அடிதடி ஆரம்பம் – பாரு நிவேதிதா, வெயமோகன்

பாரு ஆன்லைனில் கிட்டத்தட்ட கால்வாசிக் கட்டுரைக்கும் மேலே உத்தம தமிழ் எழுத்தாளன் என்ற வார்த்தைப் பிரயோகங்களை பாரு பயன்படுத்தி வெயமோகனைத் திட்டி அல்லது நக்கலடித்து படிக்கும் வாசகர்களை பரபரப்புக்கு உள்ளாக்குகிறார். ஏன் இப்படி எழுதுகிறார். காரணமிருக்கிறது.

அதே போல் வெயமோகனும் வாசகர்கள் என்று சொல்லி கடிதங்களை வெளியிட்டு பதிலாக பாருவை விமர்சிக்கிறார். அவரது ஒரு கட்டுரையினைப் இந்த இணைப்பில் படித்துப் பாருங்கள். http://jeyamohan.in/?p=519

வெயமோகனை சாரி, அவரது எழுத்தை எனக்குப் பிடிக்காது. அவரது எழுத்து இலக்கியமாதிரி தெரிகிறது. ( இலக்கியம்முன்னா என்னாது??). ஏனென்றால் நான் இன்றும் தினமலர் வாரமலரில் வரும் துணுக்குமூட்டை, அன்புடன் அந்தரங்கம் படிக்கும் வழக்கமுள்ளவன். சினிமா பார்க்கையில் நடிகைகளின் தொடை இடுக்கையே உற்றுப் பார்ப்பவன். ஆகையால் யார் படிக்கும் போது தொடையிடுக்கில் அரிப்பு வரும்படி ( வரும்படி…..! உங்களுக்கு உடனே பாருவின் இணையதள வரும்படி பற்றியெல்லாம் நினைவுக்கு வரக்கூடாது) எழுதுகிறார்களோ அந்த எழுத்துத்தான் எனக்கும் பிடிக்கும்

வெயமோகன் பாருவைக் கண்டு கொள்வதே இல்லை. ஆனால் பாரு விடுவதாயில்லை. நான் கடவுள் படத்தை பாராட்டுகிறேன் பேர்வழி என்று கிளம்பி எழுதி பாரு வெயமோகனைப் பாராட்டுகிறார் என்ற பரபரப்பைக் கிளப்பினார். இப்போது ஜஸ்ட் இக்னோர் என்று எழுதி வெயமோகன் அமெரிக்கா செல்வதை கிண்டலடிக்கிறார். இவ்வாறு அடிக்கடி இலக்கிய உலகில் பரபரப்பினை உண்டாக்குகிறேன் பேர்வழி என்று காமெடி செய்கிறார்.

கொடுமைடா சாமி. பூனை கண்ணை மூடிக்கிட்டு பாலைக் குடிக்கும் போது உலகமே இருண்டு போச்சுன்னு நினைச்சுக்குமாம்.

தமிழகத்தில் சொல்லிக் கொள்ளும்படியாக எழுதுவது நாம் இருவர் மட்டும் தான் என்று இருக்க வேண்டுமென்ற ஆவலில் இருவரும் சேர்ந்து போடும் நாடகம் என்றே இவர்களது தளங்களைப் படிக்கையில் எண்ணத் தோன்றுகிறது.இலக்கியவாதிகள் என்றால் தமிழில் தாங்கள் இருவர் மட்டும் தான் என்பதாக காட்டிக் கொள்ள முயல்வதும் அக்மார்க் அரசியல்.

நிறைகுடம் தளும்பாது. ஆனால் இருவரும் செய்வதையும் எழுதுவதையும் பார்த்தால்…. ( அப்படியெல்லாம் நினைக்கக்கூடாது. இது எனது வேண்டுகோள்)

குறிப்பு : பாருவின் கட்டுரைகளைப் பற்றி விமரிச்சித்து எழுத இருக்கிறேன். ஏனென்றால் அவரது கட்டுரையினைப் படிக்கும் போது தான் தொடையிடுக்கில் குஞ்சாமணிக்கு உதறல் எடுக்கிறது. (பாரு எழுதிய செக்ஸ் மாத்திரை இடம் பெற்ற கட்டுரை இவ்விடத்தில் நினைவுக்கு வரவேண்டும்). மூன்று ஆண்கள் ஒரு பெண் என்ற க்ரூப் டிஸ்கஷன் பாரா இடம் பெரும் கட்டுரையினை படிக்கும் போது குஞ்சாமணி ( நன்றி : பசங்க திரைப்படம்) குதித்து எழுகிறது.

அக்கட்டுரையை இலக்கியமென்று சொன்னால் காமலோகம் என்ற தளத்தில் எழுதப்படும் அத்தனை கதைகளும் உச்சப்பட்ச இலக்கியமல்லவா? இவ்விடத்தில் எனக்குப் புரியாத சமாச்சாரம் இலக்கியமென்பது எது என்பது தான்? புரிந்தவர்கள் பின்னூட்டம் போட்டு வையுங்கள்.

அக்கட்டுரையினைப் படித்து ரசியுங்கள். க்ரூப் டிஸ்கஷன் கட்டுரையினைப் படிக்க : http://charuonline.com/June2009/Yezhutthu.html

துணைக்குறிப்பு : பாரு மட்டும் தான் மற்றவர்கள் இணைய தளத்துக்கு இணைப்புக் கொடுக்க வேண்டுமா என்ன ? அவரது தளம் போல ரீஃப்ரஸ் செய்தாலே ஹிட் ஏறிவிடும் தளமல்ல இத்தளம். சூடான கட்டுரையினை வெளியிட்டால் நாளொன்றுக்கு 600 தனி ஐப்பியிலிருந்து வாசகர்கள் படிக்கும் தளம் இது. சரி ஏன் பாருவைப் பற்றி விமர்சிக்க வேண்டுமென்று நினைக்கின்றீர்களா ? சாரு தமிழில் எழுதுகிறார். எழுத்து அத்தனையும் சமூகத்துக்கு என்கிறார். அந்தச் சமூகத்தில் இருக்கும் பலர் அவரது கட்டுரையினைப் படித்து விட்டுப் பாராட்டுகிறார்கள். நாம் வித்தியாசமாய்ச் செய்தால் என்ன என்ற நினைப்புத்தான் பாருவைப் பற்றிய விமர்சனம். ஆகவே பாரு எனது விமர்சனங்களை படித்து கோபப்படாமல் சிரித்து வைத்தால் எனக்கு வெற்றி கிடைத்து விடும்.

மேலும் ஒரு துணைக்குறிப்பு : இது ஒரு சிறுகதை. கதைகளில் வரும் பெயர்கள் கற்பனை. சம்பவங்கள் கற்பனை. எல்லாமே கற்பனை.

5 பதில்கள் “அடிதடி ஆரம்பம் – பாரு நிவேதிதா, வெயமோகன்” க்கு;

  1. வால்பையன் சொல்வதென்னவென்றால்:

    //தமிழகத்தில் சொல்லிக் கொள்ளும்படியாக எழுதுவது நாம் இருவர் மட்டும் தான் என்று இருக்க வேண்டுமென்ற ஆவலில் இருவரும் பாருவும் சேர்ந்து போடும் நாடகம் என்று இவர்களது தளங்களைப் படிக்கையில் எண்ணத் தோன்றுகிறது.இலக்கியவாதிகள் என்றால் தமிழில் தாங்கள் இருவர் மட்டும் தான் என்பதாக காட்டிக் கொள்ள முயல்வதும் அக்மார்க் அரசியல்.//

    இந்த பாராவில் ஒரு எழுத்துப்பிழை உள்ளது திருத்தி கொள்ளுங்கள், இல்லைனா தனிமனித தாக்குதல்ன்னு சொம்பு தூக்கிகள் சண்டைக்கு வருவாங்க!

    உங்களுக்கான குறிப்பு : இது முற்றிலும் நகைச்சுவை கலந்து எழுதப்பட்டது. ஆகையால் கலாய்ப்பாக எடுத்துக் கொள்ளவும். பாரு எப்படி உ.த.எ என்று வெயாவைக் கலாய்க்கிறாரோ அப்படி… ஓகே…

  2. மதி சொல்வதென்னவென்றால்:

    காமலோகம்.காமை ஒப்பிட்டு அந்த தள எழுத்தாளர்களை சிறுமைப்டுத்துவதை கண்டிக்கிறேன்

  3. kuppan_yahoo சொல்வதென்னவென்றால்:

    we should not encourage these fights disputtes, negative attitude matters.

  4. அனாதி சொல்வதென்னவென்றால்:

    மதி மன்னித்து அருளுக…

  5. அனாதி சொல்வதென்னவென்றால்:

    குப்பன் ஜி,கருத்துக்கு நன்றி. மதி உங்களுக்கு நன்றி. நெகட்டிவ் அட்டிடியூட்ஸ் வைத்துத்தான் இன்றைய சில பத்திரிக்கைகள் கோடிகளில் சம்பாதிக்கின்றன. மொத்தத்தில் மனித சமூகம் மாற வேண்டும். ஆனால் மாறுமா என்பது தான் விடை தெரியாத கேள்வி..

மறுமொழி இடுக