நேற்றைக்கு தமிழ் சினிமா இயக்குனர்கள் சங்கத்தில் மீட்டிங் நடைபெற்றதாம். கூட்டத்தில் பேசப்பட்டத்தில் முக்கியமான விஷயம், எந்த இயக்குனரின் மீதாவது கிரிமினல் கேஸ் போடப்பட்டால் அவரின் இயக்குனர் அடையாள அட்டையை திரும்பப் பெறுதல் என்பது ஒரு அம்சம். யாரோ ஒரு இயக்குனர் கார்டை வைத்து காசு வாங்கி விட்டாராம். இன்னொருவர் கார்டை வைத்து சிலிண்டர் வாங்கி விட்டாராம். உடனே மாரல் போலீஸ் வேலையில் இறங்கி விட்டார்கள் இவர்கள் என்கிறார்கள்.
கிரிமினல்கள் மேல் நடவடிக்கை எடுப்பது காவல்துறை வேலை. அதை ஏன் இயக்குனர்கள் சங்கம் எடுக்க நினைக்கிறது என்று தெரியவில்லை என்று புலம்பினார் ஒரு உதவி இயக்குனர். சினிமாவிலிருக்கும் இருபத்து நான்கு சங்கங்களில் இயக்குனர்கள் சங்கமும், தயாரிப்பாளர்கள் சங்கமும் தான் சரியாகச் செயல்படவில்லை என்கிறார்கள். மற்ற சங்கங்கள் அனைத்தும் சங்க உறுப்பினர்களுக்கு நல்ல முறையில் உதவி செய்கிறது என்கிறார்கள்.
மற்றொரு உதவி இயக்குனர் பேசும் போது, ஆயிரம் பேரிடம் படுத்த விபச்சாரிகள் ஒன்று சேர்ந்து எப்படி தம் கற்பை காப்பாற்றிக் கொள்வது என்று கூட்டம் போட்டுப் பேசுவது போல இருக்கிறது என்றார். அதாவது ஏற்கனவே ஆயிரம் பேரைப் பார்த்தாகி விட்டது. அவள் கற்பைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது? இப்படித்தான் இருக்கிறது இவர்கள் கூட்டம் போட்டுப் பேசுவது என்கிறார் ஒரு இயக்குனர்.
ஒவ்வொரு அசிஸ்டண்ட் இயக்குனரும் என்ன பாடுபடுகிறார்கள் என்று சினிமாவில் இருப்போருக்குத் தெரியும். படாதபாடுபட்டு ஒரு படத்தை இயக்கி விட்டு, கார்டை வைத்துக் கொண்டு சொரிந்து கொண்டுதான் இருக்கலாம் என்கிறார் ஒரு உதவி இயக்குனர்.
புது இயக்குனர்களுக்கு இப்போதெல்லாம் இயக்குனர் கார்டு கொடுப்பதே இல்லையாம். கிட்டத்தட்ட 400 பேருக்கும் மேல் பணம் கட்டி விட்டு காத்துக் கொண்டிருக்கின்றார்களாம். இயக்குனர் சங்கத்தில் புரளும் ஏகப்பட்ட பணத்தை வைத்து கும்மி அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று புலம்புகின்றார்கள். சில இயக்குனர்கள் சரி செய்யலாம் என்று இறங்கி விட்டு, போதும்டா சாமி என்று அலறி அடித்துக் கொண்டு ஓடி விட்டார்களாம்.
இயக்குனர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் தமிழ் சினிமாக் கலைஞர்களை கேலிக்கூத்தாக்கி வருகின்றார்கள். இந்த இரு சங்கத்தினையும் சரி செய்தாலே தமிழ் சினிமா ஆரோக்கியமான வளர்ச்சிப்பாதையில் நடைபோடும் என்கிறார்கள்.
உண்மையா?
- அனாதி
தமிழ் சினிமாவை இப்படிப்பட்ட சங்கங்கள் ஆட்டி வைப்பது அயோக்கியத்தனமானது என்பது எங்கள் கருத்து. யார் வேண்டுமானாலும் படமெடுக்கலாம், நடிக்கலாம் என்கிற போது, பிற விஷயங்களில் தலையிட இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இது போல சங்கங்கள் விரைவில் ஒழிக்கப்பட வேண்டும்.
அனாதி பதிப்பித்தது.
புதுடெல்லி: இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் எழுந்துள்ள போராட்டங்களின் வீச்சை சமாளிப்பதற்காக, சிங்களர்களின் பூர்வீகம் வட இந்தியாதான் என்றும், எனவே அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில்தான் இந்தியா கவலைப்பட வேண்டும்” என்றும் இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாஸம் டெல்லி ஊடகங்களுக்கு இமெயில் அனுப்பி விஷம பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.