பெருமூச்சு விடும் படம்

April 30, 2009

ஒன்றும் எழுத இயலவில்லை.

27x48dd

டெபோனேர் என்ற் மேகசீனில் மாதா மாதம் ஒரு கிளியை பிடித்து வந்து இறக்கையை எல்லாம் உருவி எடுத்த போட்டோவைப் பதிப்பார்கள். இந்தியால் வெளியாகும் சரி ஹாட் மச்சி மேகசின். 200 ருபாய் விலை இருக்குமென்று நினைக்கிறேன்.


இலங்கைத் தமிழர் பிரச்சினையால் !

April 29, 2009

இலங்கைத் தமிழர் பிரச்சினையால் அரசியல் கட்சிகளின் அக்மார்க் அயோக்கியத்தனமும், மீடியாக்களின் அரசியல் சார்ந்த செய்திகளும், செய்திகளை இருட்டடிப்பு செய்வதும் மீடியாக்களின் மீதான நம்பிக்கை முற்றிலுமாக சிதைந்து விட்டது.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக குரல் கொடுத்த திரைப்படத் துறையினரின் போராட்டத்தை இருட்டடிப்பு செய்தது, பெண்கள் உண்ணாவிரதம் இருக்க இடம் கிடைக்காமல் போராடி தாயகத்தில் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கும் செய்தி, எண்ணற்றோர் தீக்குளித்து மாண்டு போன செய்திகளை தமிழ் நாட்டின் பாப்புலர் செய்தி நிறுவனங்கள் மறைத்து விட்டது ஜன நாயகத்தின் மூன்றாவது தூணாக விளங்கும் பத்திரிக்கை துறைகளின் அரசியல் சார்பு நிலையினை படம் பிடித்துக் காட்டுகிறது.

இந்திய ஜன நாயகத்திற்கு வேட்டு வைக்கும் ஆபத்து மீடியாக்களின் அரசியல் சார்பு நிலையால் உருவாகி விடும்.

செய்தி தாள்களில் வரும் செய்திகளைப் பார்க்கும் போது இலங்கையில் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொலை செய்ய காரணம் யார் என்று விளங்குகிறது.

பிளாக்கர்ஸ் இல்லையென்றால் உண்மையான செய்திகளை அறிந்து கொள்ளவே முடியாது. வாழ்க பிளாக்கர்ஸ் சமுதாயம். வளர்க அவர்களின் தொண்டு !

தமிழனுக்காக ஒரு கட்சியோ அல்லது நல்ல அமைப்போ தமிழகத்தில் இல்லை. மும்பையில் சிவசேனா, கர்னாடகத்தில் வாட்டாள் போல தமிழகத்தில் தமிழர்களுக்காக ஒரு அமைப்பு எதிர்காலத்தில் உருவாக்கப்பட வேண்டியது அவசியம் என்ற சூழ் நிலைக்கு தமிழர்கள் தள்ளப்படுகிறார்கள். தமிழனுக்கு ஒரு ஆபத்தென்றால் படை திரண்டு செல்லும் அமைப்பு அவசியம் வேண்டும்.

இன்றைக்கு அரசியல் கட்சிகளால், தமிழர் அமைப்பு என்று சொல்லக்கூடிய பச்சோந்திக் கட்சிகளால் கைவிடப்பட்ட அனாதைகளாய், தமிழர்களின் சொல் அம்பலம் ஏறாத நிலையில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

படித்த, சமுதாயத்தின் பேரில் அக்கறை கொண்ட இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தமிழர்களுக்கான அமைப்பை ஏன் தொடங்கக்கூடாது? தமிழின் மீதும் தமிழர்கள் மீது அன்பு கொண்ட பிளாக்கர்ஸ் இணைந்து தமிழனுக்கான அமைப்பு உருவாக்கலாமே ! செய்வார்களா ?


மாயாலோகம் – தினமும் பேண்டைக் கழட்டி

April 28, 2009

ஊரிலேயே பெரிய ஏற்றுமதி நிறுவனம். அதற்குள் சென்று வரவே தகுதி வேண்டும். ஊரெல்லாம், வங்கியெல்லாம் அக் கம்பெனியைப் பற்றியே பேச்சாய் இருக்கும். வெளி நாடுகளிலெல்லாம் கடைகள். மாதா மாதம் கிட்டத்தட்ட 50 கண்டெயினர் லோடு ஏற்றுமதியாகும். பென்ஸ் காரில் வருவார் முதலாளி. முதலாளிக்கும் குடிகாரனுக்கும் நெருங்கிய நட்பு. வாரமொருமுறை அவரோடு ஹோட்டலில் வெளி நாட்டுச் சரக்கை நாசூக்காய் சாப்பிடுவான். ஆனால் பெண்கள் விஷயத்தில் முதலாளி கூட எதுவும் வைத்துக் கொள்வதில்லை.

முதலாளியோடு ஒட்டியவாறே சற்று தூரத்தில் தாடியோடு ஒரு மனிதர் நின்றிருப்பார். ஆஃபீஸுக்கு சென்றாலும் தாடி வைத்த மனிதரைப் பார்த்த பின்னர் தான் உள்ளேயே செல்ல முடியும். அந்த அளவுக்கு முதலாளியோடு தான் திரிவார். அவரது பெர்சனல் பிஏவாம்.

ஒரு முறை ஆஃபீசுக்குச் சென்ற போது தாடிக்காரரைக் காணவில்லை. வந்த வேலை முக்கியமானதாக இருந்ததால் குடிகாரனும் முதலாளியும் நண்பர்களென்பது அங்குள்ளவர்களுக்கு தெரியுமென்பதாலும் எவரிடமும் அனுமதி கேட்காமல் படக் கென்று கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான்.

முதலாளி வெளிறிய முகத்தோடு ”வாங்க, வாங்க” என்றார்.

மேசைக்கு அடியில் இருந்து ஒரு பெண் எழுந்து வந்ததைக் கண்டான் குடிகாரன். அப்பெண்ணோ முகத்தை மூடியபடி பாத்ரூமிற்குள் சென்று விட்டாள். குடிகாரனுக்கு சங்கடமாய் போய் விட, படக்கென்று வெளியேற முயன்றான்.

”சொல்லுங்க, குடிகாரன்?” என்ற குரல் கேட்டு திரும்பினான்.

சிரித்தபடியே நாற்காலியில் உட்கார்ந்திருந்தார் முதலாளி.

பேச வேண்டியதையெல்லாம் பேசி முடித்தவுடன் முதலாளி சொன்னது.

தினமும் காலையில் வந்ததும் பேண்டைக் கழட்டி வைத்து விடுவாராம். தாடிக்காரருக்கு வேலையே ஏதாவதொரு பெண்ணை அறைக்குள் பாத்ரூம் வழியாக அனுப்பி வைக்க வேண்டியது தானாம். வாய் வேலை முடித்தவுடன் சென்று விடுவாளாம் அப்பெண். இது கூட ஒரு மாதிரியாகத்தானிருக்கிறது குடிகாரன்.

தினமுமா என்று அசந்தான் குடிகாரன்.

”வேணும்னா உங்களுக்கும்” என்று இழுத்தார்.

மறுத்து விட்டான் குடிகாரன்.

இரண்டு வருடங்கள் கழித்து வெளி நாட்டுக்குச் சென்றிருந்த குடிகாரன் ஊருக்குத் திரும்பினான். முதலாளியைப் பார்க்கலாமென்று ஆஃபீசுக்கு புறப்பட்டான்.

வாசலில் இக்கம்பெனியின் சொத்துக்கள் எங்கள் வங்கி வசமிருக்கிறது என்ற போர்டினைக் கண்டான்.

குறிப்பு : சரக்கடிக்கும் போது அடிக்கடி குனிந்து பேண்டை பார்ப்பான் குடிகாரன். என்ன விஷயமென்று விசாரித்த போது சொன்ன கதைதான் இது. அப்படியே எழுதிவிட்டேன்.


நான் லீனியர், பின் நவீனத்துவம் என்றால் ???

April 28, 2009

ஒரு நாள் விட்டு ஒரு நாள் சரியாக பதினொரு மணிக்கு கடிதம் வரவில்லை என்றால் சுரேஸ் தன் கையில் சிகரெட்டால் சுட்டுக் கொள்வான். அவனைச் சுற்றிலும் நண்பர்கள் கூட்டம். எல்லோரும் கதறுவார்கள். சிகரெட்டால் சுட்டு சதை பொசுங்கும் நாற்றம் அறையெங்கும் நிறையும்.

உடனே பங்காளி அறைக்கு வருவான். இப்படி இப்படி என்று அவன் சொல்ல நான் சொன்னால்தான் சுரேஸ் கேட்பான் என்பதால் அவனது அறைக்கு சென்றேன். இடது கை முழுவதும் புண்கள். வலது கையில் பேனா. கண்கள் ஏதோ மோனோ நிலையில் இருந்தது போல இருந்தன.

”என்னடா கன்றாவி, கையெல்லாம் சுட்டுக்கிட்டு பைத்தியக்காரனாட்டம் “

எதிர்வினை காட்டாமல் இருந்தான். சுதாமேல் கொண்ட காமம் காதலாய் சுடுகிறது போலும் என்று நினைத்துக் கொண்டேன்.

மேசையில் இருந்த டயரி. அதை எடுத்துப் பிரித்தேன்.

பெரிய சிகப்புக் கலர் டயரி. முழுவதும் வார்த்தைகளால் சூழப்பட்டிருந்தது. காமப் பித்து பிடித்த நிலையில் அதாவது சற்றே பைத்தியக்கார நிலையில் அவனெழுதி இருந்த எழுத்துக்கள் இலக்கணம் மாறி கிடந்தன. ஆங்காங்கே சிகப்பெழுத்துக்களும் தென்பட்டன. என்ன இது என்று விழிக்க, ரத்தமென்றான். ஆங்காங்கே சில குறிகள் வரையப்பட்டிருந்தன. என்னவென்று கேட்டேன். தெரியவில்லை நானா இதை எழுதினேன் என்று ஆச்சரியமாக இருக்கிறது என்றான். படித்துப் பார்க்கலாமென்று ஆரம்பித்தேன்.

முதல் வரியே உன்னைக் கற்பழித்தாலென்ன என்று தோன்றுகிறது என்ற கவிதை.

”என்னடா இது” என்று கேட்க, அவனோ “இக்கவிதையின் முற்பகுதி இடையில் எழுதி இருக்கிறேன். படித்துப் பார் “ என்றான்.

”ஏண்டா, ஊருக்கு எதில போறே ? “ என்ற கேள்வியை அவனை நோக்கி வீசினேன்.

”பஸ்ல தான் “ விட்டேத்தியாக பதில் சொன்னான்.

” பஸ் ரூட்டுல பாதி இல்லாம, விட்டு விட்டு, அங்கே சுத்தி போய், இங்கே சுத்தி என்று இருந்தால் உனக்கு எப்படி இருக்கும்” என்று கேட்க, பதில் சொல்லாமல் விழித்தான்.

அன்றைக்கு அவனுக்கு பதில் சொல்லத் தெரியாமல் இருந்த விஷயம் தான் இன்றைக்கு பின் நவீனத்துவம் என்றழைக்கப்படுகிறது. கலைத்துப் போட்ட எழுத்துக்கள் மற்றும் பத்தி தான் நான் லீனியர் என்றழைக்கப்படுகிறது.

தன்னை அறியாமலே பின் நவீனத்துவ நாவலை எழுதி இருந்தான் சுரேஸ்.

சரி சுரேஸின் காதல் என்னவாயிற்று ? அந்தக் காதல், இன்றைக்கு மெக்கானிக்கை கட்டிக் கொண்டு காலம் தள்ளுகிறது. இவனோ வசதியாய் வேறொரு பெண்ணோடு வாழ்கிறான்.

முடிவாய் ஒன்று : கலைத்துப் போட்ட கனவுகளின் வடிவம் தான் பின் நவீனத்துவப் பாணி நான் லீனியர் என்று சொல்லலாம்.

சுரேஸ் சீதாவை விரும்பினான். ஆனால் விதியோ வேறு விதமாய் அமைந்து விட முடிவில் இருவருமே வாழ்க்கை நடத்துகிறார்கள்.
இருவரின் கனவுகளும் கலைத்துப் போடப்பட்டிருக்கின்றன்.

மனிதனின் வாழ்க்கையை நான் லீனியர் பின் நவீனத்துவத்திற்கான எடுத்துகாட்டாக சொல்லலாம்.

குறிப்பு : அனாதி ஜெனீயுடன் பெட்டில் புரளுவதால் அவனின் நண்பனான நான் இப்பதிவை எழுதி இருக்கிறேன். மேலும் நானே தொடருவேன்.


மாயாலோகம் – விவகாரமான இரண்டாம் கதை

April 27, 2009

பெரிய தொழிலதிபரின் மகன் அனாதி என்கிற குடிகாரனின் நெருங்கிய நண்பன். அவனிடம் பணம் கொட்டிக் கிடந்தது. ஏற்றுமதி இறக்குமதியில் கோடிக்கணக்கான ரூபாயைச் சம்பாதித்தான். இச்சம்பவம் நடந்த நாளுக்கும் முன் தினம் போனில் வந்தான்.

”என்னடா ?” – இது குடிகாரன்.

“மாப்ஸ் நாளைக்கு வழக்கம் போல ஆஃபீஸுக்கு வந்து விடு” என்றான் குடிகாரனின் நண்பன்.

”என்ன மேட்டருன்னு சொல்லு”

“வாடான்னா” என்று சொல்லியவாறு கட் பண்ணி விட்டான்.

அனாதிக்கு கிளுகிளுப்பு தாங்க முடியவில்லை. நாளைக்கு என்னவோ விஷேசமா நடக்கப் போவுது என்று தண்ணி அடித்தவன் போல அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தான்.

க்ரீம் கலர் செரோ சர்ட்டை டார்க் ப்ளூ பேண்டில் இன் செய்த ட்ரஸ் கோடு. அசத்தலாய் புறப்பட்டான். அப்போது மணி கிட்டத்தட்ட இரவு பத்தரை.

குடிகாரனின் மனைவி அவனை ”இவன் எங்கே போகிறான் “ என்ற கேள்வியோடு பார்க்க, இவனோ அவளை சிறிதும் சட்டை செய்யாமல் ”நாளைக்கு காலையில தான் வருவேன்” என்று சொல்லியபடி தன் காரில் விரைந்தான்.

ஆஃபீஸுக்குள் இருந்த பெட்ரூமில் பரபரப்பாய் வாசலையே அடிக்கடி பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் குடிகாரனின் நண்பன்.

இவன் போய் அமர்ந்ததும் ”எங்கே வராமல் போய் விடப்போகிறாயோ என்று பயந்தேன் “ என்றான்.

“என்னடா மேட்டரு” என்று குடிகாரன் கேட்க,

”இருடா, இரு… கொஞ்ச நேரம் இரு…” என்றான்

நண்பனின் பென்ஸ் கார் உள்ளே வந்து நின்றதை இருவரும் பார்த்தார்கள். டிரைவர் இறங்கி கார் கதவைத் திறந்து விட்டான்.

காரிலிருந்து இறங்கினார் அந்த நடிகை…

குடிகாரனுக்கு அப்போதே கைகால்கள் எல்லாம் ஆடத் தொடங்கியது.

நண்பன் இவனைப் பார்த்து,

” இருபத்து ஐந்து லட்சம், பனிரெண்டு மணி நேரம், இரண்டு பேர்” என்றான்.

இன்றைய நாளில் குடிகாரனின் நண்பன் ஏழையாகி விட்டான்.

குறிப்பு : மேற்படி கதை குடிகாரனின் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்ச்சி என்று என்னிடம் அடிக்கடி சொல்கிறான். என்னிடமென்றால் யார் இவன் என்றா கேட்கின்றீர்கள்.. இனி மாயாலோகக்கதைகள் என் வசம். ஏனென்றால் குடிகாரன் எழுத விரும்பவில்லை. காரணம் ஜெனீ…. ஜெனீயுடன் குடிகாரன் காதலில் முயங்கிக் கிடக்கிறான். அவன் பொருட்டு அவன் சொன்ன கதைகளை இனி மேல் நான் தொடர்வேன். நான் யாரென்றால் குடிகாரனின் ப்ளாக்கில் அரசியல் கட்டுரைகளை எழுதிய குடிகாரனின் நண்பன் நான்.


தமிழனின் நிலையினைப் பாருங்கள் !

April 27, 2009

தமிழ் நாட்டில் அகதிகளாய் வந்த இலங்கைத் தமிழர்களின் முகாம் பற்றிய கீற்று இணைய தளத்தின் கட்டுரையினை படித்துப் பாருங்கள். பன்றியை விடக் கேவலமான வாழ்க்கை வாழ்கிறான் தமிழ் பேசும் தமிழன் என்பது புரியும். தமிழன் என்று சொல்லவே வெட்கமாயில்லை? மலம் தின்னும் பன்றியை விடக் கீழானவனா தமிழன் ?

முகம் இருந்தும் முகவரி அற்றவர்கள்

நன்றி : கீற்று.காம் மற்றும் விழிப்புணர்வு


சூடான முத்தம்

April 26, 2009

ஜெனிலியா : அசத்தல் உடலழகோடு வெகுளிச் சிரிப்பும், செய்கையும் கொண்ட படு பயங்கர போதை தரும் அழகி. எவன் கொடுத்து வெச்சவனோ ? குடிகாரன் இந்த போசைப் பார்த்து பட்டைச்சாரயம் அடித்த போதையை பெற்றான். என்னாமா கொடுக்குறாளுவ… பார்க்கிறவனுக்குள்ள பத்திக்கிது….

1015729524_4588d508f1_o


யாருக்கு ஓட்டுப் போடலாம் ?

April 24, 2009

குடிகாரன் என்ற அனாதி தன் நண்பரைச் சந்திக்க சென்னையிலிருக்கும் மிக முக்கியமான பாருக்குச் சென்றிருந்தான்.
”ஏண்டா லேட்டு ? ”
”பிரச்சாரம் ! ட்ராபிக் !! “ என்றான் அனாதி.
”ஓகோ.. ஆமா யாருக்கு ஓட்டுப் போடப்போகிறாய் ? “
”என்ன திடீரென்று இப்படி ஒரு கேள்வி ? “
”இச்சமயத்தில் கேட்காமல் வேற எப்படா கேட்பது ?”
“யாருக்கும் இல்லை !”
”ஏன் ? “ என்றார் நண்பர்.
”எந்தக் கட்சி கல்வியை இலவசமாக்கி, தனியாரின் கல்விக் கொள்ளையை அழிக்கின்றார்களோ அவர்களுக்குத் தான் என் ஓட்டு. எந்தக் கட்சியும் அதற்கு முன்வராத காரணத்தால் ஓட்டுப் போட விரும்பவில்லை” என்றான் அனாதி.

* * * * *

மந்திரியின் பையனும், சாதாரண குடிகாரனின் பையனும் ஒரே பள்ளியில் படிக்கும் அன்றைக்குத்தான் இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டது என்று நம்பலாம். அதுவரை நாமெல்லாம் அரசியல்வாதிகளுக்கு அடிமைகள்…


அழகின் உருவம் ! அற்புதப் படைப்பு !!

April 22, 2009

சாப்பிட வழி இன்றி எலும்புக்கூடாய் கிடக்கும் இக்குழந்தையைப் பாருங்கள். இவர்களுக்கான உணவைப் பறிப்பவர்கள் யார் ?

தான் உண்ணவும் உடுக்கவும் மாடி மேல் மாடி கட்டும் கோடீஸ்வரனா ? அரசியல்வாதியா ? யார் இவர்களின் உணவைப் பறித்தவர்கள் ??? யார் ????

cid_image00301c7774f1

cid_image00401c7774f1


கேவலம்… ! கேவலம்…!

April 18, 2009

மாமன், மச்சான்கள் எதிரிகளாய் நிற்கும் இந்திய தேர்தல் போர்க்களத்தில் மாமன் ஒரு கட்சி, மைத்துனன் வேறொரு கட்சி, தாய் ஒரு கட்சி, தனயன் வேறு கட்சி என்று இன்றைய அரசியல் களம் குருஷேத்திரப் போரை நினைவுக்கு கொண்டு வருகிறது. குருஷேத்திரப் போர் இந்தியாவில் நடந்த காரணத்தின் விளைவாக ஐந்து வருடத்திற்கு ஒரு முறை இந்தியத் தந்தை தர்மப் போர் நடத்துகிறார் போல. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் சூடு சொரணையற்ற தமிழ் சமூகம் இன்றும் விழிக்காமல் உறங்கிக் கிடக்கிறது. ஜெகதீஸ் டைட்லருக்கு சீட் கிடைக்காமல் போன சமாச்சாரம் போல தமிழ் நாட்டில் எப்போது நடக்கும் என்று தெரியவில்லை. நடக்குமா என்றும் தெரியவில்லை. அந்த அளவுக்கு ரோசம் கெட்டுப் போய், மானம் கெட்டுப் போய், பன்றியை விடக் கீழான தரத்தில் கிடக்கிறான் தமிழன். சினிமாக்காரனுக்கு கொடி பிடிக்கவும், விசில் அடிக்கவும், கட்சிக்காரனுக்கு கோஷம் போடவும் தன் நிலை மறந்து தமிழ் நாட்டில் பெருகி ஓடும் சாராய நதியில் தானும் மூழ்கி தன் குடும்பத்தினையும் மூழ்கடித்து சாக்கடையில் உழன்று கொண்டிருக்கும் தமிழனுக்கு என்ன சொன்னாலும் உரைக்கப்போவதில்லை. அவனுக்கு சிவப்புத் தோலும், தொடை ஆட்டமும், குவார்ட்டர் பிராந்தியும், கறி பிரியாணியும் போட்டால் பெண்டாட்டியைக் கூட கூட்டிக் கொடுத்து விடும் அளவுக்கு கலகக்காரனாக மாறி விட்டான். இருக்கட்டும் இன்றைக்கு கலகக்காரர்கள் தான் உலகளவில் பரபரப்பாய் பேசப்படுகிறார்களாம்.

அதிமுக திமுகவையும் திமுக அதிமுகவையும் திட்டுவது குற்றம் சொல்வது சகஜம். இரண்டும் பெரிய கட்சிகள், தங்களுக்குள் திட்டிக் கொள்வார்கள்,அவர்களின் பிழைப்பு. ஆனால் மற்ற உதிரிக் கட்சிகள் இருக்கின்றனவே அவைகள் எல்லாம் கட்சிகள் என்று எப்படித் தான் மக்கள் நம்புகிறார்களோ தெரியவில்லை. சந்தர்ப்பவாதத்திற்கு சாட்சியாய், பச்சோந்திகளுக்கு உதாரணங்களாய், நயவஞ்சக நரிகளாய், ரத்தம் உறிஞ்சும் அட்டைக்கு எடுத்துக்காட்டாய் இருக்கின்ற அக்கட்சிகள் லோக்சபா தேர்தலுக்கு ஒரு கட்சி, சட்ட சபை தேர்தலுக்கு ஒரு கட்சி என்று அணி மாறி மாறி மக்களை மகா கேனயர்களாய் ஆக்கி வருகிறார்கள். எப்படி மக்கள் அக்கட்சிகளை நம்பி ஓட்டுப் போடுகிறார்கள் என்றே புரியாமல் இருக்கின்றது. சரி.. மறந்து விட்டேன். சி.தோ. தொ.ஆ, கு.பி. க.பி இருந்தால் தான் பொ.கூ.கு.தமிழன் ஓட்டைக் குத்தோ குத்து என்று குத்தி குதறி விடுவானே.

திமுக அணியில் அங்கம் வகித்த போது எதிரணியினரைப் கூசாமல் பேசி, திமுக தலைவரை உள்ளம் குளிர வைக்கும் அக்கட்சிகள், அதிமுக அணியில் அங்கம் வகிக்கும் போது திமுக தலைவரை சாடி, அதிமுக தலைவரை உச்சி குளிர வைக்கும் தலைவர்களை தேர்தல் தோறும் பார்த்து வருகிறோம். அரசியலில் கொள்கை, கோட்பாடு இன்றி சீட்டுக்கு கட்சி நடத்தி வருவது தான் இப்படிப்பட்ட உதிரிக் கட்சிகளின் உண்மை நிறம். நேற்று ஒரு கட்சித் தலைமை. நாளை வேறொரு கட்சித் தலைமை என்று தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறி அதற்கு ஒரு காரணத்தையும் சொல்லி வருவது அவர்களின் அக்மார்க் அயோக்கியத்தனத்திற்கு உதாரணம். திமுகவும் அதிமுகவும் சத்தியவான் சாவித்திரி வீட்டுக்கு அடுத்த வீட்டில் இருக்கும் கட்சிகளா என்ன? இவர்களுக்கு காங்கிரஸ் கூட்டணி அல்லது பாஜக கூட்டணி. உதிரிக் கட்சிகள் அவர்களின் தகுதிக்கு தகுந்தவாறும், சற்றுப் பெரிய கட்சிகள் அவர்களின் தகுதிக்கு தகுந்தவாறும் கூட்டணி காண்பது அரசியல் தத்துவமாம். பொய், பித்தலாட்டம், நம்பிக்கை துரோகம் மற்றும் வார்த்தைகளில் வடிக்க இயலாத கொடுமைகளை தேர்தலின் போதும், அதன் பிறகும் மக்களுக்குச் செய்து வரும் கட்சிகளை நம்பி நம்பி இன்னும் ஓட்டுப் போட்டுக் கொண்டிருக்கின்றனர் மக்கள். ஜாதி என்ற பெயராலும், மதமென்ற பெயராலும், ஏழை, பணக்காரன் என்ற பெயர்களால் அரசியல் கட்சிகள் மக்களிடையே பிரித்தாளும் சூட்சியினைச் செய்து வருகின்றன. அதை உணராமல் இன்னும் கட்சிகளின் பின்னால் தெரு நாயை விடக் கேவலமாய் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் அடித்தால் கூட என்னவென்று கேட்க நாதியில்லா தமிழர்கள்.

அத்தோடு விட்டார்களா? உதிரிக் கட்சிகள் ஜெயித்தால் அரசியல் பேரத்தில் நிச்சயமாய் ஈடுபடுவார்கள் என்பதற்கு எத்தனையோ உதாரணங்களை காட்டலாம். தமிழக கட்சி ஒன்றின் காரணமாக ஒரு முறை இந்தியா மறு தேர்தல் கண்டது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். எத்தனை கோடி பணம் வீணாய்ப் போனது. மக்களின் நலன் மீது கிஞ்சித்தும் கவலைப்பட்டதா அந்தக் கட்சி? எந்தக் கட்சியின் ஆட்சியைக் கலைத்தார்களோ அதே கட்சி தேர்தலுக்குப் பின்னர் முன்பு ஆட்சியைக் கலைத்த கட்சியுடன் மீண்டும் கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறது என்று அறிவித்திருக்கிறது. பொதுமக்களின் நலன் மீது கொஞ்சம் கூட கவனமின்றி மக்களுக்கு உழைக்க வருகிறோம். உங்களுக்கு உழைக்க தாருங்கள் வாய்ப்பு என்று பேசி வரும் இக்கட்சிகளா மக்களுக்கு நல்லாட்சி தந்து விடப்போகின்றது. துக்ளக்கை மோசமான அரசனாகச் சொல்வார்கள். இவ்வகை அரசியல் கட்சிகளின் ஆட்சியை என்னவென்று சொல்வது? பெரிய கட்சிகளின் அரசியல் பேரமே வேறு. அவர்கள் விஞ்ஞான ஊழல் செய்வார்கள். இவர்களை எல்லாம் எப்படித்தான் ஒழித்துக் கட்டுவது ? எப்படி ஆப்பு அடிக்கலாம்?

அதற்கு ஒரு வழி இருக்கிறது. ஜன நாயகச் சட்டப்படி அது தவறு. ஆனால் எவன் சட்டத்தினை மதிக்கிறான்கள். ஆகையால் தொடர்ந்து படியுங்கள். எப்படி என்று சொல்கிறேன். ஊர் ஒன்று கூடி ஓட்டுக்கு இரண்டு லட்ச ரூபாய் என்று மொத்தமாக கணக்கிட்டு போட்டியிடும் இரு கட்சியினரிடம் மொத்தமாக வாங்கி விட வேண்டும். ஒரு குடும்பத்தில் இரண்டு ஓட்டுகள் இருந்தால் நான்கு லட்ச ரூபாய் எளிதில் கிடைத்து விடும். அதை வைத்து இன்னபிற காரியங்களை செய்து கொள்ளலாம். அப்படி பணம் வாங்குவது தப்பு என்று தர்மம் பேசினால் சும்மா ஓட்டுப் போட்டாலும் அரசியல்வாதி பத்தாயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடிப்பான். ஆகையால் புத்திசாலித்தனமாக வாங்கிக் கொண்டு அவனைக் கொள்ளை அடிக்க விடுவது சாலச் சிறந்தது என்கிறேன். இப்படி ஏதாவது அதிர்ச்சி வைத்தியம் செய்தால் ஆட்சி கலைப்பு என்ற பிரச்சினைக்குள் அரசியல் கட்சிகள் நுழையவே மாட்டார்கள். அடிக்கடி தேர்தல் வந்தால் மக்களுக்கு பணம் கொடுத்தால் தான் ஜெயிக்க முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டால் உதிரிக்கட்சிகளும் காணாமலே போய் விடுவார்கள். ஜாதிக் கட்சிகளும் ஒழிந்து போய் விடும். பொது மக்கள் சற்று சுதாரித்து ஒன்று கூடி ஆப்பு அடிக்க ஆரம்பித்தால் அரசியல்வாதிகள் கதி கலங்கிப் போய் விடுவார்கள். ஆனால் செய்ய விட மாட்டார்கள். அரசியல்வாதி அந்த அளவுக்கு முட்டாளா என்ன ? அவன் மக்களை பகுதி பகுதியாக பிரித்து அல்லவா வைத்திருக்கிறான்.

டோக்கன் வழங்குகிறார்கள் பிரியாணி சாப்பிட. மகளிர் உதவிக் குழுக்களை அரசியல் கூட்டங்களுக்கு வராவிட்டால் லோன் தரமாட்டோம் என்று மிரட்டுகிறார்கள். ஓட்டுப் போட்டு என்னை ஜெயிக்க வைத்து விடுங்கள். அதன் பிறகு மனை என்ன கார் கூட தருவேன் என்கிறாராம் ஒருவர். இதற்கெல்லாம் எங்கேயிருந்து பணம் வருகிறது என்று கேட்டால் வொயிட்டாக 5000 கோடிகள் இருக்கின்றன என்று சொல்கிறாராம் அந்த வேட்பாளர். வார இதழ் ஒன்றில் கட்டம் கட்டி செய்தி வெளியிட்டு இருக்கின்றார்கள். டோக்கனுக்கும், கைக்கடிகாரத்திற்கும், பிரியாணிக்கும், குவார்ட்டருக்கும் வெகு மலிவாக விலை போகிறார்கள் தமிழர்கள். ஒரு காலத்தில் கங்கை வரை சென்று, கடலாடி, நாடு விட்டு நாடு வியாபாரம் செய்து, எண்ணற்ற காவியங்களையும், உலக மறைகளையும் எழுதிய தமிழ் இனம் இன்று டோக்கனை எதிர்ப்பார்த்து நிற்பது கேவலம்.. கேவலம்.. கேவலம்.

மேற்படி கட்டுரை எழுத உந்துதலாய் இருந்தது : சில்லறை மாற்ற காசு கொடுத்து வாங்கிய நக்கீரன் இதழ்.


Follow

Get every new post delivered to your Inbox.

Join 108 other followers