செய்து வரும் விகடனுக்கு மேலும் வாழ்த்து தெரிவிக்கும் நேரத்தில் அவர்களின் கட்டுரையினை இங்குச் சமர்ப்பிக்கிறேன் அவர்கள் இங்கு வெளியிட ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையால்.

பளிச் பளிச் செய்து துணுக்கில் வெளி வந்திருக்கும் செய்தி

p21a

‘உழவர்கள் நாட்டின் முதுகெலும்பு. நாடு நிமிர்ந்து நிற்க வேண்டுமானால் முதுகெலும்பைச் சீர் செய்ய வேண்டும். அதனால் உழவர் கையை வலுப்படுத்த அரசாங்கம் ஏதேனும் செய்யாதா?’ என்று மக்கள் எதிர்பார்ப்பதில் தவறு இல்லை.

ஆனால், உண்மை நிலவரமோ தலைகீழாக இருக்கிறது. அதாவது, அரசாங்கத்தின் முதுகெலும்பை நிமிர்த்துவதற்கு, உழவர்கள்தான் கடும்முயற்சியில் இறங்க வேண்டும் என்ற நிலையே நாட்டில் நீடிக்கிறது.

அதற்கு, ரசாயன உர மானியம் என்கிற ஒரேயரு உதாரணமே போதும்.

ரசாயன உர மானியம் மற்றும் இறக்குமதி குறித்து, உரங்கள் மற்றும் ரசாயனத் துறை மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், அண்மையில் நாடாளுமன்றத்தில் ஒரு தகவலைக் கொடுத்துள்ளார். இச்செய்தி, பிப்ரவரி 16-ம் தேதியன்று செய்தித்தாளில் வெளியாகியிருக்கிறது.

”நடப்பு நிதியாண்டில் (2008-09) ரசாயன உரத்துக்கான மானியம் 114 ஆயிரம் கோடி ரூபாய். கடந்த பத்து மாதங்களில் செலவிடப் பட்டுள்ள தொகை 102 ஆயிரம் கோடி ரூபாய். மீதமிருக்கும் 12 ஆயிரம் கோடி ரூபாய் இன்னும் இரண்டு மாதத்தில் செலவிடப்படும்.”

இதில் வேடிக்கை என்னவென்றால், நடப்பு நிதி ஆண்டுக்கான (2008-09) நிதி-நிலை அறிக்கையின்போது, ரசாயன உரத்துக்கான மானியமாக ஒதுக்கப்பட்ட தொகை 31 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே. ஆனால், இது கிட்டத்தட்ட நாலு மடங்காக உயர்ந்திருப்பது விந்தையிலும் விந்தையாக இருக்கிறது. இந்த மாயாஜாலம் எப்படி நடந்தது?

இந்தக் கேள்விக்கு மத்திய வேளாண் அமைச்சரும், இந்திய அரசின் தலைமை விவசாய விஞ்ஞானிகளும் பதில் சொல்லியிருக்க வேண்டும். ஒருவேளை யாரும் கேள்வி எழுப்பாமல், எதற்காக பதில் என்று இருந்துவிட்டார்களோ… என்னவோ?!

நாமே முயற்சித்தால் பதிலைக் கண்டுபிடிக்கலாம். ஆனால், அதற்கு அவசியம் வைக்காமல், கடந்த 2007-ம் ஆண்டிலேயே இந்த வேலையை அன்றைய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆரம்பித்து விட்டார். 2007-08-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சமர்ப்பித்த தெம்போடு, மார்ச் 11–ம் தேதியன்று, சென்னையில் வீர உரையாற்றினார் சிதம்பரம். அப்போது, ”கடந்த ஆண்டுக்கான (2006-07) பட்ஜெட்டை சமர்ப்பித்தபோது உரமானியத்துக்காக நான் ஒதுக்கியது 17 ஆயிரம் கோடி ரூபாய். அந்த நிதியாண்டின் முடிவில் எவ்வளவு தேவை என்று கணக்குப் பார்த்தபோது 22 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்தது. ஆனால், இப்போது வந்திருக்கும் கணக்கு, ’22 ஆயிரம் கோடி ரூபாய் போதாது. உரத் தொழிற்சாலைகளுக்கு மானியமாகத் தர வேண்டிய மொத்த பில் வந்திருக்கிறது அது 33 ஆயிரம் கோடி ரூபாய்’ என்கிறார்கள்.

நான் கேட்கிறேன்… ’17 ஆயிரம் கோடி ரூபாய் மானியம்’ என்று தொடங்கி, இன்று அது இரட்டிப்பாகி 33 ஆயிரம் கோடி ரூபாய் என்றாகியுள்ளது. இந்த உரம் எங்கே போய்விட்டது… இந்த உரம் யாரைப் போய்ச் சேர்ந்திருக் கிறது… இவ்வளவு உரம் பயன்படுத்தியும் ஏன் விளைச்சல் அதிகரிக்கவில்லை? ஆக, இந்த உரம் போய்ச் சேர வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரவில்லை. விவசாயிகளின் கைகளுக்கும் இந்த உரம் போகவில்லை. உரத்துக்கான மானியமும் போகவில்லை. இடையிலே யாரோ அனுபவிக்கிறார்கள் என்ற வருந்தத்தக்கப் பூர்வங்க முடிவுக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது”

2007-ம் ஆண்டின் துவக்கத்தில் இப்படி சந்தேகம் கிளப்பிய சிதம்பரம், அதைத் தொடர்ந்து ஏறத்தாழ இரண்டாண்டு காலம் அதே நிதியமைச்சர் பதவியில்தான் உட்கார்ந்திருந்தார். உர மானியத்தை அனுபவிக்கும் அந்த ‘யாரோ’வை அவர் கண்டுபிடித்திருப்பார் என்று நாம் நம்பலாம். அதை அவர் கண்டிப்பாக வெளியிட வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதிலும் தவறில்லை.

அதுமட்டுமல்ல… ‘சென்ற 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து, 2009 ஜனவரி வரை உரம் தயாரிப்புக்கான மூலப்பொருள்களின் விலை சரிந்தே இருந்தது. இந்த நிலையிலும் உர மானியம் உயர்ந்திருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது’ என்று வேளாண் நிபுணர்களே ஆச்சர்யப் பட்டுள்ளனர்.

எனவே, 33 ஆயிரம் கோடி ரூபாய் உர மானியம், 114 ஆயிரம் கோடி என்று ஒரேயடியாக உயர்ந்துள்ள இன்றைய காலகட்டத்தில் சிதம்பரத்தின் கண்டுபிடிப்பு, மத்திய மாநில அரசாங்கத்தின் முதுகெலும்பை நிமிர்த்துவதற்குப் பேருதவியாக இருக்கும். அவர் கட்டாயம் வாயைத் திறப்பது, இந்திய உழவர்களின் எதிர்காலத்துக்கு செய்த உதவியாக இருக்கும்.

அமைச்சர்கள், விஞ்ஞானிகள் போன்றோரின் முது கெலும்பு சரி செய்யப்படாதவரை ‘உர மானிய’ வில்லங் கங்கள் தீரப்போவதில்லை. அவர்களின் முதுகெலும்பைச் சரிசெய்ய வித்தியாசமான யோகாசனப் பயிற்சிகள் தேவைப்படுகின்றன. ஆனால், அதுவரை உழவர் நல்வாழ்வு காத்திருக்காது. இத்தகையச் சூழலில் தான் இயற்கை உழவர்களின் ‘ஆராய்ச்சி மேடை’ தேசம் காக்கும் மாமருந்தாக, மானியம் எதையும் எதிர்பார்க்காத அருமருந்தாக அச்சேறிக்கொண்டி ருக்கிறது.

நன்றி : பசுமை விகடன், திரு நம்மாழ்வார்
கட்டுரை வெளிவந்த நாள் : 10.03.2009


சினேகாவின்…!(எச்சரிக்கை வயதுக்கு வராதவர்கள் வர வேண்டாம்)

அக்டோபர் 9, 2009

சினிமா உலக மாந்தர்களுக்கு மன்மத மயக்கம் தரும் போதை வஸ்து. தமிழ் சினிமாவோ ப்ளூபிலிமை பார்ப்பதை வித அதிக போதை தரும் படங்களை தந்து கொண்டிருக்கும் ஏஞ்சல் டஸ்ட்.

தமிழக அரசியலை கெடுத்து வைத்த கழகங்கள் சினிமாவையும் விட்டு வைக்காமல் ஆட்டயபோட்டு வருவது விதி வேஷ்டிக்குள் நின்று விளையாடுவதைப் போன்றது. நாளடைவில் கழகங்கள் குழப்பங்களால் கும்மியடித்துக் குப்புற விழுந்து விடும் என்பது வரலாறு. அதைப் போல தமிழ் சினிமாவும் ஆகிவிட்டால் தமிழன் என்னதான் ஆவானோ தெரியவில்லை.

தமிழக அரசு பெர்த்திக்கு கலைமாமணி பட்டம் வழங்கி சிரிப்புக்கே சிரிப்பை வரவழைத்த சம்பவம் விதி வேஷ்டிக்குள் சென்றது என்றால் அதை விட மேலாய் கலைத் தாயின் அருமை மக்கள், இசையுலக சிக்கிரவர்த்தி சீச்சீ… சக்ரவர்த்தி கிளையராஜாவின் அருமைத் தம்பி கிங்கைக் குமரனின் தவப்புதல்வர்கள் எடுக்கும் சினிமாக்கள் விதி வேஷ்டியைத் தாண்டி ஜட்டிக்குள் சென்று விட்டதைக் காட்டுகிறது.

அட்டயப்புடுச்சி மெத்தையில போட்டா என்னா செய்யும்னு தெரியும்தானே. அதைத்தான் அண்ணனும் தம்பியுமா சேர்ந்து செய்யுறாங்க. இதில அட்டையாருன்னா அதை நீங்களே புரிஞ்சுக்குகங்க. அத்தோடு படங்களையும் பார்த்து ரசிச்சிடுங்க.

சினேகாவின் மார்பு ஹீரோவின் எந்தப் பகுதியில் பட்டிருக்குன்னு பார்க்காதீங்க. அது தப்பு. இதெல்லாம் நடிப்பு.

p108a

தம்பியுடையான் படைக்குஞ்சான் ச்சீ.. படைக்கஞ்சான் என்பார்கள். அந்தப் பழமொழி இப்போது அண்ணனுடையான் அழகிகளுக்கு குறையான். என்னா ஒரு சேவை செய்கிறார் அண்ணன். கொடுத்து வைத்த தம்பி.

p106b

p108b

குறிப்பு : இது ஒரு கற்பனைச் சிறுகதை. படங்கள் கதைக்கேற்றவாறு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பட உதவி : கூக்குகிளார்


Follow

Get every new post delivered to your Inbox.

Join 108 other followers