தமிழ்சினிமா இயக்குனர்கள் சங்கம் பற்றி

மே 13, 2013

நேற்றைக்கு தமிழ் சினிமா இயக்குனர்கள் சங்கத்தில் மீட்டிங் நடைபெற்றதாம். கூட்டத்தில் பேசப்பட்டத்தில் முக்கியமான விஷயம்,  எந்த இயக்குனரின் மீதாவது கிரிமினல் கேஸ் போடப்பட்டால் அவரின் இயக்குனர் அடையாள அட்டையை திரும்பப் பெறுதல் என்பது ஒரு அம்சம். யாரோ ஒரு இயக்குனர் கார்டை வைத்து காசு வாங்கி விட்டாராம். இன்னொருவர் கார்டை வைத்து சிலிண்டர் வாங்கி விட்டாராம். உடனே மாரல் போலீஸ் வேலையில் இறங்கி விட்டார்கள் இவர்கள் என்கிறார்கள்.

கிரிமினல்கள் மேல் நடவடிக்கை எடுப்பது காவல்துறை வேலை. அதை ஏன் இயக்குனர்கள் சங்கம் எடுக்க நினைக்கிறது என்று தெரியவில்லை என்று புலம்பினார் ஒரு உதவி இயக்குனர். சினிமாவிலிருக்கும் இருபத்து நான்கு சங்கங்களில் இயக்குனர்கள் சங்கமும், தயாரிப்பாளர்கள் சங்கமும் தான் சரியாகச் செயல்படவில்லை என்கிறார்கள். மற்ற சங்கங்கள் அனைத்தும் சங்க உறுப்பினர்களுக்கு நல்ல முறையில் உதவி செய்கிறது என்கிறார்கள்.

மற்றொரு உதவி இயக்குனர் பேசும் போது, ஆயிரம் பேரிடம் படுத்த விபச்சாரிகள் ஒன்று சேர்ந்து எப்படி தம் கற்பை காப்பாற்றிக் கொள்வது என்று கூட்டம் போட்டுப் பேசுவது போல இருக்கிறது என்றார். அதாவது ஏற்கனவே ஆயிரம் பேரைப் பார்த்தாகி விட்டது. அவள் கற்பைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது? இப்படித்தான் இருக்கிறது இவர்கள் கூட்டம் போட்டுப் பேசுவது என்கிறார் ஒரு இயக்குனர்.

ஒவ்வொரு அசிஸ்டண்ட் இயக்குனரும் என்ன பாடுபடுகிறார்கள் என்று சினிமாவில் இருப்போருக்குத் தெரியும். படாதபாடுபட்டு ஒரு படத்தை இயக்கி விட்டு, கார்டை வைத்துக் கொண்டு சொரிந்து கொண்டுதான் இருக்கலாம் என்கிறார் ஒரு உதவி இயக்குனர்.

புது இயக்குனர்களுக்கு இப்போதெல்லாம் இயக்குனர் கார்டு கொடுப்பதே இல்லையாம். கிட்டத்தட்ட 400 பேருக்கும் மேல் பணம் கட்டி விட்டு காத்துக் கொண்டிருக்கின்றார்களாம். இயக்குனர் சங்கத்தில் புரளும் ஏகப்பட்ட பணத்தை வைத்து கும்மி அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று புலம்புகின்றார்கள். சில இயக்குனர்கள் சரி செய்யலாம் என்று இறங்கி விட்டு, போதும்டா சாமி என்று அலறி அடித்துக் கொண்டு ஓடி விட்டார்களாம்.

இயக்குனர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் தமிழ் சினிமாக் கலைஞர்களை கேலிக்கூத்தாக்கி வருகின்றார்கள். இந்த இரு சங்கத்தினையும் சரி செய்தாலே தமிழ் சினிமா ஆரோக்கியமான வளர்ச்சிப்பாதையில் நடைபோடும் என்கிறார்கள்.

உண்மையா?

- அனாதி

 தமிழ் சினிமாவை இப்படிப்பட்ட சங்கங்கள் ஆட்டி வைப்பது அயோக்கியத்தனமானது என்பது எங்கள் கருத்து. யார் வேண்டுமானாலும் படமெடுக்கலாம், நடிக்கலாம் என்கிற போது, பிற விஷயங்களில் தலையிட இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இது போல சங்கங்கள் விரைவில் ஒழிக்கப்பட வேண்டும்.


குஞ்சுவிற்கு குஷி தரும் வீடியோ

மே 7, 2013

வெகு நாட்கள் ஆகிவிட்டன. நேரமில்லாமை. மேலும் பலப்பல  வேலைகள் வந்து கொண்டே இருக்கின்றன. அனாதி படுபிசியாகி விட்டான். பிற நண்பர்களோ வெளி நாடுகளுக்குச் சென்று விட்டார்கள். ஆகவே தொடர்ந்து எழுத இயலவில்லை. முடிந்த வரைக்கும் எழுத முயல்கிறேன்.

எனக்கு அடிக்கடி சோர்வாக இருக்கும் போதெல்லாம் இந்த வீடியோவைப் பார்த்து குஷியாகி விடுவேன். அனாதியில் பதிவேதும் இல்லாத காரணத்தால் சோர்வடைந்திருக்கும் வாசகர்களுக்கு இந்த வீடியோ இலவசம்.

- குஷியுடன் குஞ்சு

வீடியோவைப் பார்க்கை குஷியைக் கிளிக் செய்யவும்

குஷி


பாரதப் பிரதமர் மோடி இலங்கையில் மலரபோகும் சுயாட்சி

ஏப்ரல் 14, 2013

எனது நண்பரொருவர் மெட்டீரியல் வாழ்க்கையினின்று தனியே தாமரை இலைத் தண்ணீர் போல வாழ்பவர். அவரைக் காணச் செல்வதுண்டு. இப்படியான ஒரு நாளில் அவர் என்னிடம் சொன்னதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

பாரதி ஒரு சித்தன். அவனைப் போல சிவனைப் பற்றி எவரும் விவரித்திருக்க முடியாது என்றார். இதோ பாடல்

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ? இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்; இந்தக் காட்சி நித்தியமாம்.

- பாரதியின் இப்பாடலை ஒரு நிமிடம் படித்துப் பாருங்கள். சிவனைப் பற்றி அவனின் பாடல் புல்லரிக்க வைக்கிறது இல்லையா?

அடுத்து அவர் சொன்னது தான் ரகளை.

மோடி பாரதத்தின் அடுத்த பிரதமர் ஆவார். அவரின் ஆட்சியில் இலங்களையில் மா நில சுயாட்சி மலரும் என்றார். இதற்கு கொஞ்ச நாள் ஆகும் என்றாரவர்.

பொறுத்திருப்போம். காத்திருப்போம்.

- அனாதி


உரசல்

ஏப்ரல் 7, 2013

எண்ணெயில் விழுந்து பொறித்த நான்கு பணியாரங்கள் அது (அங்கே) உப்பலான பணியாரங்கள் உரசும் உரசலைப் பார்த்து விட்டு, குஞ்சு குஷியாகி கும்மாளமிடுகிறான். இதோ உங்களுக்காக ஒரு பாடல். உரசல்னா உரசல் அப்படி ஒரு உரசல். என்னமா தேய்க்கிறாய்ங்கன்னு பாருங்க. ஃப்ளோர் கொதிக்குதுல்ல.

https://www.youtube.com/watch?v=NrDoSkEXZ8U

இப்போதும் தான் படமெடுக்கின்றான்கள் லூசுப் பசங்க.

பாக்கியராஜ் மாதிரி எவனாது படம் எடுக்கின்றானா? எல்லாம் தொங்கிப் போன பயலுக படமெடுத்தா உருப்படுமா? குஞ்சலி அம்மா, இப்போது அதிகாரமுள்ள ஆள் ஒருவரின் மொத்த குத்தகையில் இருக்கின்றாராம். நான் தான் அடுத்த அந்த அமைச்சர் என்கிறாராம். எனது ஃப்ரண்ட் ஒருத்தன் சீரியசா லவ்வடித்து காசைக் கொண்டு போய் கொட்டிக் கொண்டிருந்தான். அவனுக்கு ஞானயுபதேசத்தை அனாதியின் பங்களா அருகில் குஞ்சலியும் அதிகாரமும் அடித்த ரகசியக் கூத்தைக் காட்டி உபதேசத்தை வழங்கினான் அனாதி. நண்பன் அதிரிபுதிரியாகி பேயடித்தது போல திரிந்து கொண்டிருக்கிறான். விரைவில் பத்திரிக்கைகளில் தொழிலதிபரின் மகன் திருமணம் என்ற புகைப்படம் வெளிவரும்.

பசங்களா ! சொல்லுவதைச் சொல்லி விட்டேன். புரிஞ்சுக்கோங்க.

குஞ்சுகளா, குட்டிகளா படம் பார்த்து இளித்து விட்டுச் சென்று விடுங்கள். இல்லையென்றால் இப்படித்தான் ஆகும்…

- குஞ்சு


இலங்கை இந்தியாவின் மாநிலமாகுமா?

மார்ச் 27, 2013
சிங்களர்களின் பூர்வீகம் வட இந்தியாவாம்: இலங்கை தூதர் கரியவாஸம் விஷமப் பிரசாரம்

புதுடெல்லி: இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் எழுந்துள்ள போராட்டங்களின் வீச்சை சமாளிப்பதற்காக, சிங்களர்களின் பூர்வீகம் வட இந்தியாதான் என்றும், எனவே அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில்தான் இந்தியா கவலைப்பட வேண்டும்” என்றும் இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாஸம் டெல்லி ஊடகங்களுக்கு இமெயில்  அனுப்பி விஷம பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் கடந்த 21 ஆம் தேதி இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாகவே, டெல்லியில் பிரசாத் கரியவாஸம்,  இலங்கைக்கு சாதகமான ஆதரவை இந்திய ஊடகங்கள் மூலம் பெறும் முயற்சியில் ஈடுபட்டார்.

இது தொடர்பாக பிரசாத் கரியவாஸத்தின் இ-மெயில் முகவரியில் இருந்து இலங்கையை தலைமையிடமாக கொண்ட தனியார் ஊடக மக்கள் தொடர்பு நிறுவனத்துக்கு, கடந்த 19 ஆம் தேதி, இந்த இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் மூலம் இந்த இ-மெயில் டெல்லியில் உள்ள ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதில், “சிங்களர்கள் வட இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள். 12 சதவீத தமிழ் மக்களுக்காக இந்தியா கவலை கொள்கிறது. ஆனால் இலங்கையில் உள்ள 75 சதவீத சிங்கள சமூகத்தினர் ஒடிசா மற்றும் வடஇந்தியா மாநிலங்களை சேர்ந்தவர்கள். அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில்தான் இந்தியா கவலைப்பட வேண்டும்” என்று அவர் விஷமத்தனமாக கூறியுள்ளார்.

மேலும் வடநாட்டுத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் பிரசாத் கரியவாஸம் ரகசியமாக இந்த பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இலங்கை தூதர் பிரசாத் கரியவாஸத்தின் இந்த விஷம பிரசார இ-மெயில் டெல்லியில் உள்ள ஊடகங்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் பணியாற்றும் வெளிநாட்டு தூதர்கள் உள்நாட்டு அரசியல் நடவடிக்கையில் பிரச்னை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்ற கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளது. அதையும் மீறி இலங்கை தூதர் பிரசாத்கரிய வாஸம் ரகசிய பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விளக்கம் கேட்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

இது தொடர்பாக .டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா,: கரிய வாஸம் தான் ஒரு வெளிநாட்டு: தூதர் என்பதை மறந்துவிட்டு அந்த நாட்டு அதிபரின் அரசியல் உதவியாளர் போல் பேசுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்னையில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுவது அவருக்கு இது முதல் முறையல்ல. சிங்களரின் பூர்விகம் பற்றி கருத்து வெளியிட்டு மறைமுகமாக, அந்த சமூகத்தினருக்கு இந்தியா ஆதரவாக இல்லை என்ற கருத்தை பிரசாத் கரியவாஸம் திணிக்க முற்பட்டுள்ளார். அவரது பேச்சும், செயலும் உள்நோக்கம் கொண்டது என்று சந்தேகிக்கிறோம். அவரை நேரில் அழைத்து மத்திய அரசு விளக்கம் கேட்க வேண்டும்” என்றார்.

நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும்: வைகோ 

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,”இலங்கையின் நாகரிகத்தைக் காத்து வருபவர்கள் இலங்கைத் தமிழர்கள்; இலங்கை மண் தமிழர்களுக்கான உரிமை; கரியவாஸத்தின் கூற்றுக்கு வரலாற்று ஆதாரம் கிடையாது. இந்தக் கருத்தை வெளியிட்டதற்காக அவரை நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும். இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தையும் மூட வேண்டும். இலங்கைக்கு இனியும் இந்தியா தொடர்ந்து ஆதரவு அளித்தால், இந்திய ஒருமைப்பாட்டை ஒருபோதும் காப்பாற்ற முடியாது” என்று கூறியுள்ளார்.

 

http://www.vikatan.com/new/article.php?module=news&aid=13263


பிதுங்கும் குலுங்கும்

பிப்ரவரி 12, 2013

இப்படித்தான் தலைப்பினை எழுத ஆரம்பித்தேன். நன்றாக இல்லை என்பதால் வார்த்தைகளை கட் செய்து விட்டேன். பிதுங்கும் குண்டிகள், குலுங்கும் முலைகள் – இதுதான் உண்மைத் தலைப்பு.

இப்படியான ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் ஆண்களுக்கு என்ன தோன்றும்? என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். இந்திய சமூகம் செக்ஸை அமுக்கப்பட்ட ஒரு இருட்டறையாகவே இதுவரையில் வைத்திருக்கிறது. ஒரு பெண்ணின் முழு உடலை தரிசிக்கும் பாக்கியம் திருமணமானவனுக்கு மட்டுமே கிடைக்கும். ஆனால் அதற்கு முன்பே உடலை ஒட்டிய இவ்வகை டிரஸ்ஸில் ஒரு கோடாக பெண்ணின் முழு உடலைத் தரிசிக்கும் ஆண்களுக்கு உணர்ச்சிகள் கிளம்பத்தானே செய்யும்? உடைகள் என்பது உடலைப் பாதுக்காக்கத்தானே ஒழிய சாலையில் போகிறவனை வா வா என அழைப்பது இல்லை.

அது மட்டுமல்ல, பத்திரிக்கைகளிலும், டிவிக்களிலும், தினசரிகளிலும் பெண்கள் பெண்கள் என்று பெண்களை வியாபாரமாக்கி, ஆடை உரித்து கோழிகளாக்கி படம் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அனைத்தையும் அவரவர்களுக்கு கிடைத்த முறையில் பார்த்துக் கொண்டே இருக்கின்றார்கள் ஆண்கள்.

விளைவு – பாலியல் குற்றங்கள். அதுவும் கொலைகள் செய்யுமளவுக்குத் துணிகின்றார்கள்.

சமூகத்தின் சீரழிவிற்கு காரணமான கார்ப்பொரேட் கம்பெனிகளின் விளம்பர உத்தியையும், அதை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் செலுத்தும் மீடியாக்களுக்கும் தூக்குத் தண்டனை விதிக்காமல் , குற்றம் செய்யத் தூண்டுபவர்களுக்கு தண்டனை விதிக்காமல், குற்றம் செய்பவர்களுக்குத் தண்டனை என்கிற இந்தியாவின் பாலியல் குற்றத்தண்டனைச் சட்டம் அபத்தமானது.

ஒவ்வொரு பெண்களின் மனதுக்குள்ளும் புகுந்து கொண்ட நுகர்வுக் கலாச்சாரம் இன்னும் என்னென்ன விளைவுகளை உருவாக்கப்போகின்றதோ தெரியவில்லை. இதன் முடிவு எப்படி இருக்கும் தெரியுமா? சமீபத்தில் ஸ்கேம் சிட்டி என்ற ப்ரோகிராமில் பராகுவே நாட்டில் பெண்கள் எப்படி ப்ராஸ்டிடியூட் வேலை செய்து சம்பாதிக்கின்றார்கள் என்பதை விரிவாகக் காட்டினார்கள். அந்த நிலைக்கு நம் தமிழ்ச் சமூகம் மட்டுமின்றி இந்தியாவின் பெண்களும் ஆண்களும் சென்று கொண்டிருக்கின்றார்கள் என்பது நடந்து வரும் நிகழ்வுகள் காட்டி வருகின்றன.

சுய கட்டுப்பாடு இழந்து, இன்பமே வாழ்க்கை என்ற நிலைக்கு இன்றைய சமூகம் சென்று கொண்டிருக்கிறது. ஒரு டிவி நிகழ்ச்சியில் பேசிய இளைஞர்களைக் கண்ட போது அவர்கள் அடிமுட்டாள்களின் பிரதி நிதிகளாக இருப்பதைக் கண்டோம். ஆங்கிலமும், நல்ல ஸ்டைலான உடையும் இருந்தால் அவன் புத்திசாலி என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். எவ்வளவு ஒரு முட்டாள்தனமானது என்று பாருங்கள்.

எழுதி வைத்துக்கொள்ளுங்கள். தமிழகமெங்கும் இருக்கும் டாஸ்மாக் பார்களைப் போல தமிழகத்தின் ஒவ்வொரு தெருவிலும் இன்பலோகப் பெண்கள் விடுதி வரத்தான் போகிறது. பெண்கள் வீடுகளை விட்டு இவ்வகைப் விடுதிகளில் தங்கள் உடலை அம்மணமாக்கி நிற்கப் போகின்றார்கள். நுகர்வுக் கலாச்சாரத்தின் உச்சகட்டம் இன்னும் இந்தியாவில் முழு கட்டத்தை எட்டவில்லை. அது எட்டும் நாள் தூரத்தில் இல்லை.

- அனாதி


தலைவா ! கமல்ஹாசனே !

ஜனவரி 31, 2013

குஞ்சுவிடம் படம் வருமா வராதா எனக் கேட்டபோது அவன் சொன்ன பதில் “அது அவாத்துப் பிரச்சினை” என்கிறான்.

எதற்கும் அஞ்சாத, கலங்கி வார்த்தைகளை வெளியிடாத பக்குவம் அவரிடம் வந்து விட்டது. தன் வீடே போகும் நிலையில் இருப்பினும், கலங்காது பேட்டி கொடுக்கும் பக்குவம் வந்து விட்டது.

நமது பாரதப் மன்மோகன் சிங் அவர்களிடம் இருக்கும் அந்தப் பக்குவம் இவரிடம் வந்து விட்டது. அது மட்டுமல்லாமல் அவாத்து ஆட்கள் தான் இந்தியாவையே வழி நடத்தி வருகின்றார்கள் என்ற காரணத்தினாலும், அவர்கள் அனைவரும் கமலுக்கு உதவி செய்வார்கள் என்பதாலும் நம் குஞ்சு சொல்கிறான்

“தலைவா ! கமல்ஹாசனே !! வருக வருக, தமிழ் நாட்டு அரசியலுக்கு வருக “ என்று அழைக்கிறான். வேறு எந்த ஒரு நடிகருக்கும் கூடாத கூட்டம் நிச்சயம் கமலுக்கு கூடும் என்கிறான் குஞ்சு.

ஆகவே கமல்ஹாசன் அவர்கள் நிச்சயம் தமிழக அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைக்கிறோம் அனாதி நண்பர்கள் குழு சார்பாக.

- அனாதி


Follow

Get every new post delivered to your Inbox.

Join 134 other followers

%d bloggers like this: